Wednesday 12 March 2014

மைக்ரோ வேவ் சமையல் சாப்பாட்டால் - ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது...!




ஆச்சரியம் தான்பா… ரெண்டே ரெண்டு நிமிஷம்… பொறியலைச் செய்து விட்டேன்… காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்’ எவ்ளோ, “யூஸ்’ஆகுது பார்…’ என, நண்பயிடம் பெருமைப்படக் கூறுகிறீர்களா..?

“கீழே உள்ள கட்டுரையைப் படியுங்க…’ – இப்படி நாங்கள் சொல்வதற்கு முன், “அதெல்லாம் ஒண்ணுமில்லே… மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பாளர் யாராவது விளம்பரம் கொடுக்காம இருந்திருப்பாங்க… அவங்களை மடக்க, இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கீங்க…’ என்ற எண்ணம், மனதில் மிக வேகமாக மின்னி மறைகிறதா… மேலே படியுங்கள்!

மைக்ரோவேவ் ஓவன்களில், மின் – காந்த அலை, ஒரு மெலிந்த குழாய் வழியே செல்லும் போது, வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருள் மீது, மாறுதிசை மின்னோட்ட இயல்புடன் விழுகிறது. மாறுதிசை மின்னோட்டத்தின் இயல்பே, ஒரு மூலக்கூறில் உள்ள நேர் – எதிர் துருவங்களை, மாற்றி அமைப்பது தான். இதனால், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கப்படும் உணவுப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூ லக்கூறும், நேர் திசை – எதிர்திசை சுழற்சிக்கு உட்படுகிறது. ஒரு நொடிக்கு, குறைந்தபட்சம் 2,000 முறை, மூ லக்கூறுகள், சுழற்சிக்கு உட்படுகின்றன.

சுழற்சியின் போது மூலக்கூறுகள் ஒன்றின் மேல் ஒன்று மோதி, உணவில் சூட்டை ஏற்படுத்துகிறது. இந்த துருவ மாற்றம் மற்றும் மோதலால், உணவுப் பொருளின் மூலக்கூறு அமைப்பே மாறுபட்டு விடுகிறது.

அதாவது, நமக்கு “ஷாக்’ அடித்தால் உடலுக்கு என்ன ஆகுமோ, அதை போல் தான் உணவுக்கும் “மைக்ரோவேவ் ஒவனில்’ நடக்கிறது. இந்த உணவைச் சாப்பிடுவோர் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
பாதிப்புகள்…

* ரத்தத்தில் ஹீமோகுளோபன் அளவு குறைகிறது.

* உடலுக்கு நன்மை விளைவிக்கும் எச்.டி. எல்., கொழுப்பு குறைகிறது.

* ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவு அதிகரி க்கிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும், ரத்த வெள்ளை அணுவில் காணப்படும், “லிம் போஸைட்’ குறைகிறது.

* ரேடியோ கதிர்கள் ஊடுருவிய உணவுப் பொருட்களைச் சாப்பட நேர்கிறது. இதனால் புற்றுநோய் ஆபத்து ஏற்படுகிறது.

* உணவுப் பொருட்களின் சத்து குறைகிறது. மாறுபட்ட மூ லக்கூறுகளுக்கு நம் உடல் பரிச்சயப்படாததால், அவற்றை ஜீரணிக்க முடியாமல், அவை உடலிலேயே தங்குகின்றன. இதனால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
அவை:

* ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது.

* வயிறு, குடல் புற்றுநோய் உருவாகிறது. ரத்தத்தில் புற்றுநோய் செல்கள் வளர வழி வகுக்கிறது.

* உடலின் முக்கிய சுரப்பகள் செயலிழக்கின்றன. இதனால், நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. நினைவுத் திறன், கவனம், மன வலிமை, சாதுர்யம் ஆகியவை குறைகின்றன.

