Saturday 15 March 2014

உத்தமவில்லன் ரிலீசாகும் வரை விடமாட்டோம்...! இப்படித்தான் செய்வோம்...!



சினிமா வட்டத்தின் தற்போதைய பரபரப்பான பேச்சு உத்தமவில்லன் திரைப்படத்தை பற்றி தான்.


முதலில் ஃபஸ்ட் லுக் வெளிவந்தது, அதுக்கு பிறகுதான் ஆரம்பமானது பிரச்சனையே 'தெய்யம்' என்ற கலையின் புகைப்படத்தை பிரஞ்சு புகைப்படக்காரரிடம் இருந்து காப்பியடித்தது என்று பரவலாக பேசப்பட்டதுக்கு  தக்க விளக்கம் அளித்திருந்தார் கமல்
தற்போது இப்படத்தின் கதையும் கசிந்திருக்கிறது,

இதில் வெளிவந்துள்ள தகவல்கள் பின் வருமாறு :


உத்தமன் , மனோரஞ்சன் என்ற இரு வேடத்தல் நடிக்கிறார் கமலஹாசன் இதில் 8ஆம் நூற்றாண்டின் நாடக நடிகராக உத்தமன். இன்னொரு வேடத்தில் 21 ஆம் நூற்றாண்டின் சூப்பர் ஸ்டாராக மனோரஞ்சனாக நடித்துள்ளாராம் கமல்.


இதில் மனோரஞ்சனின் ஆசானாக பிரபல இயக்குனர் கே. பாலசந்தரும், மனைவியாக ஊர்வசியும், ஊர்வசியின் அப்பாவாக இயக்குனர் கே விஸ்வநாத் நடிக்கிறார் மேலும் ஆண்ட்ரிய மனோரஞ்சன் மீது காதல் கொள்ளும் ஒருத்தியாக நடித்துள்ளார்.


மேலும் 21ஆம் நூற்றாண்டில்  உத்தமனுக்கு மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாக விஸ்வரூபத்தில் நடித்த பூஜா குமார் நடிக்க, படத்திலும் இயக்குனராகவே நாசர் நடிக்ககிறார், ஜெயராம் ஜேக்கப் ஜக்கரியாவாக என்ற கதாபத்திரத்தில் நடிக்க அவரது  வளர்ப்பு மகளாக பார்வதி மேனன் நடிக்கிறார்.


ஜிப்ரான் இசையில், கதை, திரைக்கதை கமலஹாசன் எழுத்தில் இப்படத்தை இயக்குகிறார் ரமேஷ் அரவிந்த்.

இயக்குனர் அமீருக்கு வந்த விபரீத ஆசை...!



இயக்குனரும், நடிகருமான அமீர் ஹீரோவா நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு நடிகை ஷ்ரேயா கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன்
திரைப்படத்தின் மூலமாக மாபெரும் அறிமுகத்தைப் பெற்றவர் இயக்குனர் அமீர்.


பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பிறகு, “யோகி” படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம்இயக்குனரிலிருந்து நடிகராக உருமாறினார். யோகி படம் பெரிய அளவில் ஹிட்டடிக்காததால் மீண்டும் இயக்கத்திற்கே திரும்பினார்.


இவர் இயக்கத்தில் சமீபமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பகவன் வெளியானது. இப்படத்தினைத் தொடர்ந்து அவர் மீண்டும் நடிப்பிற்குத்
திரும்பியிருப்பதாகவும், இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தில் தமிழில் மட்டும் அமீர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், ஷ்ரேயா அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும்.

காணாமல் போன மலேசிய விமானம் சிக்னல்களை பெற்றது பிரிட்டிஷ் செயற்கைக்கோள்..!



பிரிட்டிஷ் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்மார்சாட் அதன் நெட்வொர்கில் மார்ச் 8 ந் தேதி காணாமல் போன மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 லிருந்து சிக்னல்களை பெற்றுள்ளது என்று ஒரு அறிக்கையில், இன்மார்சாட் கூறியுள்ளது.

