Monday 24 March 2014

கண்டிஷன்களைப் போட்டு கதறடிக்கும் கதாநாயகன்!



அட்டகத்தி படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் அறிமுகமான தினேஷின் இரண்டாவது படமாக குக்கூ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் ஆகிய இரண்டு படங்கள் தயாரிப்புநிலையில் உள்ளன.


அட்டகத்தி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் இளம் ஹீரோக்களுக்கான பந்தயத்தில் தினேஷ் மிகவும் பின்தங்கியே இருப்பதால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லையோ? என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மை என்ன தெரியுமா?


அட்டகத்தி படத்துக்குப் பிறகு தினேஷைத் தேடி வந்த பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாம். பெரிய சம்பளம், கை நிறைய அட்வான்ஸ் என்றெல்லாம் ஆசைக்காட்டியும் தினேஷ் அசைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள் அவரைத் தேடிப்போய் திரும்பி வந்த உதவி இயக்குநர்கள்.


கதை எனக்குப் பிடிக்க வேண்டும். அப்புறம் முழுக்கதையையும் சீன் பை சீன் சொல்ல வேண்டும். படத்தின் ஸ்கிரிப்ட்டை பைண்ட் செய்து புத்தகமாகக் என்னிடம் கொடுக்க வேண்டும்.


 அதைப் படித்துப்பார்த்து எனக்கு திருப்தியாக இருந்தால்தான் கால்ஷீட் தருவேன் - என்று சொல்லிச் சொல்லியே தேடி வந்த பல இயக்குநர்களை தலைதெறிக்க ஓட வைத்துவிட்டாராம் தினேஷ்.


இப்படி கண்டிஷன் மேல் கண்டிஷனை போட்டதால் தான் தினேஷின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் அவரது நலம்விரும்பிகள்.


சில வருடங்களுக்கு முன், சித்திரம் பேசுதடி என்ற படம் வெற்றியடைந்தபோது, அப்படத்தின் நாயகனான நரேன், தன்னை மினி கமல்ஹாசனாக நினைத்துக் கொண்டு இப்படித்தான் ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டு கதை சொல்ல வந்த இயக்குநர்களை கதற அடித்தார். பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை தினேஷ் உணர்ந்தால் சரிதான்!

நக்மாவை கட்டிப்பிடித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., அத்துமீறல்!



சமீபகாலமாக நடிகைகளிடம் நரைமுடி அரசியல்வாதிகள் அத்துமீறி நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது உ.பி மாநிலம் மீரட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நக்மாவிடமும் ஒரு நரைமுடி எம்.எல்.ஏ அத்து மீறி நடந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மீரட் தொகுதியில் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நக்மா. அப்போது ஹாபூர் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். அங்கு பெருந்திரளாக பொதுமக்கள் கூடியிருந்ததால் கூட்டத்தில் நீந்திச்சென்றிருக்கிறார் நக்மா. அப்போது அவரை மேடைக்கு அழைத்து செல்வது போன்று நக்மாவை, அரவணைத்தபடி வந்தாராம், ஹாபூர் எம்.எல்.ஏ., சர்மா என்பவர்.

முதலில் அரவணைத்தபடி வந்தவர் திடீரென்று நக்மாவின் கன்னத்தோடு தனது கன்னத்தை வைத்து ஒட்டி உரசியபடி வந்தாராம். முதலில் இதை கவனிக்காத நக்மா, பின்னர் அவரது பிடி இறுக்கமானதையடுத்து அவரது கைதட்டி விட்டு விட்டு விலகிச்சென்றிருக்கிறார். நக்மாவின் முகத்தில் கடும் கோபத்தைப்பார்த்த அந்த எம்.எல்.ஏ அதன்பிறகு அவர் இருக்கிற பக்கமே செல்லவில்லையாம்.

சரத்குமார் படத்திற்கு பைனான்ஸ் தர யாரும் முன்வரவில்லையாம்...!



ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த சரத்குமாரை, பழசிராஜா, காஞ்சனா போன்ற படங்கள் அவருக்குள் இருந்த வித்தியாசமான நடிகரை வெளியே கொண்டு வந்தன.


அதனால் அவரை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவான படம்தான் வேளச்சேரி. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இனியா நடித்து வந்தார்.


சிறிய இடைவேளைக்குப்பிறகு சரத்குமார் கதாநாயகனாக நடிக்க கமிட்டான இந்த படத்தில் அவருக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வீதம் சம்பளம் பேசி படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.


அந்த சமயத்தில் சில நாட்களில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் சரத்குமார் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததாககூட சலசலப்பு ஏற்பட்டது.


இருப்பினும், எப்படியும் படத்தை முடித்து விட வேண்டும் என்று வேகமாக நகர்த்தி வந்த நேரம், பைனான்ஸ் பிரச்னை வெடித்து விட்டதாம். சரத்குமார் என்ற பெரிய நடிகரின் படமாக இருந்தும் பைனான்ஸ் உதவி செய்ய யாரும் முன்வரவில்லையாம்.