சூரியனிடமிருந்து கூட, மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. அவை பாதிப்பு ஏற்படுத்துவதாக யாரும் கூறவில்லையே?’ என, நீங்கள் கேட்கலாம். அவை, நேரடி மின்னோட்ட இயல்புடன், பூமியின் பரந்த பரப்பளவை அடைகின்றன. இதனால், பூமியில் காணப்படும், உயிருள்ள – உயிரற்ற எந்தப் பொருளுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை…!

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..?



செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..?

செய்தித் தாள்களை நாம் புரட்டுபோது, செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; கிராமுக்கு 100 ரூபாய்  குறைவு; எடைக்கு மட்டுமே விலை  என்றெல்லாம் பல்வேறு நகைக்கடை விளம்பரங்களை  நாம் பார்க்கலாம்.


தங்கவிலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில், எவ்வாறு இவர்களால் இவ்வாறான அறிவிப்பு செய்ய முடிகிறது என்றெல்லாம் பாமரர்கள் அறிவுக்கு எட்டாமல் புலம்பி வந்தார்கள். ஏனெனில் தங்கம் குறித்து  போதிய விழிப்புணர்வு சமுதாயத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
.

ஒரு காலத்தில் கைகளால் தூக்கி எடைபோடும் தராசு இருந்தது. அதில் சிலர் 'கை' வித்தை காட்டி எடையை கூட்டியும், குறைத்தும்  காண்பிப்பார்கள். இன்னும் சிலர் தராசின் ஒரு தட்டின் கீழ் புளியை ஒட்டி வைத்து, மக்கள் வயிற்றில் புளியை கரைப்பார்கள்.


 நாகரிக வளர்ச்சியில், எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் எல்லா கடைகளையும் ஆக்கிரமித்தது. இதில் ஓரளவு எடை சரியாக மக்களுக்கு கிடைத்தது. விடுவார்களா போலிகள்..? இதிலும் புகுந்து விட்டார்கள்.

 இந்நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் போலி  தராசு தாயாரித்ததாக  சிலர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் தயாரித்துள்ள  எலெக்ட்ரானிக் தராசுகளில், ஒரு வகை கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டு உள்ளது. இது, எடைகளை அதிகமாகவோ குறைவாகவோ காட்டும். ஒரு கிலோ எடையை 10 சதவீதம் அதிகமாகவும்,


 குறைவாகவும் காட்டும் வகையில் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையான எடை கொண்ட தராசு ரூ.10 ஆயிரத்திற்கும், தில்லுமுல்லு செய்ய உதவும் தராசை ரூ.20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து உள்ளனர்.


இந்த வகை எடை எந்திரங்களில் 4 பட்டன்கள் உள்ளன. ஒரு பட்டனை அழுத்தி எடை போட்டால், சரியான எடையை காட்டும். அடுத்த பட்டனை அழுத்தி எடை போட்டால் 50 சதவீத எடையை குறைத்து காட்டும். 3வது பட்டனை அழுத்தினால் 50 சதவீத எடையை அதிகரித்து காட்டும்.


 4வது பட்டன் வேறு ஒரு எடையை காட்டும். இவ்வாறு பலவிதமான எடைகளை காட்டும் வகையில் எடை எந்திரங்களை தயாரித்து, அவற்றை தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடைகள், ரேஷன் கடைகள், பழைய இரும்பு கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவற்றுக்கு கூடுதல் விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்.


ஏற்கனவே பெரும்பாலான ரேஷன் கடைகளில் வழங்கப்படும்  பொருட்கள் எடை குறைவாக  உள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இந்த போலி தராசு நகைக்கடை வரை சென்றுள்ளதை பார்க்கும் போது, ரேஷன் பொருள் போல, நாம்  வாங்கிய நகையும் எடை குறைவாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது.


ஏனெனில் நாம் வாங்கிய நகைகளை சிறிது காலம் கழித்து விற்பதற்காக சென்றால், நகைக்கடைக்காரர்  நமது நகையின் எடையை சொல்லும் போது, நாம் வாங்கியபோது உள்ள எடையை விட குறைவாக சொல்வார்.


