Monday 10 March 2014

என்ன வற்புறுத்தாதிர்கள் ப்ளீஸ்...சூப்பர்ஸ்டார் வேண்டுகோள்...!



ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார்.


சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார்.


ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி வேள்வி யாகம் நடத்தினார்கள்.


 சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியும் பேசினர். அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுப்பது என்றும் முடிவு செய்தனர்.


ஆனால் ரஜினி அரசியல் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதா தலைவர்கள் ரஜினி ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


 இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு ரஜினி தனது அரசியல் முடிவு பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.


பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று கூறினார்.


இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.


 ரஜினி ‘கிங்’காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது. தனுஷ் என் தந்தை போல இருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரை மணந்தேன்.

3 படத்தில் தனுசை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தேன். எனது அடுத்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றார்.

இது இரண்டாவது முறையாம்...!



சக நடிகர்களே பொறாமைப்படும் ஹீரோ என்றால் அது ஆர்யா தான்.

அந்தளவுக்கு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அப்படியே பிராக்கெட் போட்டு கொத்திக் கொண்டு போவதில் கில்லாடி . இதுவரை ஆர்யா நடித்த படங்களில் அவருடன் கிசுகிசுக்கப்படாத நடிகைகளே இல்லை.

 அது எந்த நடிகையாக இருந்தாலும் அவர்களிடம் கடைபோட்டு அவர்களை அப்படியே தன்வசப்படுத்தி விடுவார். அப்படிப்பட்ட வசியத்தில் தான் இப்போது ஆர்யாவிடம் மாட்டிக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா.

செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் சேர்ந்து நடித்த போதே இரண்டு பேருக்குள்ளும் கெமிஸ்ட்ரி ஒர்க் – அவுட்டாகி விட்டது. டைட்டிலுக்கு ஏற்ற மாதிரியே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால் ஆர்யாவும் , அனுஷ்காவும் அப்படி ஒரு காதல் மயக்கத்தில் சொக்கிப் போய் கிடந்தார்கள். படப்பிடிப்புத் தளங்களில் பலபேர் முன்னிலையில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் எப்போது மீடியாக்களை சந்தித்தாலும் இதைப் பற்றி வாயே திறக்காத ஆர்யாவும், அனுஷ்காவும் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அருகில் உள்ள ஹயாத் பைவ் ஸ்டார் ஹோட்டலில் மீடியாக்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.

நேற்று காலை சத்யம் தியேட்டரில் ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் நடந்து முடிந்ததும், நண்பகல் 12 மணிக்கு ஹயாத் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அங்கு ‘கோச்சடையான்’ படத்தின் பிரஸ்மீட் நடப்பது தெரியாத ஆர்யாவும்- அனுஷ்காவும் சுமார் 12 : 30 மணியளவில் ஜோடியாக ஹோட்டலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

புளு கலர் டிசர்ட்டும்,சாக்லேட் கலர் அரைகால் டவுசரையும் போட்டிருந்தார் ஆர்யா, அனுஷ்கா ஒயிட் கலரில் டீசர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்தார். இரண்டு பேருமே யாரையும் கண்டுகொள்ளாமல் மிக நெருக்கமாக சிரித்து சிரித்து பேசிக்கொண்டே வந்தார்கள்.

ஹோட்டலின் வாசலை விட்டு வெளியே வரும்போது இருவரிடத்திலும் ஹோட்டல் செக்யூரிட்டி ஒருவர் ஆர்வமாக ஆட்டோகிராப் வாங்கினார். அப்போது சுற்றும் முற்றும் பார்த்த அனுஷ்கா கேமராவுடன் சில போட்டோகிராபர்கள் வாசலில் நின்று கொண்டிருந்ததை பார்த்தார்.


உடனே பதட்டத்தோடு தனது கையில் உள்ள கேலக்ஸி நோட்பேடால் முகத்தை மூடிக்கொண்ட அனுஷ்கா எங்கே இருவரையும் சேர்த்து போட்டோ எடுத்து விடுவார்களோ?