அதனால், இப்போது படப்பிடிப்பை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் சரத்குமாரை விட இப்படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த இனியா பெரிய வருத்தத்தில் இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் படம்...!



இது தேர்தல் சீசன். அதனால் அரசியலை மையமாக கொண்ட படங்கள் ரிலீசாவதில் மும்முரம் காட்டி வருகின்றன.


சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் இயக்கி வரும் படம் பிரமுகர். திரிசூல், ஜெசி, மோகனவேல், மஞ்சுவா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வருகிறது.


இப்போது தேர்தல் நெருங்குவதால் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். காரணம் இது அரசியல் படம். அதைப் பற்றி இயக்குனர் ஜே.பி.அழகர் இப்படிக் கூறுகிறார்.


காதலுக்காக போராடுகிற இளைஞர்கள் ஏன் நாட்டுக்காக போரடக்கூடாதுன்னு சொல்ற படம். காதல் காதல்னு தங்களோட நேரத்தையும், சக்தியையும் இளைஞர்கள் வீணாக்கிகிட்டிருக்காங்க.


அவுங்கள நாட்டு பக்கம் திருப்புற படம். இன்றைய அரசியல் சூழ்நிலையை மாற்ற நினைக்கிற நான்கு இளைஞர்களின் கதை. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் பண்றோம் என்கிறார் அழகர்.

சிறுவர்-சிறுமிகளை மோதவிடும் இயக்குநர் விஜய்!



பசங்க படத்தில் முன்னணி நடிகர்களைப்போன்று சிறுவர்கள் பெரிய ஓப்பனிங் கொடுத்து படத்தை ஆரம்பித்தார் பாண்டிராஜ். அதேப்போல், ஒரு சிறுவன் ஹீரோ அவனைச்சுற்றி சில சிறுவர்கள், அதேபோல் ஒருவன் வில்லன் அவனைச்சுற்றி சில சிறுவர்கள் எனவும் கதை பண்ணியிருந்தார். அவர்களுக்கிடையே நிகழும் ஈகோப்போரை இயல்பாக படம் பிடித்திருந்தார்.


அதையடுத்து இப்போது ஏ.எல்.விஜய்யும், சிறுவர்-சிறுமிகளை மையப்படுத்தி சைவம் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமைக்கொண்டு அவர் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, பழைய தாத்தா- பாட்டி உறவுகளைப்பற்றியும் இப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் விஜய்.


அதோடு, பேபி சாரா, ஒரு சேவல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு 7வயது சிறுவனை வில்லனாக சித்தரித்திருக்கிறாராம் அவர். அதனால் அன்பு பாசம் என்பது கதையின் சாரம்சமாக இருந்தாலும், சிறுவர்-சிறுமிகளுக்கிடையே நிகழும் போட்டி பொறமைகளையும் காட்சிபடுத்தியிருக்கும் விஜய், அவர்களையும் காரசாரமாக மோதவிட்டுள்ளாராம்.

பிரிந்த காதலர்கள் தம்பதியர்கள் ஆனார்கள்...!



சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.

அம்மாவை கேட்காம இந்த காரியத்த பண்ணலாமா? இப்ப பாரு என்ன ஆச்சு...!



பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நான்குமுனை போட்டியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அதோடு சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இதில் அதிமுக சார்பில் நடிகர்கள் ராமராஜன், தியாகு, வையாபுரி உள்பட பல நடிகர்கள் தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.


அந்த வகையில், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவரை ஆதரித்து கடந்த சில தினங்களாக தியாகு, வையாபுரி இருவரும் ஒவ்வொரு கிராமங்களாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.


அப்படி அவர்கள் செல்லும் ஊர்களில் பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம்.


அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதனால்,


அந்த ஏரியாவைச்சேர்ந்த பறக்கும் படை பிரிவு தாசில்தார் குணசேகரன் வையாபுரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தெடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விஜய்க்காக நிறைய யோசிக்கிறேன் அனிருத்!



தனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.


 சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சில சிறிய பட்ஜெட் படங்களில் கூட கமிட்டாகி பின்னர் வெளியேறினார்.


மேலும், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் படத்துக்கான டியூன்களை ரெடி பண்ணத் தொடங்கி விட்டார். அப்படி தொடங்கியவர் இப்போது அப்படத்துக்கு தேவையான சில டியூன்களை ஓ.கே செய்து விட்டவர், விஜய் பாடும் டியூனை மட்டும் இன்னும் ஓ.கே பண்ணவில்லை.


ஏற்கனவே விஜய் பாட வேண்டிய டியூனை ரெடி பண்ணினபோதும், அதில் அனிருத்துக்கு போதுமான திருப்தி வரவில்லையாம். அதிலும், சமீபத்தில் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி என விஜய் பாடிய இரண்டு பாடல்களுமே ஹிட் என்பதால். அந்த இரண்டு பாடல்களையும் மிஞ்சும் வகையில் தனது இசையில் உருவாகும் பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறாராம்.


அதனால், அந்த ஒரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத்.

ஷங்க்ரின் ‘ஐ’ லேட்டஸ்ட் தகவல்கள்!



