Wednesday 19 March 2014

இதுதாங்க சனியன தூக்கி பனியன்ல போட்ட கதை...!



சிவமயமான அந்த திடீர் புகழ் நடிகருக்கும், அவரது நெருங்கிய நண்பராகவும்,


அண்ணனாகவும் இருந்த ஒல்லிப்பிச்சான் நடிகருக்கும் இப்போது அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம்.


சிவனின் அசுர வளர்ச்சி தன் மார்க்கெட்டுக்கே வேட்டு வைப்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்தாராம்.


ஒரு இயக்குனர் சிவனிடம் கதை சொல்லிவிட்டு இது ஒல்லிப்பிச்சானுக்காக எழுதின கதை, உங்களுக்கும் செட்டாகும் இன்றைய டிரண்டுல உங்க படத்துக்குதான் பிசினஸ் இருக்குன்னு சொல்லியிருக்காரு.


இந்த விஷயம் ஒல்லிப்பிச்சான் காதுக்கு போக. வளர்த்த கடா மார்புல பாயுறுதுக்கு முன்னாடியே விலகிக்குவோம்னு முடிவு பண்ணிட்டாராம்.


சிவனை வெறுப்பேத்துறதுக்காகவே வம்பு நடிகரோட ரொம்ப நெருக்கம் காட்டுகிறாராம்.

விஜய் ஆண்டனிக்கு வொர்க் அவுட்டாகாத விஜய் ராசி!



திருமணம் ஆகும் வரை தன் பெற்றோருடன் நடிகர் விஜய் குடியிருந்த வீடு சென்னை, சாலிகிராமத்தில் உள்ளது.


 திருமணத்துக்குப் பிறகு நீலாங்கரையில் குடியேறினார் விஜய். அவரது பெற்றோர் பெசன்ட் நகர் பக்கம் இடம் பெயர்ந்தனர். எனவே விஜய்யின் சாலிகிராமம் வீடு சும்மாவே பூட்டிக் கிடந்தது.


 சில மாதங்களில் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி. சில லட்சங்கள் வாடகை கொடுத்து விஜய் வீட்டுக்கு விஜய் ஆண்டணி குடியேறியதற்கு ஒரே காரணம்தான். வீட்டின் ராசி...!


இந்த வீட்டில் இருந்தபோதுதான் விஜய்க்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவர் முன்னணி நடிகரானார். அதேபோல் நமக்கும் ராசி வொர்க் அவுட்டாகி நாமும் நம்பர் ஒன்னாக மாட்டோமா என்ற எண்ணத்தில்தான் லட்சக்கணக்கில் வாடகை கொடுத்து அந்த வீட்டுக்கு வந்தார் விஜய் ஆண்டனி.


ஆனால் நடந்ததோ வேறு...! சூளைமேடு வீட்டில் இருந்தபோது கையில் ஏகப்பட்ட படங்களை வைத்துக் கொண்டு பிஸியான இசையமைப்பாளராக இருந்தார் விஜய் ஆண்டனி. விஜய்யின் வீட்டில் குடியேறிய பிறகு பட வாய்ப்புகள் குறைந்துபோனது.


இன்னொரு பக்கம் அவர் கதாநாயகனாக நடித்த சலீம் என்ற படம் வருடக்கணக்கில் அப்படியே நிற்கிறது.


இசையமைக்கும் படங்களும் குறைந்துபோனதாலும், நடித்து வரும் படம் பாதியிலேயே நிற்பதாலும் விஜய் ஆண்டனிக்கு பணப்புழக்கம் குறைந்துபோய்விட்டதாம்.


விஜய்க்கு வொர்க் அவுட்டான ராசி, நமக்கு வொர்க் அவுட்டாகவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

கானும் லாலும் என் படத்தில் நடிக்கட்டும்! - காமெடி பண்ணும் தயாரிப்பாளர்...!