என்ற பயத்தில் அருகில் நின்று கொண் டிருந்த ஆர்யாவுக்கு கண்ணாலேயே சிக்னல் கொடுத்தார். விபரீத்தை உணர்ந்த ஆர்வாவோ அனுஷ்காவை கூட்டிக்கொண்டு விறுவிறுவென்று பார்க்கிங் ஏரியாவை நோக்கி சென்று விட்டார்.

ஏற்கனவே இதே ஹோட்டலில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு பிரஸ்மீட்டில் இதேபோல ஆர்யாவும், அனுஷ்காவும் மீடியாக்களிடம் மாட்டினார்கள்.

ஆர்யா அனுஷ்காவையும் விட்டு வைக்கவில்லை என்ற கிசுகிசு கோலிவுட்டில் பரபரப்பட்ட நிலையில் நேற்று அதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நெருக்கமாக வந்து மீடியாக்களிடம் மாட்டிக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங்,முகேஷ் அம்பானிக்கு அடுத்த்தாக அமீர்கான் தான்...!



பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ரூ. 10 கோடி மதிப்பிலான ஸ்பெஷல் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.


மெர்சிடிஸ் பென்ஸ் S-600 ரக காரான இதனை இந்தியாவில் பிரதமர் மன்மோகன் சிங், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி இவர்கள் இரண்டும் பேர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இப்போது மூன்றாவதாக அமீர்கான் வாங்கியுள்ளார்.


இந்த ரக கார் மிக முக்கியமான விஐபி-களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் காராம். இது அவரது பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட பாம் ப்ரூஃப் மற்றும் புல்லட் ப்ரூஃப் கார் என்று கூறப்படுகிறது.


அமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற நிகழ்ச்சி இப்போது இந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளது.

 இந்த நிகழ்ச்சியில் பல உண்மை சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதால் அமீருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வருகிறதாம். அதனால் தான் அமீர் இந்த காரை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

வித்தியாசமான சுவையில் காபி வேணுமா? இத ட்ரை பண்ணுங்க..!



பொதுவாக காபி என்றதும் அனைவரும் பாலை கொதிக்க வைத்து, அதில் காபி தூளைப் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்போம். இல்லையெனில் கடைகளில் விற்கும் இன்ஸ்டன்ட் காபி பொடியை வாங்கி, கொதிக்க வைத்த பாலில் சேர்த்து, கலந்து குடிப்போம். இத்தகைய ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு சுவையானது கிடைக்கும்.

ஆனால் நல்ல மணத்துடன், அருமையான சுவையில் ஒரு காபி குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு இப்போது சொல்லக்கூடிய முறையானது சரியாக இருக்கும். சரி, அந்த முறை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...


தேவையான பொருட்கள்:

காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

பால் - 1/2 கப்

கொதிக்கும் நீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து, நன்கு ஸ்பூன் வைத்து, முட்டையை எப்படி அடிப்போமோ, அதேப்போல் தொடர்ந்து 4-5 நிமிடம், நன்கு நிறம் மாறி பேஸ்ட் ஆகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறக்கியதும், அந்த பாலை அடித்து வைத்துள்ள காபி தூளுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது அந்த காபியைக் குடித்தால், அது வித்தியாசமான சுவையில் இருக்கும்.

லேட்டஸ் மணப்பெண் அலங்காரம் இதுதான்



கைகளே படாமல் செய்யக்கூடிய ‘ஏர் பிரஷ் மேக்கப்‘. சரும நிறத்துக்கேற்ற ஃபவுண்டேஷனை கலந்து நிரப்பி, மெஷினை ஆன் செய்து, பெயின்ட்
மாதிரியே முகத்தில் காட்ட வேண்டியதுதான். பிசிறின்றி, ஒரே சீராகப் படியும் மேக்கப். இதிலேயே கருவளையங்களை மறைக்கலாம்.


