Sunday 9 March 2014

வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..!



விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.

வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.

இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.

அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.

கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.

உதாரணமாக Tata என்பதை " Tata Group of Industries Limited" என்றோ அல்லது "Samsung Electronics India Ltd" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.

அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.

அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).

ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள் !

திருபாய் அம்பானி - உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை..!



‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார்.

 ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 28, 1932

பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா

பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்

இறப்பு: ஜூலை 06, 2002

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

வெற்றிப் பயணம்

1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

இறப்பு

மும்பையில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விருதுகளும், மரியாதைகளும்

2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, கெம்டெக் ஃபவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வோர்ல்ட் அமைப்புகள் அவருக்கு, ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர் விருதினை’ வழங்கி கௌரவித்தது.

1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டிடு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.

2001 – தி எக்கனாமிக் டைம்ஸ், பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.

இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக’ தேர்வு செய்யப்பட்டார்.

2000 – டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில்,

‘நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக’ தேர்வு செய்யப்பட்டார்.

உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

என்றென்றும் - திரைவிமர்சனம்..!



நடிகர் : சதீஷ்

நடிகை : பிரியங்கா ரெட்டி

இயக்குனர் : சினிஷ்

இசை : தரண்

ஓளிப்பதிவு : சரவணன்

நாயகி பிரியங்கா ரெட்டி சென்னையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். அங்கு இவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார். அதே பள்ளியில் பி.டி. மாஸ்டராக பணிபுரிபவர் இவருக்கு போதை மருந்து சப்ளை செய்கிறார் .

ஒருநாள் பி.டி. மாஸ்டரும், அந்த ஆசிரியையும் சேர்ந்து போதை மருந்தை உட்கொண்டு உச்சத்தில் இருக்கும்போது, பிடி மாஸ்டர் அந்த ஆசிரியையிடம் தவறாக நடக்க முயல்கிறார். அதை விரும்பாத அந்த ஆசிரியை அவரிடமிருந்து தப்பிக்க முயல்கிறாள்.

அப்போது அங்கு வரும் நாயகி அவர்களை பார்த்துவிடுகிறாள். நாயகி பார்த்ததை அறிந்த பிடி மாஸ்டர் அவளை பிடிக்க முயலும்போது அவரிடமிருந்து தப்பிச்செல்லும் நாயகி காரில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.

இந்த நிலையில் தன்மீது பாசமாக இருந்த தாய் இறந்துவிட்டதால், தன்னுடைய காதலியான நாயகியை தேடி சென்னைக்கு வருகிறார் நாயகன் சதீஷ். வந்த இடத்தில் கோமா நிலையில் நாயகி இருப்பதை அறிந்து அவளின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய முற்படுகிறான்.

இறுதியில், நாயகியின் நிலைக்கு காரணமானவனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா? நாயகியுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.

பல முன்னணி நடிகர்களுடன் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சதீஷ் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது இப்படம். இப்படத்தில் இவர் எதையோ தொலைத்துவிட்டு தேடுபவர் போல நடித்திருக்கிறார்.

அவரைப் போலவே நாமும் அவரிடமிருந்து நடிப்பை தேட வேண்டியிருக்கிறது. குறைந்த பட்சம் காதலுக்கும், சோகத்திற்கும் தேவையான முகபாவனைகளைகூட அவரிடம் காணமுடியவில்லை.

நாயகி பிரியங்கா ரெட்டி அழகாக இருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகா, திரிஷாபோல் இவருக்கென்று தனியாக ஒரு பாடல் வேறு. படத்தில் ரொம்பவும் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்.

பிடி மாஸ்டராக வரும் தீனா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தீப்பெட்டி கணேசன், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகள் வந்துபோனாலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் காதலை வலுவாக சொல்ல நினைத்திருக்கும் இயக்குனர் சினிஷ், அதற்குரிய காட்சிகளை வலுவாக வைக்க தவறியிருக்கிறார். செஸ் போர்டு, சமையலறை ஆகியவற்றையே காதலிக்கும் களங்களாக காட்டியிருப்பது அபத்தமானது.

 நிறைய காட்சிகள் ரொம்பவும் மௌனமாக செல்கிறது. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை படத்தின் நீளத்திற்காக வலுக்கட்டாயமாக புகுத்தி போரடிக்க வைத்திருக்கிறார்.