பேராசை பெரும் நஷ்டம் என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஹரிதாஸ் படத்தைத் தயாரித்த டாக்டர்.ராமதாஸுக்கு மிகச்சரியாய் பொருந்தும்.


சீசெல்ஸ் என்ற வெளிநாட்டில் வசிக்கும் இந்தத் தமிழர், சில வருடங்களுக்கு முன் பல கோடிகளோடு கோலிவுட்டுக்கு வந்தார். பரத் நடித்த யுவன் யுவதி என்ற படத்தைத் தயாரித்தார். அதில் 3 கோடி நஷ்டம்.


அடுத்து சின்னத்திரை நடிகர் விஜய்ஆதிராஜ் இயக்கத்தில் புத்தகம் என்ற படத்தைத் தயாரித்தார்.


அதில் 6 கோடி காலியானது. படத்தயாரிப்பில் ஈடுபட்டதோடு நிற்காமல், வேறு தயாரிப்பாளரின் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கிய டாக்டர் ராம்தாஸ், நாகராஜசோழன் எம்.எல்.ஏ, பொன்மாலைப்பொழுது,என்றென்றும் புன்னகை ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார்.


இந்தப் படங்களினால் சுமார் 15 கோடியை இழந்தார்.

மொத்தத்தில் 25 கோடியைத் தொலைத்த டாக்டர் ராம்தாஸ் தயாரித்த படங்களிலேயே ஹரிதாஸ் என்ற படம் மட்டுமே ஓரளவுக்கு லாபம் கொடுத்தது.


இந்தப் படத்தின் ஹிந்தி ரைட்ஸை ஒன்றரை கோடிக்கு சல்மான்கான் கேட்டிருக்கிறார். மலையாள ரைட்ஸை மோகன்லால் கேட்டாராம்.


பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் அப்ரோச் பண்ணியும் ஹரிதாஸ் படத்தின் ஹிந்தி, மலையாள ரைட்ஸை விற்க மறுத்துவிட்டாராம் டாக்டர் ராம்தாஸ்.


அதற்கு அவர் சொல்லும் காரணம்..நானே இந்தப்படத்தை எல்லா மொழிகளிலும் தயாரிக்கப்போறேன்.


வேண்டுமானால் சல்மான்கானும், மோகன்லாலும் என் படத்தில் நடிக்கட்டும் என்கிறாராம்.

காமெடிப் பார்ட்டியா இருப்பார் போலிருக்கிறதே...! 

ஏ.எம்.ரத்னத்துக்கு இரண்டாவதுமுறையாக அஜித் ஏன் கால்ஷீட் கொடுத்தார்? - புதிய தகவல்கள்..!



அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு தடவை கால்ஷீட் கொடுத்தாலே கடவுளின் வரம் கிடைத்த மாதிரி என்பார்கள் தயாரிப்பாளர்கள்.


ஏ.எம்.ரத்னத்துக்கோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் அஜித். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஆரம்பம் படத்தில் நடித்த அஜித், தற்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.


இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒரு சில தினங்களில் வரவிருக்கும்நிலையில், ஏ.எம்.ரத்னத்துக்கு இரண்டாவதுமுறையாகவும் அஜித் எப்படி கால்ஷீட் கொடுத்தார்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.


அதானே எப்படி கொடுத்தார்? ஆரம்பம் படம் வெளியாகவிருந்த நேரத்தில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா ஏ.எம்.ரத்னம் பற்றி தவறான செய்திகளை பரப்பி வந்தாராம். அதாவது ஆரம்பம் படம் வெளியான அதேநாளில் ஞானவேல்ராஜாவின் ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் வெளியானது.

அப்போது தியேட்டர்களை புக் பண்ண நடந்த போட்டியில், இந்தப் படத்தோடு ஏ.எம்.ரத்னம் காணாமல் போயிடுவாரு. ஆனா நான் தொடர்ந்து படம் எடுக்கிற புரட்யூஸர். அதனால் என் படத்துக்கு தியேட்டர் கொடுங்க என்று ஏ.எம்.ரத்னம் பற்றி ஞானவேல்ராஜா செய்த பிரச்சாரம் அஜித் காதுக்கு வந்திருக்கிறது.