முகூர்த்தத்துக்கு பாரம்பரிய உடை, ஜடையலங்காரம் மற்றும் சிம்பிள் மேக்கப்பே இப்போதும் விரும்பப்படுகிறது. ஹோமப் புகையிலும் வியர்வையிலும்

மேக்கப் வழியாமலிருக்க, ‘வாட்டர் ப்ரூஃப் மேக்கப்’தான் சரியானது. ‘மேக்கப் போட்டதே தெரியக்கூடாது‘ என்பவர்களுக்கு, அவர்களது சரும நிறத்தை
விட, 1 டோன் குறைவாகவும், மேக்கப் பளிச்செனத் தெரிய வேண்டும் என நினைப்போருக்கு அவர்களது சரும நிறத்தைவிட 2 டோன் அதிகமாகவும்
ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். கண்களைப் பெரிதாகக் காட்டும் ‘ஐ மேக்கப்’பை விரும்புகிறார்கள். மூக்கு குத்திக் கொள்ள

நேரமில்லாதவர்கள், கல்யாணத்தன்று மட்டும் மூக்கு குத்திய தோற்றம் பெற, மூக்கில் கல் ஒட்டிக் கொள்கிறார்கள்.

ரிசப்ஷனுக்கு புருவங்களை ஷேப் செய்யாமல் அப்படியே விடுகிறார்கள். மேக்கப் போட்டது தெரியக் கூடாது என விரும்புகிறார்கள். கன்னங்களில்
தடவும் ‘பிளஷ் ஆன்’ உபயோகிப்பதில்லை. கண்களுக்கான மேக்கப்பில் அதிக சிரத்தை எடுக்கிறார்கள். கடல் நீல நிறம், துருப்பிடித்த நிறம்,

மெட்டாலிக் ஷேடுகளில் ஐ ஷேடோ உபயோகிக்கிறார்கள். உதடுகளுக்கு டார்க் நிற லிப்ஸ்டிக்குகளை தவிர்த்து, லேசான பளபளப்புடன் கூடிய உதட்டு
நிற ஷேடுகள்தான் மணப்பெண்களது சாய்ஸ்.

மற்ற நாள்களில் குட்டை முடிதான் வசதி என கூந்தலை வெட்டிக் கொள்கிறவர்களுக்கு, கல்யாணத்தின் போதுதான் பிரச்னை! இரண்டு பின்னல்கூட

போட முடியாத குட்டியூண்டு முடியை வைத்துக் கொண்டு என்னதான் செய்ய முடியும்? ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படுகிற செயற்கை
அட்டாச்மென்ட்டுகளை வைத்து எப்பேர்பட்ட ஹேர் ஸ்டைலையும் செய்யலாம் இன்று!

மெஹந்தியில் சிம்பிள் டிசைன் விரும்புபவர்கள் அரபிக் மெஹந்தியையும், ஆடம்பரமாக வேண்டுவோர் ராஜஸ்தானி டிசைன்களையும்
தேர்ந்தெடுக்கிறார்கள். அதே மெஹந்தியை கலர் கலர் கல், மணியெல்லாம் ஒட்டி, ரிசப்ஷன் உடைக்கு மேட்ச்சாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!


பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன்
கூடும் .

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலிலஅதிகரிக்கிறது. முக்கியமானஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான
தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமானநோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் செக்ஸுவல்
ஹார்மோன்கள் தூண்டும்.பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில்அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

போதைக்கு அடிமையான சினிமா எழுத்தாளர்கள்: போலீஸ் அதிகாரி குற்றச்சாட்டு..



மலையாள சினிமாவில் இளம் எழுத்தாளர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பதாக, ஒரு போலீஸ் அதிகாரி திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.


சினிமாவில் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் மாதிரி சில ஹீரோக்களும், வில்லன்களும் சித்தரிக்கப்படுகின்றனர். இதுபற்றி கொச்சி மரடு பகுதிக்கு உட்பட்ட சப்இன்ஸ்பெக்டர் ஏ.பி.விபின் கூறுகையில்,


சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் படைப்பாளிகள் சிலர் போதை மருந்து பயன்படுத்த தொடங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திரையுலகிற்கு வரும் இளம் தலைமுறையினரிடம் இந்த பழக்கம் இருக்கிறது.


 போதை மருந்து உட்கொள்வதால் கற்பனை வளம் பெருகி புதிய சிந்தனைகள் வருவதுடன், டென்ஷனும் குறைகிறது என்ற தவறான எண்ணத்தின் விளைவுதான் இது. ஹஷிர் மொஹமத் என்ற சினிமா எழுத்தாளர், தனது குடியிருப்பில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.