அப்போது நாம் 'தேய்மானம்'  ஆகியிருக்கும்  என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வோம். ஆனால் நாம் வாங்கும்போதே எடை குறைய வாய்ப்புண்டு என்ற உண்மையை இந்த போலி தராசுகள் படம்பிடித்துக்  காட்டுகிறது.


அதிகாரிகள் போலி தராசு தயாரித்தவர்களை கைது செய்ததோடு நின்று விடாமல், அவர்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்து, அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.


ஒரு திரைப்படத்தில் பட்டுச்சேலை வாங்கசெல்லும் கதாநாயகன், ஒரு வாளியில் தண்ணீரோடும், தீப்பெட்டியோடும் செல்வார். அதுபோல ரேஷன்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை என்று இப்போது  எங்கே சென்றாலும் நாமும் ஒரு தராசுடன்தான் செல்லவேண்டும் போல் தெரிகிறது.


தாய்ப்பாலைத் தவிர அனைத்திலும் போலி. ஆண்டவன்தான் இந்த போலிகளிடமிருந்து  மக்களை காக்கமுடியும்.

நடிகர் பற்றி அவதூறு பேச்சு..பகீரங்க மன்னிப்பு கேட்டார் ரம்யா...!



சீனியர் நடிகர் அம்பரிஷ் பற்றி தவறாக விமர்சித்ததாக ரம்யா மீது புகார் கூறப்பட்டது. அதற்கு அம்பரிஷ் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது மூத்த நடிகர் அம்பரிஷ் பற்றி தவறான கருத்தை வெளியிட்டார் ரம்யா.


இதற்கு நடிகர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதுடன், ரசிகர்களும் சரமாரியாக விமர்சித்திருந்தனர். அம்பரிஷை அரசியலுக்கு கொண்டு வந்ததே எனது தந்தை மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாதான் என்று ரம்யா சொல்லியிருந்தார்.


இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பும். இது குறித்து ரம்யா கூறுகையில், அம்பரிஷ் ஏற்கெனவே ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகிய பிறகு அவரை காங்கிரசில் சேர்த்துவிட்டது  கிருஷ்ணாவும், எனது தந்தையும் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.


இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். என்னை விமர்சிக்கும் சிலர் கட்சிக்குள்ளேயே இருக்கின்றனர். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எனது கவனம் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே உள்ளது.


தேர்தல் முடியும் வரை எதைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை. வரும் 17ம் தேதி முதல் மாண்டியா தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார். 

இளையராஜாவுடன் மோதல்...! யுவன் பதற்றம் ...!



தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா.


சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.


இதையறிந்து பதற்றம் அடைந்த யுவன் தனது இணைய பக்கத்தில் கூறுகையில், நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். இந்த முடிவுக்கு என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர்.


எனக்கும் என் அப்பா இளையராஜாவுக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை என¢றார். யுவன் பற்றி அவரது நண்பர்கள் கூறும்போது,யுவன் தனது தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.


அவர் இறந்ததை பெரிய இழப்பாக எண்ணினார். பிறகு சமய குரு ஒருவரை சந்தித்தார். ஆனால் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை.


 இந்த விஷயத்தில் அவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக அவர் இஸ்லாத்தை பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு நாளும் தினமும் 5 வேளை தொழுகை செய்கிறார்.


ஸ்டுடியோவில் இருக்கும்போதும் இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார். விரைவில் தனது பெயரையும் அவர் மாற்றிக்கொள்ள உள்ளார்.  இது அவருடைய சொந்த விருப்பம். இதை அவரது குடும்ப உறுப்பினர்கள் மதிக்கிறார்கள் என்றனர்.

தல அஜித்துக்கு ஜோடி கெடச்சாச்சி...!



தல அஜித் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் இந்தியாவின் கவர்ச்சிப் புயலான சன்னிலியோன் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கலாம் என்று வதந்திகள் பரவிவருகின்றன.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இம்மாத இறுதியில் துவங்கவுள்ளன. இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் ஹீரோயின்கள் குறித்த ஊகங்களும், கிசுகிசுக்களும் பரவிவருகின்றன.