 நம்மை வைத்து படம் எடுத்தவருக்கு இப்படியொரு அவமானமா என்று டென்ஷனான அஜித் உடனடியாய் அந்த முடிவை எடுத்தார். சில நிமிடங்களில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாக அஜித் தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு தகவல் பறந்தது.


ஞானவேல்ராஜா செய்த தீமை ரத்னத்துக்கு நன்மையில் முடிந்திருக்கிறது. 

ஐய்யா.. டாடா, பாய்...நா டெல்லிக்கு போறேன்...! குஷ்பூ



திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள குஷ்பூ கடந்த தேர்தல் வரை சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால், இந்த முறை அவர் கட்சியில் இருக்கிறாரா?

இல்லையா? என்பதே தெரியவில்லை. அநத அளவுக்கு சத்தமே இல்லாமல் இருக்கிறார் நடிகை.


குறிப்பாக, மு.க.ஸ்டாலின் பற்றி அவர் சொன்ன சில கருத்துக்கள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


அதன் எதிரொலியாக, திருச்சியில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றபோது குஷ்பூவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் செருப்பை காட்டியும் எச்சரித்தனர்.


அதனால் அதன்பிறகு எந்தவித கருத்தும் சொல்லாமல் மெளனமான குஷ்பூ, பாராளுமன்ற தேர்தல் வருவதால் மீண்டும் பிரசார பீரங்கியாக வெளியே வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக சார்பில் இதுவரை குஷ்பூவுக்கு எந்தவித அழைப்பும் செல்லவில்லையாம்.


இதனால், கட்சி தலைமை அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த குஷ்பூ ஏமாற்றமடைந்துள்ளாராம்.


அதேசமயம், மாநில கட்சிகளில் இருந்து விடுபட்டு, அடுத்து தேசிய கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளும் யோசனையில் குஷ்பூ இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


அவர் பாஜக அல்லது ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக்கொள்ளக் கூடும் என்று பரபரப்பு செய்திகள் அரசியல் வட்டாரங்களில் புகைந்துள்ளன.

நியாயம் கேட்டு வந்த நடிகையை மிரட்டி அனுப்பிய நடிகர் சங்க நிர்வாகி..!



தென்னிந்திய நடிகர் சங்கம் பல விஷயங்களில் தங்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதாக நடிகர் நடிகைகளின் மத்தியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது..


 நடிகர் மாதவன், உட்பட பல நடிகர்களின் சம்பள பிரச்னையில் பஞ்சாயத்து நடந்தபோது நடிகர் சங்கம் நடிகர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு.


இந்நிலையில் இதோ இன்னொரு குற்றச்சாட்டு! அண்மையில் இயக்குநர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார் நடிகை மனிஷா யாதவ். இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது அந்த சம்பவம் நடந்ததால், சீனு ராமசாமி மீது கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க திட்டமிட்டிருந்தாராம் மனிஷா யாதவ்.


அதோடு, அங்கிருந்தபடியே நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். நடந்த சம்பவங்களை அவரிடம் கேட்ட நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று மனிஷா யாதவை தடுத்துவிட்டாராம்.


அதுமட்டுமல்ல, மனிஷாவை உடனடியாய் சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார். நடிகர் சங்கத்தினால் தனக்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் சென்னை வந்த மனிஷா வெறுத்துப்போய்விட்டாராம்.


கொடைக்கானலில் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது, படத்திலிருந்து உன்னை நீக்கியதற்கு நஷ்டஈடாக இரண்டு லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்குக் கிளம்பு என்று உத்தரவிட்டாராம் அந்த நிர்வாகி.