அந்த அறிக்கையில், "வழக்கமான, தானியங்கி சிக்னல்களை கோலாலம்பூரில் இருந்து அதன் விமான பயணத்தின் போதும் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 லிருந்து இன்மார்சாட் நெட்வொர்க் பதிவு செய்யப்பட்டன.அடுத்ததாக இந்த தகவல் மலேஷியா ஏர்லைன்ஸ் பங்குதாரர் சீதாவுக்கு, வழங்கப்பட்டது," சின்குவா என்று அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

இன்மார்சாட்டால் இயக்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அமைப்பு விமானம் தொலைந்ததாக அறிவிக்கப்பட்டது குறைந்தது ஐந்து மணி நேரம் கழித்து விமானம் எம்எச்370 லிருந்து ஒரு தானியங்கி சிக்னல் பெற்றது என்று பிபிசி தகவல் தெரிவிக்கிறது.

அது பிபிசி அறிக்கையின் படி, விமானம் காணாமல் போன பிறகு ஐந்து மணி நேரம் மேலாக பறந்து இருக்கலாம் என்று அர்த்தம். இன்மார்சாட் உலக மொபைல் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் வழங்குநர் ஆகும்.

போர்டில் 239 பயணிகள் மற்றும் குழுவினர் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் மார்ச் 8 கோலாலம்பூர் இருந்து அதிகாலை எடுத்து பிறகு சுமார் ஒரு மணி நேரம் மர்மமான முறையில் மறைந்துவிட்டது.

 தென் சீன கடலில் உள்ள வியட்நாமிய கடற்கரையில் பழுதாகிவிட்டது என்று கருதப்பட்டது. விமானத்தில் 227 பயணிகள் ஐந்து இந்தியர்கள், 154 சீன மற்றும் 38 மலேசியர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அது வியட்நாம் ஹோ சி மிந் ஸிடீ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பகுதி மீது பறக்கும் போது விமானத்தின் தொடர்பு அதன் ராடர் siknaludan சேர்ந்து இழந்தது.

அனுஷ்கா சர்மாவுக்கு கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தான் சொல்லித்தருகிறாம் கோலி...!



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது வீராட் கோலியை பார்ப்பதற்காக அனுஷ்கா சர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர்.

இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார். ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோலி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றார்.

சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனர். கடந்த சில தினங்களாக காதலியுடன் ஜாலியாக இருந்து விட்டு கோலி நேற்று முன்தினம்தான் மும்பை திரும்பினார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று வங்காளதேசம் புறப்பட்டது. இதற்காக அவர் அணியுடன் இணைந்து கொண்டார்.

ஆசிய கோப்பை போட்டியில் டோனி இல்லாததால் வீராட்கோலி கேப்டனாக பணியாற்றினார். இறுதிப் போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை. தோல்வி பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர் ஆசிய கோப்பைக்கு பிறகு அனுஷ்கா சர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கெமிஸ்ட்ரி மீண்டும் ஒர்க்அவுட் ஆகிறதாம்..!



அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்ததால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட சில படங்களில் நடித்தார் நந்திதா.

அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது ராசியான நடிகையாகி விட்டார். குறிப்பாக, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதிக்கும், அவருக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருந்தது.

 அதைப்பார்த்த டைரக்டர் சீனுராமசாமி, விஷால், விஷ்ணுவைக்கொண்டு தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்துக்கு இப்போது விஜயசேதுபதியின் ஜோடியாக நந்திதாவையே புக் பண்ணியிருக்கிறார்.
இதற்கு முன்பு, இதே வேடத்துக்கு வழக்கு எண் மனீஷா யாதவைதான் புக் பண்ணியிருந்தார். ஆனால் அந்த வில்லேஜ் கெட்டப்புக்கு அவரது நடிப்பு எடுபடவில்லை என்று அவரை நீக்கி விட்டு,

இப்போது நந்திதாவை புக் பண்ணியிருக்கிறார். இதனால் அதிக உற்சாகமடைந்துள்ள நந்திதா, ஏற்கனவே வில்லேஜ் கெட்டப்புகளில் தான் ப்ரூப் பண்ணியிருப்பதால்,

 இந்த படத்தில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட்டில் ஆழக்காலூன்ற களமிறங்கி விட்டார்.

 இதனால், முந்தைய படத்தைவிட இந்த படத்தில் விஜயசேதுபதி-நந்திதாவின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகும் என்று தெரிகிறது

அப்பாவுக்கு கொடுத்த வரவேற்பை எனக்கும் கொடுங்கள்! - கேட்கிறார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான்..