 முதலில் அனுஷ்கா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது அனுஷ்கா நடிக்கவில்லை என்றும், பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகிவருகின்றன.

முன்னதாக சிம்புதேவன் இயக்கவுள்ள இளையதளபதி விஜயின் 58 ஆவது படத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகோனேவிடம் கேட்கப்பட்டதும், பின்னர் அவர் கேட்ட இமாலய சம்பளத்தின் காரணமாக அவருக்குப் பதிலாக பிரியங்கா சோப்ராவை அணுகியதும் நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில் அஜித்- கௌதம் மேனன் இணையவுள்ள புதிய படத்தில் நடிப்பதற்கு தீபிகா படுகோனேவை படக்குழு அணுகியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை அவர் அஜித் படத்தில் நடித்தாலும் நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 இப்படத்தின் மற்றொரு முக்கியச் செய்தியாக இந்தியாவின் கவர்ச்சிப்புயலென்று வர்ணிக்கப்படும் சன்னிலியோன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை சன்னிலியோன் மற்றும் தீபிகா படுகோனே, அஜித் படத்தில் நடித்தால் இப்படத்தின் பட்ஜெட் எகிறும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஹீரோயின்கள் குறித்த இச்செய்தி இன்னும்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது....

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரகளுக்கு பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்தவதால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்?




 மனிதனின் இன்றியமையாத தேவைகளில் முதல் மூன்று இடத்தைப் பெறுபவை உணவு, உடை, உறைவிடம். இதில் முதலிரண்டு தேவைகளுக்கு பெரிதாகப் போராட வேண்டியதில்லை.

ஆனால், சொந்தமாக ஒரு வீடு என்பது நடுத்தர மக்கள் பலருக்கும் இன்று பகல்கனவாக இருக்கிறது. இந்த கனவு நிஜமாக வேண்டுமெனில் வீட்டுக் கடன் கிடைத்தால் மட்டுமே முடியும்.


 இன்றைக்கு பல வங்கிகளும் வீட்டுக் கடனை தரத் தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? அதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? வங்கிகளிடம் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?

அடிப்படைத் தகுதி!

'வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பவர் மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால் அவர் நிரந்தரமான பணியில் இருப்பவராக இருக்க வேண்டும். தனிநபராகவோ அல்லது கணவன், மனைவி அல்லது தந்தை, மகன், நெருங்கிய சொந்தபந்தம் என இருவர் இணைந்தும் வீட்டுக் கடனை வாங்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். கணவன், மனைவி என இருவர் சேர்ந்து கடன் வாங்க விண்ணப்பித்தால் இருவரின் நிகர சம்பளத்தை கணக்கில் கொண்டு கடன் தொகையை நிர்ணயிப்பார்கள். இதனை 'நெட் மன்த்லி இன்கம்’ என்பார்கள்.

வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த மூன்று வருடங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் உள்ளிட்டவைகளை முதலில் வங்கியில் கொடுக்க வேண்டும். மேலும், உங்களது வயது, சொத்து, வீடு கட்டப்போகும் அல்லது வாங்கப்போகும் இடத்தின் மதிப்பு, கடனை திரும்பச் செலுத்தும் திறன் உள்ளிட்டவற்றை வைத்து உங்களுக்கு கடன் தரலாமா என்று முடிவு செய்வார்கள்.

தேவையான ஆவணங்கள்!

சொத்து ஆவணங்கள்

விற்பனை ஒப்பந்தம், லே அவுட் பிளான் அப்ரூவல், வீடு கட்ட அனுமதி வாங்கிய ஆவணம், அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் மூலம் தரப்பட்ட சொத்தின் மதிப்பீடு, கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் என்றால் வீட்டு வசதி வாரியம் / கூட்டுறவு சங்கம் / பில்டர்களிடமிருந்து பெறப்பட்ட ஒதுக்கீட்டு கடிதம்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

வாக்காளர் அடையாள அட்டை/  பாஸ்போர்ட்/ டிரைவிங் லைசன்ஸ்/ பான் கார்டு - இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டை.