 படத்தில் பார்ப்பதுபோலவே பயமுறுத்தும்படி அவரது பேச்சு இருந்ததால், உண்மையிலேயே பயந்துபோய் பெங்களூருவுக்குக் கிளம்பிப்போய்விட்டாராம் மனிஷா யாதவ்.

பாவம்....நடிகைகள்! 

சிறப்பு கட்டுரை: தமிழ் சினிமாவில் புதிய டிரென்ட்!



சினிமாவை பொறுத்தவரையில் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு டிரென்ட் உருவாகிக் கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் காமெடி ஒரு டிரென்ட் ஆக இருந்தது!


 இதற்கு உதாரணமாக சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற பல காமெடி படங்களை சொல்லலாம்! சென்ற ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டு தமிழ் சினிமா புதிய ஒரு டிரென்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பழங்கால கலைகளான தெருக் கூத்து, நாடகக் கலை, கரகாட்டம் போன்ற கலைகள் தான் இப்போது உருவாகி வரும் சில படங்களின் மைய கரு!


இந்த வரிசையில் முதலில் வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தை குறிப்பிடலாம்! ’வெயில்’, ‘அங்காடித் தெரு’ போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களை தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய படம் ’அரவான்’. பழங்காலத்து தமிழர்களின் வாழ்க்கை முறையை சொன்ன இப்படம் வசந்த பாலனுக்கு கை கொடுக்காத நிலையில்,


இப்போது நாடகக் கலையை கையில் எடுத்து ‘காவியத்தலைவன்’ என்ற பெயரில் இயக்கி வருகிறார். நடிப்புக்கு பிருத்திவிராஜ், சித்தார்த், வேதிகா, இசைக்கு ஏ.ஆர்.ரஹமான் என பெரும் கூட்டணி அமைத்து இயக்கி வரும் இப்படம் கோலிவுட்டில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.


‘காவியத்தலைவன்’ நாடக கலையை கொண்ட படம் என்றால், ‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா இயக்கும் படம் கரகாட்ட கலையை மையமாகக் கொண்டது என்கிறார்கள்! ஏற்கெனவே கரகாட்டத்தை மைமமாக வைத்து, ராமராஜன் - கனகா நடிப்பில் கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படம் 1989-ல் வெளிவந்து


தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது பாலாவும் கரகாட்டத்தை மையப்படுத்தி படம் எடுக்கிறார்.


அடுத்து தெருக்கூத்தை மையமாக வைத்து, ‘கள்ளப்படம்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜெ.வடிவேல் இயக்கி வர, கே. இசை அமைக்கிறார். ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை ‘இறைவன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.


இந்த வரிசையில் சத்தமில்லாமல் ‘தரணி’ என்ற பெயரில் மற்றுமொரு படம் உருவாகி வருகிறது. குகன் சம்பந்தம் என்பவர் இயக்கும் இப்படம் தெருக் கூத்து கலையை மையமாக வைத்து எடுப்பதாக கூறப்படுகிறது.


இப்படி மேற்குறிப்பிட்ட படங்கள் எல்லாம் பழங்காலத்து கலைகளை மையப்படுத்தி எடுத்து வர, சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் போஸ்டரையும், டீஸரையும் பார்க்கும்போது இதுவும் பழங்காலத்து கதையை மையப்படுத்தி எடுக்கப்படுகிற படமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


இதற்கு காரணம், ‘உத்தம வில்லன்’ விளம்பரங்களில் காணப்படும் கமலின் வித்தியாசமான் மேக்-அப்புடைய தோற்றம் தமிழகத்தின் கூத்து மற்றும் கேரளாவின் பிரசத்தி பெற்ற ’தெய்யம்’ கலையை நினைவுப்படுத்துவது மாதிரி இருக்கிறது என்பதுதான்!


ஆனால் கமல் நடிக்கும் படம் என்பதால் ‘உத்தம வில்லன்’ மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களிலிருந்து மாறுபட்ட வகையில் தான் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

விஷால் லட்சுமி மேனன் காதலை வெளிச்சம் போட்டு காட்டிய பார்த்தீபன்...!