தமிழில் 1990ல் மெளனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் மம்மூட்டி. அதன்பிறகு கே.பாலசந்தர் இயக்கிய அழகன், மணிரத்னம் இயக்கிய


 தளபதி, லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் என சுமார் 15 படங்களில் நடித்தார். ஆக, செண்டிமென்ட், காதல், ஆக்சன் என பலதரப்பட்ட கதைகளில் நடித்த மம்மூட்டிக்கு மலையாளத்தைப்போலவே தமிழிலும் ஒரு நல்ல இடம் இருந்து கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், தற்போது அவரது மகன் துல்கர் சல்மானும் 2012ல் செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார்.


இதையடுத்து, வாயை மூடி பேசவும் என்ற படம் மூலம் தமிழுக்கும் என்ட்ரி கொடுக்கிறார் துல்கர்சல்மான். சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியா நாயகியாக நடித்துள்ளார்.


தமிழுக்கு தான் என்ட்ரி ஆவது குறித்து துல்கர்சல்மான் கூறுகையில், என் அப்பாவுக்கு மலையாள ரசிகர்கள் மத்தியில் இருப்பது போன்று தமிழ் ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.


அதனால்தான் அங்கு பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோதும், தமிழிலும் அவர் நடித்தார். அதனால், என் அப்பாவைப்போன்று என்னையும் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படம் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன் என்று சொல்லும் துல்கர்சல்மான், நான் மலையாளியாக இருந்தபோதும் சின்ன வயதில் சென்னையில்தான் இருந்தேன்.


அந்த வகையில் நன்றாக தமிழ் பேசும் சென்னை பையன்தான் நான். மேலும், இனி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். அதனால், என் தந்தை மம்மூட்டிக்கு ஆதரவு கொடுத்தது போன்று தமிழக ரசிகர்கள் எனக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.

முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் இவர் தான்...!



முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட்.

திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய சாமிக்கண் மீது அவரது வெள்ளைக்கார அதிகாரிக்கு அளவு கடந்த பாசம்.

 அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து ஒரு சினிமா புரொஜக்டரையும் சில பிலிம் சுருளையும் கொண்டு வந்தார். பின்னர் அவர் ரிட்டையர்டாகி செல்லும்போது அதனை சாமிக்கண்ணு வின்செண்டிடம் விற்று விட்டுச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து மேலும் சில படச் சுருள்களை வரவழைத்து அந்த புரொஜெக்டரை வைத்து ஊர் ஊராக சென்று படம் காட்ட ஆரம்பித்தார்.
1914ம் ஆண்டு கோவையில் வெரைட்டி ஹால் என்ற திரையரங்கை கட்டி அதில் நிரந்தரமாக சினிமா காட்ட ஆரம்பித்தார்.

ஆக தமிழ் சினிமா திரையரங்குகளின் தந்தை அவர்தான். அவரது பிறந்த நாளை திரையரங்கு தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கான முயற்சியை ஒன்பது குழி சம்பத் என்ற படத்தை தயாரிக்கும் குழு தொடங்கியிருக்கிறது.

வருகிற ஏப்ரல் 18ந் தேதி சாமிக்கண்ணு வின்செண்டின் பிறந்த நாள். அன்றைய நாளை தியேட்டர் தினமாக அறிவித்து கொண்டாட இருக்கிறார்கள். இதில் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

புகழ்ச்சி போதை தலைக்கு ஏறியதால் குழம்பிய ஏ.ஆர்.முருகதாஸ்..!



இளையதளபதி நடிப்பில் உருவாகிவரும் படத்தினை இயக்கிவரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்படத்திற்குப் பிறகு இயக்கும் படம் குறித்து பல்வேறு வதந்திகள் உலவிவருகின்றன.


விஜய் படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்குப் படத்தினை முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும்,


 இப்படம் மெஹா பட்ஜெட் படமாக இருக்குமென்றும், இதற்காக அவருக்கு சுமார் 20 கோடிகள் சம்பளம் தரப்படவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் அடிபடுகின்றன.


அதே சமயம் சமீபத்தில் தல அஜித்தைச் சந்தித்த முருகதாஸ், மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியதாகவும், அதற்கு
அஜித்தும் உடனே கதையினை ரெடி செய்யச் சொன்னதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.


 விஜய் படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கவுள்ள படம் எது என்பது குறித்து தற்பொழுது ரசிகர்கள் குழம்பிவருகின்றனர்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படத்தின் நாயகன் தல அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனால் ஒருவேளை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள
திரைப்படம் அஜித் படமாகவும் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.