பிஸினஸ் செய்யும் நபர் எனில் அவர்கள் பிஸினஸ் செய்யும் முகவரிக்கு உரிய அடையாளச் சான்றிதழ்.

வங்கிக் கணக்கின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனை.

சொத்து மற்றும் கடன் விவரம்.

சமீபத்திய சம்பளச் சான்றிதழ்.

வருமான வரி படிவம் 16 அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரம். பிஸினஸ் செய்யும் நபர்கள் எனில் மூன்று வருட வருமான வரி தாக்கல் செய்த விவரம்.


 மார்ஜின் தொகை!

நீங்கள் கட்டப்போகும் அல்லது வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் 20-25 சதவிகித மார்ஜின் தொகையை நீங்களே போட வேண்டும். மீதித் தொகையே வங்கியிலிருந்து கடனாகப் பெற முடியும். வீடு கட்டுவதற்கான மனை ஒரு ஊரில் இருக்கிறது; உங்கள் வங்கிக் கணக்கு வேறு ஊரில் இருக்கிறது எனில், இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஊரில் வீட்டுக் கடன் பெற முடியும். அஸ்திவாரம் போட, ரூஃப் கான்கிரீட் போட, ஃபினிஷிங் செய்ய என பல்வேறு கட்டமாகத்தான் வங்கிகள் கடன் தரும். கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தால், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அனைத்தும் சரியாக இருப்பின் முழுத் தொகையும் வழங்கப்படும்.

எதற்கெல்லாம் கடன்?

வீடு கட்ட அல்லது வாங்க.

ஃப்ளாட் கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு.

வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு.

மேலும், வீடு கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகள் கழித்து மேற்கொண்டு கட்ட  டாப்-அப் லோன் பெறலாம். உங்கள் சம்பள உயர்வு மற்றும் சொத்து மதிப்பு உயர்வுக்கு ஏற்ப இந்தக் கடன் தொகை இருக்கும்.

கையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்..!



நடிகை பிரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார்.

விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை ஆயிரக் கணக்கானோர் கூடி நின்றார்கள்.


ரெயில் நிலையம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பக்கத்து ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து இருந்தார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் கூடினார்கள். அவர்கள் விமல், பிரியா ஆனந்தை பார்த்து கூச்சல் போட்டபடி இருந்தனர்


சூரி படங்களில் பேசிய காமெடி வசனத்தை சொல்லியும் கலாய்த்தார்கள். டைரக்டர் கண்ணன் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனாலும் கூச்சல் நீடித்தது. இதனால் படப்பிடிப்பை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமல், பிரியா ஆனந்த் கேரவனுக்குள் அனுப்பப்பட்டனர்.


 அப்போது ரசிகர்கள் பிரியா ஆனந்தை மறித்தனர். ஆட்டோ கிராப் கேட்டனர். சிலர் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். இன்னும் சிலர் அத்து மீறி கையை பிடித்து இழுத்து ரகளை செய்தார்கள்.


பிரியா ஆனந்த் கூட்டத்தில் சிக்கி தவித்தார். பாதுகாவலர்கள் சிரமப்பட்டு ரசிகர்கள் பிடியில் இருந்து பிரியா ஆனந்தை மீட்டு வேனுக்குள் அனுப்பி வைத்தனர். இது எனக்கு பயங்கரமான அனுபவம் என்றார் பிரியா ஆனந்த்.


டைரக்டர் கண்ணன் கூறும் போது, படப்பிடிப்பை பார்க்க சிதம்பரம், கடலூர், பகுதிகளில் இருந்தெல்லாம் ரசிகர்கள் லாரிகளில் வந்து கூடினார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் திரண்டனர். போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே ரெயில் நிலையத்தை பணம் கட்டி வாடகைக்கு எடுத்து விட்டோம். படப்பிடிப்பை நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். எனவே கஷ்டத்தை பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினேன் என்றார்.