விஷாலுக்கும் வரலட்சுமிக்கும் காதல் என்பதெல்லாம் போன நூற்றாண்டோடு முடிந்த போன விஷயம். இந்த நூற்றாண்டில் அவருடைய காதலி 17 வயசே ஆன லட்சுமிமேனன் தான் என்கிறார்கள்.

தனது ‘பாண்டியநாடு’ படத்தில் லட்சுமிமேனனை ஹீரோயினாக்கிய விஷால் அடுத்த படமான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் அவரையே கமிட் செய்து விட்டார். இதுவரை தொப்புள் கவர்ச்சி கூட காட்டாத லட்சுமிமேனன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மட்டும் விஷாலுக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்திருக்கிறார். அதுபோக படத்தில் விஷால்- லட்சுமிமேனன் ஜலக்கிரீடை காட்சிகளும் உண்டாம்.

இப்படி எல்லாமே விஷாலுடன் நெருங்கிய காட்சிகளில் லட்சுமிமேனன் விரும்பி நடித்திருப்பதால் இரண்டு பேருக்குமே காதல் தீ பற்றி விட்டது என்பது தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக்.

இந்த டாபிக் ‘நான் சிகப்பு மனிதன்’ ஆடியோ பங்ஷனிலும் எதிரொலித்தது. விழாவில் பேசிய நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் தனக்கே உரிய குசும்பான பேச்சால் விஷால்- லட்சுமிமேனன் காதலை பகிரங்கப்படுத்தினார்.

விழாவில் அவர் பேசியதாவது :

ஓட்டுக்கு துட்டு குடுத்து பூத்துக்கு கூப்பிடுற மாதிரி, போகப்போக ஆடியன்ஸுக்கு காசு குடுத்து நாமளே அவங்களை தியேட்டருக்கு கூப்பிடுற நெலைமை வந்திடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு. சமீபத்திய படங்களோட ரிப்போர்ட்ஸ் எல்லாமே அப்படித்தான் சொல்லுது.

ஆனால் எங்களை மாதிரியான ஆட்களுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. அதனால் சினிமா மட்டும் தான் பண்ணித் தீரணும். அதுக்கு ஒரேவழி ரொம்ப நல்ல படம் எடுக்கணும். அது ரொம்ப கஷ்டமான விஷயம்.

இன்னொரு விஷயம் நல்ல படம் எடுத்தாக்கூட அதை எந்த விதமா புரமோஷன் பண்ணி ஆடியன்ஸ்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறதுங்கிறது தான் இருக்கிறதுலேயே ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்கு.

இந்தப் படத்துல லட்சுமிகரமான குணம் படைத்த விஷால் அவர்களும், விஷாலமான நெற்றியைப் படைத்த லட்சுமிமேனன் அவர்களும் சேர்ந்து நடிக்கிறாங்க. எனக்கு இதுவரைக்கும் துக்ளக்ல வர்ற சோவோட பதில்கள் பிடிக்கும். அரசு பதில்கள் பிடிக்கும். பாக்யராஜ் சாரோட பதில்கள் பிடிக்கும். அதுக்கு அடுத்தபடியா இப்போ லேட்டஸ்ட்டா பிடிச்ச பதில் லட்சுமிமேனனுடைய பதில் தான்.

‘ஆனந்த விகடன்’ல நீங்க விஷாலை காதலிக்கிறீங்களான்னு கேட்கிறாங்க? அதுக்கு இல்லைன்னு பதில் சொல்றாங்க, விஷால் உங்களை காதலிக்கிறாங்களான்னு கேட்கிறாங்க? அதுக்கு தெரியாதுன்னு சொல்றாங்க. இதைவிட புத்திசாலித்தனமான பதிலை யார்கிட்டேயும் எதிர்பார்க்க முடியாது.