சரவணன் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுக்கிறது. ஒளியமைப்பும், பாடல்களில் தெளிவான காட்சியமைப்பும் அழகாக இருக்கிறது. தரண் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் மெருகூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘என்றென்றும்’ உற்சாகமில்லை.

மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்..!

மிஸ் கால் கொடுக்கும் பக்கிகளிடம் நாம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதை விட நாம் மாறிக்கொள்ள ஒரு முக்கிய விஷயம் வந்திருக்கு இந்தியன் மார்க்கெட்டில்.

 முக்கியமா இது நாக்டெல் இல்லை – ஆனா நாக்டெல் இதன் டெக்னிக்கல் பார்ட்னர். நீங்க ஒருத்தருக்கு கால் செய்ய ஒண்ணு காசு (பேலன்ஸ் வேணும்) இல்லைனா கால் பண்ண முடியாது. சட்டுனு ரீசார்ஜ் கிடைக்காது. இந்த தொல்லைக்காகவே ஃப்ரிகால் என்னும் புது சேவை ஒண்ணை திறந்திருக்கு ஒரு கம்பெனி.
ravi mar 7


இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற நம்பருக்கு கால் பண்ணினா உங்க கால் கட்டாகி உடனே ஒரு ரிட்டர்ன் கால் வரும். அப்புறம் உங்களுக்கு வேணுங்கிற நம்பருக்கு கால் பண்ணி பேசலாம்.

என்ன ஒண்ணு – கால் நடுவே ஒரு நிமிஷம் இருங்க, ஒரு கமர்ஷியல் பிரேக் விளம்பரத்துக்கு பிறகு பேசுங்கன்னு ஒரு விளம்பரம் வரும் அம்புட்டுதான். ( இது இந்தியாவுக்கு மட்டும் தான் வேலை செய்யும் – ஆனா இது நம்ம நாக்டெல் கனடா / அமெரிக்கா மலேஷியாவுல உட்பட 18 நாடுகளில் 2010 வருஷத்தில இருந்து இருக்கு.

இதற்க்கு பேர் கால் பேக் சிஸ்டம் (call back system) ஆனா நாங்க சார்ஜுவோம் – இங்க ப்ரீ FREE – என்ஜாய் மக்களே. இங்க போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணீ மிஸ் கால் கொடுத்து தொம்சம் பண்ணுங்க‌

 www.freekall.in

சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா..!



இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘கஹானி’ படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்துக்காக ஒரு சண்டைக்காட்சியில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா கூறும்போது,

இந்த படத்தில் ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது நயன்தாராவின் கை விரல் நகங்களை நான் கவனித்தேன். அவை மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு இருக்கக்கூடாது. இதை நயன்தாராவிடம் கூறினேன்.

அடுத்த சில வினாடிகளிலேயே அவர் தன்னுடைய நகங்களை நறுக்கிவிட்டு அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார். இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.

மேலும், இந்த படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சிக்காக அவருக்கு பதிலாக டூப் போட்டு படமாக்கலாம் என இருந்தேன்.

ஆனால் நயன்தாரா இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லிவிட்டு நடித்தார்.

அந்த காட்சியில் அவரது கடின உழைப்பின் பலன் நன்றாகவே தெரிந்தது என்றார்.

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா..?



அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.

கண் நோய்கள்

நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால், கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகியவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும்.


மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா? அப்படியெனில் 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுங்கள். இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விடுங்கள். வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்த அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


சரும நோய்கள்

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. படை நோய் இருந்தால், கொத்தமல்லி இலைகளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவலாம். தோல் தடிப்பிற்கும், அரிப்பிற்கும், புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட்டால், சரும பிரச்சனைகள் குணமாகும்.


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி

கர்ப்பத்தின் தொடக்க காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு தலைசுற்றலும், வாந்தியும் இருக்கும். இது மாதிரி நேரங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் குடித்து வர வேண்டும். இதனால் தலைச்சுற்றலும், வாந்தியும் குறையும்.

அம்மை

கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.


வாய்ப்புண்

கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது. எனவே இது வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும். மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கொழுப்புக்களை குறைக்கும்

கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கொழுப்பை நன்கு குறைப்பதால், மாரடைப்பு வருவதை பெருமளவு குறைக்கிறது.


செரிமானத்தை அதிகரிக்கும்

கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படுகிறது.