கிரிக்கெட் ஊழலை நையாண்டி செய்யும் டைரக்டர்!



ஒரு பரபரப்பான சம்பவத்தை அதே சீரியஸ்தனத்துடன் படமெடுக்கும் டைரக்டர்களுக்கு மத்தியில் அப்படிப்பட்ட ஒரு சீரியஸான சமாச்சாரத்தை நையாண்டி, நக்கல், ஜாலிப்படமாக எடுத்து முடித்திருக்கிறார் டைரக்டர் பத்ரி.

வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு” ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி டைரக்ட் செய்திருக்கும் ஐந்தாவது படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா..

கிரிக்கெட்டில் உள்ள ஊழல் குறித்து பல தெரியாத ரகசியங்களை இதில் புட்டு புட்டு வைத்திருக்கும் பத்ரி படத்தை மட்டும் சீரியஸாக கொண்டு போகாமல் செமக் காமெடியாக கொண்டு போயிருக்கிறாராம்.

அவருடைய முந்தைய படமான ‘தில்லு முல்லு’ படத்தில் ஹீரோவாக நடித்த மிர்ச்சி சிவா தான் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தைப் பற்றி பத்ரியிடம் கேட்டபோது :

“ஒவ்வொரு விளையாட்டிலும் மைதானத்தில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார். ஜெயிக்கிறவனுக்கு கோப்பை கிடைக்கும். தோற்கிறவனுக்கு ஒன்றும் கிடைக்காது. இதுதான் விளையாட்டின் பொதுவான விதி.

ஆனால், இப்ப இந்த விதி எல்லாமே மாறிப் போச்சி. ஜெயிக்கிறவனுக்கு ‘கோப்பை ’ கிடைக்குதோ இல்லையோ, தோற்கிறவனுக்கு கட்டாயம் நிறைய பணம் கிடைக்குது. அந்த அளவுக்கு சூதாட்டமும், ஊழலும் ஒவ்வொரு விளையாட்டுலயும் எல்லா மட்டத்துலயும் பரவியிருக்கு.

முன்னாடிலாம் ஒரு டீம் , மேட்சுல தோத்துட்டாங்கன்னா எதனால தோற்றோம்னு ஆராய்வாங்க. ஆனால், இப்ப எவனால தோத்தோம்னு ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கு.

பொதுவாவே, நாம கற்பனையா ஒரு கதை எழுதி, அந்த கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து, வசனம் எழுதி அதை இயக்கி இரண்டு மணி நேர படமா காட்டுவோம். இதுல எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால், லைவ்வா நடக்கிற கிரிக்கெட் மேட்ச்சுலயே எவனோ ஒருவன் கதை எழுதறான், அதுக்குத் தகுந்த மாதிரி சில கதாபாத்திரங்கள் நடிக்குது. அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அந்த எவனோ ஒருவனே தீர்மானிக்கிறான். அப்ப, நாம லைவ்வா வெறித்தனமா பார்த்துட்டிருக்கிறதே ஒரு நாடகம்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டுங்கறது ஒரு மதம் மாதிரி. இங்க வந்து பிள்ளையார் கோயில் இல்லாத தெரு கூட இருந்துடும், ஆனால், சுவத்துல மூணு ஸ்டம்ப் வரையப்படாத தெருவே இருக்காது. அந்த அளவுக்கு கிரிக்கெட்டுங்கறது இங்க ரொம்ப ஆழமான, ஆர்வமான ஒரு விளையாட்டா சின்னப் பசங்ககிட்ட கூட பரவியிருக்கு.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுல போன வருஷத்துல சில முறைகேடுகள் நடைபெற்றதா செய்தித்தாள்ல வந்த செய்திகளையெல்லாம் படிக்கும் போது, அதையே அடிப்படையா வச்சி ஒரு கதை பண்ணால் என்னன்னு யோசிச்சி இந்த படத்தோட கதையை உருவாக்கினேன். மேல் மட்டத்துல மட்டுமே நடந்துட்டு வர்ற ‘பெட்டிங்’ என்ற இந்த ஊழலை, கிரிக்கெட்டைப் பற்றி எந்த ஒரு ஆர்வமும் இல்லாத, விவரமும் தெரியாத ஒரு சாதாரண மனிதனுக்குக் கூட புரியணும்கறதுக்காக நகைச்சுவை கலந்து இந்த படத்தோட திரைக்கதைய சுவாரசியமா அமைச்சிருக்கோம்.