அப்புறம் ஈர்ப்பும் காதலும் ரொம்ப அவசியமான விஷயம். காதல் இல்லேன்னா எதுவுமே செய்ய முடியாது. இப்போ நான் ஒரு டைரக்ட் பண்ணிக்கிட்டிருக்கும் போது கிட்டத்தட்ட 36 மணி நேரம் தூங்குறதில்லை; சாப்பிடுறதில்லை.வெற்றிமாறன் தனுஷை வைச்சு ஒரு படம் பண்ணிக்கிட்டிருக்கார். அவரும் கூட கிட்டத்தட்ட 24 மணி நேரம் சாப்பிடுறதில்லை; தூங்குறதில்லை. இப்படி எல்லாருமே காதலோடு தான் படம் பண்ணிக்கிட்டிருக்காங்க.

காதல் இருந்தா மட்டும் தான் வாழ்க்கை சுவைக்கும். எனவே காதலோடு இந்தப் படத்தை வரவேற்போம் என்றார் பார்த்திபன்.

எல்லாம் சரிதான் ஆனா பொண்ணு இன்னும் மேஜர் ஆகலியே..?

பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்...!



விஜயகாந்த் நடித்த அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் நவ்னீத் கவுர். இவர் பஞ்சாபில் காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏவை திருமணம் செய்துகொண்டார்.


அவர் கூறியதாவது:மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது.


சிவசேனா கட்சியை சேர்ந்த அத்சுல் எனக்கு போன் செய்து தேர்தலில் போட்டியிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுவதுடன் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்.


இது பற்றி காட்ஜ் நகர் போலீசில் புகார் செய்திருக்கிறேன். நேற்று காலை போலீஸ் நிலையத்தில் புகார் தருவதற்காக உட்கார்ந்திருந்தேன்.


அப்போது அத்சுல் எனக்கு போன் செய்து, தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தால் அதுதான் உனது கடைசி நாளாக இருக்கும் என்றார்.


சமீபத்தில் நாங்கள் இருவரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேருக்கு நேர் பேசினோம். அப்போது தனது தொகுதியில் அவர் ஆற்றிய பணி பற்றி பொதுவாக பேசினார்.


குறிப்பிட்டு பணிகளை சொல்லும்படி நான் கேட்டேன். இதையடுத்து என்னை திட்ட தொடங்கினார். நான் அரசியலுக்கு வந்ததை பார்த்து அவர் பயப்படுகிறார்.


இவ்வாறு நவ்னீத் கவுர் கூறினார். இதுபற்றி அத்சுல் கூறும்போது,அரசியல் ஆதாயத்துக்காகவும், மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவும் நவ்னீத் பொய் சொல்வதுடன், தவறாக புகார் அளித்திருக்கிறார்Õ என்றார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

உண்மையை போட்டு உடைத்த ஜெயம் ரவி ...!



சாக்லெட் ஹீரோ இமேஜை உடைக்க போராடுகிறேன் என்றார் ஜெயம் ரவி.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:


பேராண்மை, ஆதி பகவன், நிமிர்ந்து நில் என ஆக்ஷன் படங்களில் நடித்தும் சாக்லெட் ஹீரோ இமேஜ்தான் தொடர்கிறதே என்கிறார்கள். இமேஜ் வட்டத்துக்குள் நான் சிக்க விரும்பாவிட்டாலும் அந்த இமேஜ் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.


அதை உடைக்கத்தான் போராடிக்கொண்டிருக்கிறேன். காதல் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ என இரண்டு வகை கதாபாத்திரத்திலும் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


என்னைப்போல் டபுள் இமேஜ் எந்த ஹீரோவுக்கும் கிடையாது. சாக்லெட் பாய் ஹீரோதானே என்று சமுத்திரக்கனியோ, ஜனநாதனோ, அமீரோ என்னை ஒதுக்காமல் ஆக்ஷன் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று தேர்வு செய்ததே எனக்கு கிடைத்த வெற்றி.