அவர் போதை மருந்து உட்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற செயல்கள் அதிக வருத்தம் அளிக்கிறது. சினிமாதான் இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்வதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர் என்றார்.


இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு மலையாள நடிகர், ஒருவரின் தனிப்பட்ட பழக்கத்துக்கு சினிமா படங்கள் மீது பழி சுமத்தக்கூடாது. நான் வில்லன் வேடங்களில் நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது.


அவரவர் பலவீனத்தை பொறுத்தே இந்த பழக்கம் வருகிறது என்றார். மலையாளப் படவுலகினர் மீது போலீஸ் அதிகாரி பகிரங்கமாக தெரிவித்த இந்த கருத்து, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என் மீது பழிபோடுகிறார் ஹீரோ...புலம்பிய தமன்னா...!



தமன்னாவை படத்தில் இருந்து நீக்கிய ஹீரோ, புது ஹீரோயினை தேடுகிறார்.

 மேலும், தன் படத்துக்கு இயக்குனரையும் தேர்வு செய்தார். இந்தியில் ஆதித்யராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடித்த ‘ஆஷிகி 2’ படத்தை தயாரிப்பாளரும், ஹீரோவுமான சச்சின் ஜோஷி தெலுங்கில் ரீமேக் செய்கிறார்.


இயக்குனர் மற்றும் ஹீரோயினை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட சச்சின், ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்நிலையில் திடீரென்று அவர், தனது படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்யப் போவதில்லை. அவரது ஸ்டார் அந்தஸ்து, அந்த கேரக்டருக்கு மைனஸ் ஆகிவிடும். புது ஹீரோயின்தான் பொருத்தமாக இருப்பார்.


அவரை தேடிக் கொண்டிருக்கிறோம். தமன்னாவை நீக்குவது பற்றி இயக்குனர் முடிவு செய்வார் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அதுவரை இயக்குனரும் தேர்வு செய்யப்படாமல் இருந்தார்.


சச்சின் சொன்ன குற்றச்சாட்டைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த தமன்னா, ‘ ‘ஆஷிகி 2’ ரீமேக்கில் நடிக்க என்னிடம் கால்ஷீட் கேட்டபோது, மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று சொன்னேன்.


அதனால்தான் என்னை அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று சச்சின் திரித்து சொல்கிறார்’ என்று குற்றம் சாட்டினார்.


இந்நிலையில், படத்தை இயக்கும் பொறுப்பை ஜெயா ரவீந்திராவிடம் ஒப்படைத்துள்ளார் சச்சின். ஏற்கனவே ஜெயா ரவீந்திரா, ‘பம்பர் ஆபர்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார். 

‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழா தொகுப்பு...!



ஈராஸ் இன்டர்நேஷனல், மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘கோச்சடையான்’. ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஜோடி. இசை, ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள்:


வாலி, வைரமுத்து. கதை, திரைக்கதை, வசனம்: கே.எஸ்.ரவிகுமார். இயக்கம், சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின். இப்படத்தின் ஆடியோ சி.டி மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ சி.டியை ஷாருக்கான் வெளியிட்டார். ‘கோச்சடையான்’ கார்பன் மொபைல் ஸ்பெஷல் எடிசனை ரஜினிகாந்த் வெளியிட்டார்.


பிறகு அவர் பேசியதாவது:


ராஜா, ராணி கதையில் நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. 20 வருடமாக என் மனதில் ஓடிக்கொண்டிருந்த அந்த எண்ணம்தான் ‘ராணா’ படம் உருவாக காரணமாக அமைந்தது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கினார். முதல்நாள் ஷூட்டிங்கில் எனக்கு உடல்நிலை பாதித்தது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். பிறகு அந்த படத்தில் நடிக்க நினைத்தபோது,


என் உடல்நிலை ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டது. அப்போது முரளி மனோகர் என்னை அணுகி, ‘கோச்சடையான்’ கதையை ரவிகுமாரிடம் கேட்க சொன்னார். கேட்டேன், பிடித்திருந்தது. இந்த படத்தை சவுந்தர்யா 3டி மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்றார். ‘அந்த டெக்னாலஜி பற்றி எனக்கு தெரியாது. உன்னால் முடியுமா?’ என்றேன். ‘முடியும்’ என்றார். தமிழக மக்கள் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதை ‘கோச்சடையான்’ படமாக கொடுத்திருக்கிறேன். இதில் உழைத்தவர்கள் பட்ட கஷ்டத்தை வாயால் சொல்ல முடியாது.


 படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். எஸ்.பி.முத்துராமன் சொன்னது போல், இந்த படத்தின் வெற்றிவிழாவை பெரிய அளவில் நடத்தி, எல்லா ரசிகர்களையும் அழைத்துப் பேசுவேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

ஷாருக்கான் பேசுகையில், ‘எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ரசிகர்கள் என்மீது அன்பு மழை பொழிகிறார்கள். அதற்கு நன்றி’ என்றார். தீபிகா படுகோன் பேசுகையில், ‘இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவம். ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்’ என்றார்.


விழாவில் கே.பாலசந்தர், ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, சரத்குமார், ஜாக்கி ஷெராப், பிரபு, தனுஷ், டாக்டர் முரளி மனோகர், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், ஷோபனா, கலைப்புலி எஸ்.தாணு உட்பட பலர் கலந்துகொண்டனர். 

போராடி வெற்றி பெற்றார் சமுத்திரக்கனி ...!



இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வாசன் விஷூவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த நிமிர்ந்து நில் திரைப்படத்தின் வெளியீட்டில்


தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னையாக உருவாகிவந்தது. இரண்டு மூன்று முறைகள் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக கடந்த மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.


ஜெயம் ரவி, அமலா பால்,சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு


சமூகத்திற்கு அட்டகாசமான ஒரு கருத்தினையும் எடுத்துக் கூறுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்களை மையப்படுத்தி உருவானதாலோ என்னவோ இப்படத்தின் வெளியீட்டில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது.


ஆனால் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு படக்குழுவிற்கு மாபெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஜெயம் ரவி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இப்படம் அமையும் என்றும் ரசிகர்கள் கருத்துத்
தெரிவித்துவருகின்றனர்.

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்...!



 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.


உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.

நில்... கவனி... செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி ?



இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.

அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.

இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது. இதற்கு கணக்கீட ஏதுவாக வருட ஆரம்பத்திலே IT declaration என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். அதன் படி மாத சம்பளத்தில் பிடித்து வருவார்கள்.

உலகில் பல நாடுகளில் வரி விதிப்பு ப்ளாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது வருகிற வருமானத்தில் 10% அல்லது 15% என்று பிடித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் slab system என்பது நடைமுறையில் உள்ளது. இது ஒரு நல்ல அணுகுமுறை. அதாவது அதிக வருமானம் வருபவர்களுக்கு அதிக சதவீத வரியும் அதற்கடுத்த நிலைகளில் குறைந்த சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் கீழே உள்ள வரம்பு நிலைகள் வருமான வரிக்காக கடைபிடிக்கப்படுகிறது.

~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி ஏதும் கிடையாது

~ இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை 10% வரி செலுத்த வேண்டும்.

~ ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை 20% வரி செலுத்த வேண்டும்

~ பத்து லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்
இந்த வரி வரம்பானது வீட்டு வாடகை, அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், வீட்டுக் கடன்கள் மற்றும் சில விலக்குகளைத் தவிர்த்துக் கணக்கிட வேண்டும்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார். அப்படி என்றால் அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை - 96,000 (12*8000)
80c முதலீடு - 1,00,000

மொத்தம் - 1,96,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000 - 1,96,000 = 10,04,000

இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்
இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,

~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்

~ 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்

~ 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,000 ரூபாய்

~ 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்
ஆக மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,31,200

அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,31,200 ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும்.

மேலே உள்ள வருமான வரி வரம்பானது பெண்கள், வயதானவர்களுக்கு சிறிது சலுகைகளுடன் மாறுபடும்.

வரியே இல்லாவிட்டாலும் வருமான வரி சான்றிதழ் பெறுவது நல்லது. ஏனென்றால் வங்கிக்கடன் மற்றும் வெளிநாடு செல்லும் போது அதிகம் தேவைப்படும்.