‘ஆடாம ஜெயிச்சோமடா’ ங்கறது கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு, அதோடு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை கதாபாத்திரங்கள், இது எல்லாத்தையும் சேர்த்து மக்களை சிரிக்க வைக்கணும்கற ஒரே நோக்கத்தோட உருவாக்கியிருக்கிறோம்.

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சோட கடைசி ஓவர் எந்த அளவுக்கு விறுவிறுப்பாவும், ரசிக்க வைக்கிற மாதிரியாவும் இருக்கோ, அதே மாதிரி இந்த படமும் ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்கும் அதே வேகத்தோட ரசிக்கிற மாதிரி இருக்கும்.

‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா , பாலாஜி, ‘‘சென்னை 28’, அஞ்சாதே” புகழ் விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆடியோ பங்ஷன் வருகிற ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் சம்மர் ஸ்பெஷலாகவும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்

நடிகையை அவமானப்படுத்திய வில்லன் நடிகர்...!



சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:–


தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கிறார்கள். அவர்கள் வெறும் உதட்டை மட்டும் இப்படியும், அப்படியும் அசைக்கிறார்கள்.


 இதனால் வசன உச்சரிப்புகள் உயிரோட்டமாக இருப்பது இல்லை. இவர்களால் தமிழ் படங்கள் திணறுகிறது. இந்த நடிகைகளுக்கு பல லட்சங்கள் சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறது. உதட்டை மட்டும் ஆட்டுகிற இத்தகு நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அதிகம் கொடுக்க கூடாது. குறைக்க வேண்டும்.


இந்தி தெரியாதவர்களை இந்திப் படங்களில் அங்குள்ளவர்கள் நடிக்க வைப்பது இல்லை. அது போல் இங்குள்ளவர்கள் தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ‘வஞ்சகம்’ குறும்படத்தை டைரக்டர் பியாஸ்வர் ரகுமான் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகராகவும் அவர் கிடைத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, டி.சிவா, கலைக்கோட்டுதயம், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் காயல் இளவரசு, நடிகர்கள் விதார்த், விஷ்ணு, பிரியன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

இது சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றி...!!!



ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.

இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.


இதனை அவர் மறுத்தார். படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் பலன் ஏற்பட்டது.

சர்ச்சைகள் தீர்ந்து ‘நிமிர்ந்து நில்’ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அரசும் வரிவிலக்கு அளித்துள்ளது.

நியு சினிமா கார்னர்...!



வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா போன்ற படங்களை இயக்கியவர் மதுமிதா. தற்போது, எஸ்.பி.பி.சரண் கேபிடல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் 'மூணே மூணு வார்த்தை' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.


ரொமாண்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் அர்ஜுன் சிதம்பரம் மற்றும் அதிதி செங்கப்பா நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் 'சுட்டகதை', 'இரண்டாம் உலகம்' படங்களில் நடித்த வெங்கடேஷ் ஹரிநாதன் நடிக்கிறார்.


மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீனிவாசன் வெங்கடேசன், இசை கார்த்திகேய மூர்த்தி,



படத்தொகுப்பு கிரண் காந்தி, கலை மணி கார்த்திக் என அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆஹா கல்யாணம்' திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ராஜீவ் ராஜாராம் இந்தப் படத்திற்கும் வசனம் எழுதுகிறார்.