அடுத்து ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறேன். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம்போல் இதுவும் காதல் கலந்த குடும்ப கதைதான். என்னுடன் நடித்த நடிகைகளில் எனக்கு ரொம்ப பிடித்தவர் ஜெனிலியாதான்.


 ஈகோவே இல்லாத அவரது குணம் என்னை கவரும். இதனால் மற்ற ஹீரோயின்கள் கோபப்படுவார்கள் என்று பயப்படவில்லை. இவ்வாறு ஜெயம் ரவி கூறினார். 

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரஜினி முருகனா?



தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் கமர்ஷியல் ஹீரோ சிவகார்த்திகேயன்!


இவர் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘மான் கராத்தே’.


பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாணா’.


 இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்குகிறார்.


இந்தப் படத்திற்கு பிறகு ஹிட் அடித்த, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேன்.


இந்தப் படத்திற்கு ’ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்திருப்பதாக சில இணையதளங்களில் செய்தி வெளியாக, அது பற்றி நாம் விசாரித்ததில்’ரஜினி முருகன்’ என்ற டைட்டில் பரிசீலனையில் இருக்கிறதே தவிர இன்னும் முடிவாகவில்லையாம்.


ஆனால், ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு இந்த டைட்டில் மிகவும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வத்திக்குச்சியிலிருந்து குத்தூசிக்கு மாறியிருக்கும் திலீபன்...!



அஞ்சலியோடு ஜோடியா இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது.


பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு பிறகு திலீபன் தற்போது குத்தூசி திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.


லஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் எம். தியாகு தயாரிக்க சீனுராமசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த சிவசக்தி, தற்போது குத்தூசி திரைப்படத்தை இயக்கிவருகிறாராம்.


மேலும் இப்படத்தை பற்றி பேசிய திலீபன் வத்திக்குச்சி படத்திற்கு பிறகு நிறைய கதை கேட்டேன் என் மனதிற்கு பிடித்தது போல் அமைந்தது குத்தூசி திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.


பிடிச்சது இருக்கட்டும் திலீபன் நடிச்ச படம் பெயர்கள் வத்திகுச்சி, குத்தூசி எப்படி சார் உங்களுக்கு மட்டும் இப்படி பேர் அமையது.
இத நா கேட்கலங்க நம்ம சினிமா வட்டாரம் கேட்கறாங்க.

இவர் இயக்குனர் முருகதாசின் தம்பியுமாவார்..

தாதாவாகவும் ,ஐ.டி.இளைஞனாகவும் காட்சியளிக்கப்போகிறார் சூர்யா...!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று
அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.


திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா
நடித்துவருகிறார்.


இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துவருவதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவியிருந்தன. ஆனாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே இருந்துவந்தனர் ரசிகர்கள்.


சமீபமாக பேட்டியளித்துள்ள இயக்குனர் லிங்குசாமி, அஞ்சான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.


ஒரு வேடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதாவாகவும், மற்றொரு வேடத்தில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி.இளைஞனாகவும் இவர் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுவரும் இப்படம் தற்பொழுதிருந்தே மாபெரும் எதிர்பார்ப்புக்களைக் கிளப்பிவருகிறது.



இப்படத்தில் சூர்யாவின் வேடங்கள் மிகவும் ஸ்டைலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு வேடங்களுமே வெகுவாகப் பேசப்படும்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷகிலாவா அப்படின்னா யாரு..? ப்லேட்டை மாற்றிய அஞ்சலி...!



அஞ்சலியை மீண்டும் காணவில்லை. அமெரிக்காவில் தனது தொழிலதிபர் காதலருடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் திருமணம் செய்யப் போகிறார் என்று ஊடகங்கள் சமீபமாக செய்தி வெளியிட்டு வந்தன.


இன்னும் சிலர், அமெரிக்காவில் இருக்கும் அஞ்சலி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். விரைவில் புதுப்பொலிவுடன் சினிமாவில் நடிப்பார் எனவும் பேசி வந்தனர்.