இதுகுறித்து அவரே விளக்கமளிக்கும் வரையிலும் வதந்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கும்.

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டது : தேடுதல் அதிகாரிகள்



காணாமல் போன விமானத்தின் விதியைப் பற்றி அறிய தேடுதல் நடவடிக்கையின் இரண்டாம் வாரத்தில் நுழையும்போது என்ன நடந்தது என்பது பற்றிய குழப்பம் தொடர்கிறது.

அண்மைய ஆய்வுகள் முன் விமானம் பறக்கும் நேரத்தில் எரிபொருள் வெளியே வந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. விமானத்தின் மூலம் கடைசி தொடர்பு தென் சீன கடலில் பறக்கும் போது, விமானம் விடுபட்டதாகக் கூறப்படுகிறது அது ராடார் தொடர்பு இழந்த பிறகு மணி செயற்கைக்கோள்களுக்கு சிக்னல்களை அனுப்பி இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றன.

அது விமானம் தெற்கு நோக்கி திரும்பி, இந்திய பெருங்கடலில் பறந்து அங்கு இருந்து வடமேற்கு திசையில் பயணம் செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது.

வழக்கு விசாரணை நடத்தும் மலேசிய அதிகாரிகள் எனினும், விமானம் எங்கே போனது என்பது இன்னும் தெளிவாக இல்லை, பின்னர் விமானத்தை கடத்தப்பட்டது என்ற முடிவுக்கு நிச்சயமாக சென்றது.

239 பேர் பயணித்த காணாமல் போன மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 விமானம் அபகரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதாக, மலேசிய அதிகாரிகள் கூறினார்.

வாய் மூடி பேசவும் படத்தின் கதை இதுதான்!!!



பனிமலை என்னும் மலை நகரில் ஊமை காய்ச்சல் என்னும் கற்பனை நோய் ஒன்று பரவுகின்றது. அதனால் மக்கள் தங்கள் குரலை இழக்கின்றனர்.


உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் பேசினால் தீர்க முடியும் என நம்புபவன் அரவிந்த் (துல்கர் சல்மான்). பேசுவதென்றால் அறவே பிடிக்காதவள் அஞ்சனா (நஸ்ரியா). இந்த ஊமை காய்ச்சலால் இவர்கள் இருவரின் வாழ்கை முற்றிலுமாக மாறுகின்றது.


இப்படத்தின் மையக்கரு இன்றைய தேதியில் மக்கள் யாரும் சரியான முறையில் பேசுவதில்லை, கருத்துகளை சரியாக பரிமாறிகொள்வதில்லை என்ற காரணத்தால் உண்டாகும் தனிநபர் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள்மற்றும் அதன் விளைவுகளும்.

இதை போல பனிமலையில், தெளிவற்ற பேச்சினால் வரும் பிரச்சனைகளை கொண்ட சில கதாபத்திரங்களின் கதைகளும் இதிரைபடத்தினுள் அடக்கம்.


• காதலில் சொதப்புவது எப்படி வெற்றிபடத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாஜிமோகன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் வாயை மூடி பேசவும்.


• மலையாளம் Megastar மம்மூட்டி அவர்களின் மகன் Dulquer Salmaan தமிழில் அறிமுகமாகும் முதல் படம்.


• துல்கர் சல்மான் இப்படத்தில் door to door sales man ஆக நடித்துள்ளார்


• துல்கர் நஸ்ரியாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்


• நஸ்ரியா டாக்டர் ஆக நடித்துள்ளார்


• நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுபாலா இப்படத்தில் முக்கியமான கதாபத்திரம் ஏற்று நடித்துள்ளார். இருவர் படத்திற்கு பிறகு மதுபாலா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடதக்கது.


• இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராக்கபட்டது


• Dulquer salmaan, Nazriya இருவரும் தாங்களே தமிழுக்கு dub செய்துள்ளனர்


• பண்டிராஜன்அவர்கள் இப்படத்தில் சுத்தம் சுகாதாரதுறை அமைச்சராக நடித்துள்ளார்


• இப்படத்தை புதிய நிறுவனமான Radiance Media வருண்மணியன் மற்றும் Ynot சஷிகாந்த் இனைந்து தயாரித்துள்ளனர்


• இயக்குனர் பாலாஜி மோகன் “காதலில் சொதப்புவது எப்படி” படத்திற்கு பிறகு மீண்டும் YNOT studios உடன் இணைத்துள்ளார்


• இப்படம் முழுவதுமாக முன்னாரில் படமாக்கபட்டுள்ளது


• ஒரே scheduleலில் படம் எடுக்கபட்டது


• தொடர்ந்து 55 நாள்களில் படபிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டது


• இப்படத்தின் கதை பனிமலை என்னும் கற்பனைமலை பிரதேசத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது


• முணாரில் இதுவரையாரும் கண்டிடாத புது இடங்களில் படபிடிப்பு நடந்தது .