இதற்கு முன்பு கேபிடல் பிலிம்ஸ், 'உன்னைச் சரணடைந்தேன்', 'சென்னை 28', 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்', 'நாணயம்' போன்ற படங்களை தயாரித்திருக்கிறது.

மார்ச் 21 - ரிலீசுக்கு தயாரானது தல அஜித், படம்...



தல அஜித், தமன்னா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த வீரம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வருகிற மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்தது வீரம் திரைப்படம். இளைய தளபதி விஜயின் ஜில்லா


திரைப்படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதிய இப்படம் மெஹா ஹிட்டாக அமைந்தது.


தமிழில் வெளியான ஜனவரி 10 ஆம் தேதியன்றே தெலுங்கிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், சிற்சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது


தற்பொழுது இப்படத்தின் டப்பிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்திருப்பதால் இப்படத்தினை மார்ச் 21ல் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வீரம் திரைப்படத்திற்குப் பிறகு தல அஜித் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சன்னிலியோன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

த்ரிஷாவுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதானாம்...!



பண்டைய காலத்தில் ஆயுர்வேதத்தின் மூலமே, உடலில் உள்ள பல நோய்களுக்கு நிவாரணங்கள் கிடைத்தன.


 அதுமட்டுமின்றி, உடலை அழகாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ள, உடல் மசாஜைத் தான் பின்பற்றி வந்தனர்.


தற்போது என்னவென்று தெரியவில்லை, மக்கள் மத்தியில் இந்த ஆயுர்வேத மருத்துவ முறை பிரபலமாக இருப்பதோடு, பலரும் அதனையே பின்பற்றுகின்றனர்.


சொல்லப்போனால், சில நடிகைகள் கூட, தங்கள் அழகை பராமரிப்பதற்கு, இத்தகைய ஆயுர்வேத மசாஜ்களைத் தான் பின்பற்றுகின்றனர்.


அதிலும் ஆயுர்வேத மசாஜில் நவரக்கிழியை தொடர்ந்து வரும் ஸ்நேகதாரா மற்றும் ஸ்நானாதான் மிகவும் பிரபலமானது. இந்த மசாஜின் மகிமை என்னவெனில், முதலில் நவரை அரிசியை மூலிகைப் பாலில் ஊற வைத்து வடிகட்டி,


பின் அந்த அரிசியை எடுத்து லேசாக வேக வைத்து, ஒரு மஸ்லின் துணியில் போட்டு கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வடிகட்டிய மூலிகைப் பால் தொட்டு மசாஜ் செய்யப்படும்.


பின்னர் தலையிலிருந்து, கால் வரை மூலிகை எண்ணெய் ஊற்றி, நன்கு மசாஜ் செய்து, இறுதியில் நீரால் உடலை அலசிவிடப்படும்.


இந்த மசாஜால் மூட்டு வலிகள், செரிமானப் பிரச்சனை, உடல் வலி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளும் குணமாகும்.


 குறிப்பாக இத்தகைய மசாஜை நடிகைகளில் மிகவும் பிரபலமான த்ரிஷா செய்துள்ளார். இதனால் தான் என்னவோ, இன்னும் சிக்கென்ற உடலுடனும் அழகாக ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளார்.

தல ரசிகர் சூப்பர்ஸ்டார் பக்கம் போனதன் பின்ன்னி...!



கோச்சடையான் படத்தின் டீஸர் யூடியூபில் வெளியிடப்பட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் டீஸர் உற்சாகமான விமர்சனங்களை பெற்றுள்ளது.


சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் திரையுலகினர் வாழ்த்துக்களையும், அவர்களது கடின முயற்சிக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


சிம்பு ஆர்வமுடன் கோச்சடையான் விஷ்வல் மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு “Thalaivar is back” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் லதா ரஜினிகாந்த் பாடிய பாடலுக்கு பாராட்டுகளையும் சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் சிம்பு.


சிம்புவின் இந்த பாராட்டுகளுக்கு, உடனடியாக “Thank you:-) tc” என்று சௌந்தர்யா பதில் அளித்துள்ளார்.