இந்த இரண்டு விடயங்களுமே அறுதியிட்டு சொன்ன ஒரு விஷயம், அஞ்சலியை காணவில்லை.


இந்நிலையில் ஹைதராபாத்தில் திடீர் பிரசன்னமான அஞ்சலி பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இயக்குனர் சொன்ன கதை பிடித்ததால் உடனே அப்படத்திற்கு கால்ஷீட் தந்ததாகவும் அந்த சந்திப்பின் போது கூறினார்.


ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.


ஷகிலாவின் சுயசரிதையில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கிறார் என்ற வதந்தி பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த செய்தியை அவர் மறுத்தார். ஷகிலாவாக நான் நடிக்கவில்லை, ஒருபோதும் நடிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்தார்.


இந்த சந்திப்பின் மூலம், ஷகிலா படத்தில் நடிக்கிறார், அஞ்சலியை காணவில்லை என்ற இரண்டு வதந்திகளுக்கும் அஞ்சலி முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படி பேசி,பேசியே பெரிய ஆளா ஆக்கிடுவாங்க...இவங்க...!



எந்த ஒரு படம் என்றாலும் அதற்கான இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் சத்யம் திரையரங்கில் நடைபெறுவது வழக்கமான ஒன்று .


சமீபத்தில் பிரம்மாண்டமாக கோச்சடையான் இசைவெளியீடும் அங்கு தான் நடைபெற்றது
இதில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார்ஸ் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்துகொண்டபோது கூட எந்த ஒரு சச்சரவும் இல்லை .


ஆனால் நேற்று முன்தினம் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திற்கு அவ்வளவு கூட்டம் சற்று பவர் ஸ்டார் நிகழ்ச்சி தான் ஏதோ அங்கு நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு கூட்டம்.


பின்பு தான் தெரிந்தது சிவகார்த்திகேயன், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கிறார் என்பதுதான்.


சொந்த ஊரான திருச்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவர்களை இவ்விழாவில் சீன் போடுவதற்காக வண்டி வைத்து இறக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.


கூட்டம் கூட்டமாக தன் சொந்த ஊர் காரர்களையே இறக்கிவிட்டு பாதுகாப்பிற்கு 10 குண்டர்களுடன் வந்து இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!!!!!!!!!!!!  

அடம்பிடித்த சசிகுமாரை அடக்கிய பாலா...!



இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரை தாடியில்லாமல் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதை விட, தாடியில்லாமல் சசிக்குமார் இல்லை என்றே கூறலாம்.


அப்படிப்பட்ட டிரிம் செய்யப்பட்ட அழகான தாடியுடன் இதுவரை தோன்றிவந்த சசிக்குமார், விரைவில் துவங்கவுள்ள பாலா படத்திற்காக தாடியை எடுக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


பெரும்பாலும் கிராமத்து மற்றும் முரட்டுக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சசிக்குமாருக்கு அவரது தாடி ஒருவகையில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.


அதே சமயம் கொஞ்சம் மாடர்ன் ஹீரோவாக இவர் நடித்த பிரம்மன் படத்திலும் கூட இவர் தாடியுடனேயேதான் நடித்திருந்தார். இப்படியாக இவர் இதுவரை கட்டிக்காத்துவந்த தாடியினை பாலாவின் படத்தில் நடிப்பதற்காகத் தியாகம் செய்யவேண்டிவந்துள்ளது.


பெரும்பாலும் பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எதேனும் ஒருவகையில் தங்களை வருத்திக் கொண்டே நடித்தாகவேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலும் சோகமான அல்லது ஏழ்மையான கதாபாத்திரங்களே பாலாவின் ஹீரோக்களாக இன்றுவரையிலும் இருந்துவந்துள்ளனர்.


பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கவுள்ள திரைப்படம் கரகாட்டக் கலையினை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.


இப்படத்திற்காகத்தான் சசிக்குமார் தாடியை எடுக்கவுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சசிக்குமாரின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கவுள்ளன.