• இப்படத்தில் வினுச்சகரவர்த்தி, ரோபோஷங்கர், ஜான்விஜய், சத்யபிரியா, ரமேஷ்திலக், அர்ஜுனன், காளிவெங்கட், RJ பாலாஜி, அபிஷேக், கமலி, இவர்களுடன் படத்தின்


இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்


• இப்படத்திற்கு Sean Roldan இசைஅமைத்துள்ளார்.


• Sean Roldanக்கு வாயை மூடி பேசவும் முதல்படம்


• இப்படத்திற்கு மாற்றான் புகழ் திரு. சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்-


• மோகன் அவர்கள்கலையும், படத்தொகுப்பை அறிமுக படத்தொகுப்பாளர்
அபிநவ்சுந்தர்நாயக் செய்துள்ளனர்


• தென்இந்தியாவின் இரண்டாவது பெரியசிகரமான மீசைபுலிமலையில் பாடல் காட்சிபடமாக்கப்பட்டுள்ளது.


• படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் மற்றும் மூன்று 3 theme music tracks இடம் பெற்றுள்ளது


• இசையமைப்பாளர் sean Roldan மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் இனைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.


• மதன்கார்கி இரண்டு பாடல்களும் முத்தமிழ் இரண்டு பாடல்களும் பாலாஜி மோகன் ஒரு பாடலும் எழுதியுள்ளனர்


• இயக்குனர் பாலாஜிமோகன் அவர்கள் இப்படத்தில் செய்திவாசிப்பாளராக நடித்துள்ளார்


• இப்படத்தின் பாடல் Mastering சிட்னியில் நடைபெற்றது.


• Lady Gaga, Rihaana, Shakira போன்றவர்களின் பாடல்களை mastering செய்ததிரு Leon Zervos இப்பட பாடல்களுக்கும் mastering செய்துள்ளார்


• இசையமைப்பாளர் இரண்டு பாடல்கள் பாடி உள்ளார்


• சக்தி ஸ்ரீ கோபாலன், ஹரிசரண் ,ஆலாப் ராஜு, கல்யாணி நாயர், போன்ற முன்ணணி பாடகர்கள் பாடியுள்ளனர்


• இப்படத்தின் ஒலிப்பதிவு Auro 3d தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


• படத்தின் ஆடியோ உரிமையை Think music வாங்கியுள்ளது.


• இந்த கோடை விடுமுறைக்கு படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது


• படபிடிப்பு முடிந்த நிலையில் Post Production பணி வேகமாக நடந்து வருகின்றது.

திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலாவதி ஆயிடுமாம்...!பார்த்துகோங்க...



உடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


உடல் பருமன் பிரச்சினை இன்றைக்கு பலரையும் வாட்டி வதைக்கிறது. உடலை இளைக்க வைக்க டயட்டில் இருக்கின்றனர் பலர். உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்க முயற்சி செய்கின்றனர் ஏராளமானோர்.


ஆனால் புதிதாக திகில், திரில்லர் படங்களை பார்ப்பதன் மூலம் உடல் இளைக்கும் என்று கூறி ஆச்சரியப்படத்தக்க செய்தியை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.


90 நிமிடங்கள் திகில் படங்கள் பார்த்தால் 113 கலோரி காலியாகிறதாம். 1980ம் ஆண்டு வெளியான ‘தி சைனிங்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தால் 184 கலோரிகள் காலியாகிவிடுமாம். ‘ஜாஸ்’ படத்தை பார்த்தவர்களுக்கு 158 கலோரிகள் காலியானதாக தெரியவந்துள்ளது.


திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி!: ஆய்வில் தகவல்
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 10 திகில்படங்களை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


அவர்களின் இதயத்துடிப்பு, ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் போன்றவைகளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டது. திரில்லர் படங்களைப் பார்க்கும் போது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அவர்களின் கலோரி எரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.


திகில் படங்களினால் மனிதர்களின் நாடித்துடிப்பு அதிகரிக்கிறது இதயத்துடிப்பை எகிறுகிறது என்கிறார் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் மெக்கன்சி. இதனால் ரத்த ஓட்டம் உடலில் வேகமாக செலுத்தப்படுகிறது. தேவையற்ற கலோரிகள் காலியகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.


திகில் படம் பார்ப்பவர்கள் சீட்டு நுனிக்கு வந்து விடுவார்கள். தலைமுடி கூட சிலருக்கு குத்திட்டு நிற்கும். தலையணையை அழுத்தமாக பிடித்துக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களின் உடலில் தேவையற்ற கலோரிகளை காலி செய்கின்றனவாம்.

நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தான் லாயக்கு போ..போ...!



ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்தருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது.


 சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா பால் மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் சமுத்திரக்கனியே ஹீரோவாகவும் நடிக்கிறார்.


இதில் கிராமத்து பெண்ணாக வரும் அமலாபால் ஆடு மேய்க்கும் வேடம் ஏற்கிறார்.


மந்தையாக ஆடு மேய்க்கும்போது கையில் பிரம்பு வைத்துக்கொண்டு ஆடுகள் சிதறி ஓடாமல் மேய்ப்பது எப்படி என்ற டெக்னிக்கை சமுத்திரக்கனி அவருக்கு சொல்லித் தருகிறாராம்.


ஏற்கனவே ‘சீவலப்பேரி பாண்டி‘ படத்தில் அஹானா மற்றும் வேறு சில ஹீரோயின்கள் ஆடு மேய்ப்பவராக நடித்துள்ளனர். அந்த பட்டியலில் அமலாவும் இடம்பிடிக்கிறார்.

அப்ப என்ன ஏமாத்திட்டாங்களா..?



ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப்.


தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.


இதுகுறித்து சுதீப் கூறியதாவது:


டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான்.


நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ரவிகுமார் முடிவு செய்துள்ளார்.


ரஜினியின் உடல்நலன் கருதி நான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே ரஜினி படத்தை தொடங்க உள்ளதாக கூறினார். ஓ.கே சொல்லிவிட்டேன்.


இப்படத்தில் நான் ரஜினியின் வில்லனாக நடிக்க உள்ளதாக என்னுடைய பெயர் இணைய தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.


ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை.


ரவிகுமாருடன் எனது பட ஷூட்டிங் மே அல்லது ஜூனில் தொடங்கும். முன்னதாக ரஜினி படத்தை தொடங்குகிறார் ரவிகுமார். இவ்வாறு சுதீப் கூறினார்.

நான் தேடும் ஹீரோயின் இப்ப இல்ல... பாரதிராஜா ஆவேசம்...!



ராட்டினம் படத்தை இயக்கிய கே எஸ் தங்கசாமி தற்போது எட்டுதிக்கும் மதயான திரைப்படத்தில் மூழ்கியிருக்கிறார்.


இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசியுள்ளார் பாரதிராஜா.


ராட்டினம் என்று படத்தின் பெயரை கேட்டதும் இப்படத்தை பார்க்க தவிர்த்த பாரதிராஜா, அதன் பின்னர் மலேசியாவிலிருந்து அவரது மகள் பேசியபோது இப்படத்தை பற்றி கூறியதால் படத்தை பார்த்தேன்.


பிறகு தான் யோசித்தேன் இப்படத்தை பார்க்காமல் தவிர்த்தது எத்தனை தவறு என்று கூறியுள்ளார் பாரதிராஜா.


மேலும் தங்கசாமியை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா தற்போதைய படங்களில் லிப் மூமண்ட்கேற்ப பாடல்காட்சிகள் அமைவதில்லை என்று கூறியுள்ளார்.


பாடல் வரிகளுக்கேற்ப வடிவம் அமைப்பதில்லை சுங்கிடிச்சேலையை பற்றிய வரிகளில் மாடர்னாக வெளிநாட்டை காண்பிக்கிறார்கள் இதன் இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை.


பாடல் வரிகளை எழுதுபவர்களாவது தனது வரிகளுக்கேற்ப காட்சிகள் வேண்டுமென எடுத்து கூறியிருக்கலாம். ஆனால் அதுவும் இல்லை என தனது வருத்தத்தை தெரிவித்து புதியதலைமுறைகளுக்கு இதைபற்றி வலியுறுத்தும் விதமாக பேசினார் பாரதிராஜா.