ஷங்கர் படம் என்றால் எதிர்பார்ப்பை பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் அளவில் ‘ஐ’ படம் இருக்கும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.


 ரொமான்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்காக ‘ஹாபிட்’ போன்ற படங்களில் மேக்-அப் பணிகளைக் கவனித்த ‘வேட்டா’ நிறுவனம் ‘ஐ’ படத்தில் பணியாற்றுகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, இந்தியா முழுவதுமான பார்வை இப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது.


‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ போன்ற படங்களில் சமூக பிரச்சனைகளையும், ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் காதலையும், ‘எந்திரன்’ படத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனையும் மையப்படுத்தி படமெடுத்த ஷங்கர், ‘ஐ’ படத்திற்காக இதுவரை போகாத ரூட்டில் பயணித்திருக்கிறாராம். படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பை சீனாவில் நடத்தியிருக்கிறார்கள்.


‘ஐ’ படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சீனாவிற்கு ‘டேக் ஆஃப்’ ஆகி, இடைவேளை வரை அங்கேதான் பயணிக்குமாம். பெரிய பெரிய பூக்கள் நிறைந்த ஏரியாக்களில் நிறைய தூரம் பயணம் செய்து படமாக்கியிருக்கிறாராம். ‘அந்நியன்’ படத்தில் வரும் ஆம்ஸ்டர்டாம் தோட்டத்தைவிட இதில் வரும் பூந்தோட்டங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்குமாம்.


அதோடு ‘மென் இன் ப்ளாக்’கில் வேலை பார்த்த மேரி வாட், ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பண்ணியிருக்கிறாராம். இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக உடலை மெலிய வைத்துள்ள விக்ரம், மேக்-அப் கலைஞர்களின் வேண்டுதலுக்கிணங்க தலையையும் மொட்டையடித்திருக்கிறார்.


படத்தில் வரும் அந்தக் கேரக்டர் மிகவும் பேசப்படும் என்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.


விக்ரமிற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை கோடைவிடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Sunday 23 March 2014

திரையில் ஒலிக்காத கண்ணதாசனின் பாடல்!



சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படம் ‘வேட்டைக்காரன்’. குறுகிய கால தயாரிப்பு. எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஆரூர்தாஸ் வசனங்கள். கே.வி.மகாதேவன் இசை. 100 நாள் படம். 1965ல் ஸ்ரீதரின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளியான படம் ‘வெண்ணிற ஆடை’.

 கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என நான்கு பொறுப்பையும் ஸ்ரீதர் கவனித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்தனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். அதேபோல் ஸ்ரீகாந்தை (‘தங்கப்பதக்கம்’ ஸ்ரீகாந்த்) ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.


நிர்மலாவுக்கு முக்கிய ரோல் படத்தில் இருந்தது. கிட்டத்தட்ட செகண்ட் ஹீரோயின்தான். மெயின் ஹீரோயின் வேடத்துக்கு யாரை நடிக்க வைக்கலாம் என ஸ்ரீதர் குழப்பத்தில் இருந்தார். அப்போதுதான் கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்டார். அந்த படங்களை பார்த்தார். அவரையே புக் செய்தார். இந்த படம் மூலம்தான் ஜெயலலிதா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.


படம் முடிந்து சென்சாருக்கு சென்றது. தேவையே இல்லாமல் ஏதோ ஒரு காட்சிக்காக சென்சார் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்து வ¤ட்டது. இது பட யூனிட்டாருக்கு அதிர்ச்சியாக இருநதது. ஸ்ரீதருக்கோ பெரும் அதிர்ச்சியை இது தந்தது. படத்தில் கவர்ச்சி காட்ச¤கள் அதிகம் போலிருக்கிறது என்ற பேச்சு பரவிவிட்டது. முதல் நாள் முதல் ஷோவில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் பட்டாளம் நிரம்பி வழிந்தது.


படம் முடிந்து போகும்போது தியேடடர் சீட்டுகளை கிழித்து, கலாட்டா செய்துவிட்டு போனார்கள். சில தியேட்டர்களில் பாதி படத்திலேயே கலாட்டா செய்தனர். காரணம், முழு நீள குடும்ப கதை படமிது.


ரசிகர்களின் இந்த செயல்களால் படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துவிட்டனர். மூன்றே வாரத்தில் பல தியேட்டர்களிலிருந்து படத்தை எடுத்தும் விட்டனர். இதற்கிடையே படம் பார்த்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியது.


அது படத்துக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரீதரின் நேர்மையான உழைப்பை பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. கிராமப்புறங்களில் படம் பிக்அப் ஆக தொடங்கியது. படம் நல்லா இருக்கு எனற டாக் பரவ ஆரம்பிக்கவே வேறு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தார் ஸ்ரீதர். அதன் பின் படம் நிற்காமல் ஓடு ஓடு என ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அமர்க்களமான ஹிட் என்றால் இதுதான் என சொல்லும்
அளவுக்கு பேசப்பட்டது.


படத்தில், நீராடும் கண்கள் இங்கே... போராடும் நெஞ்சம் அங்கே... நீ வாராதிருந¢தால்... என்னை பாராதிருந்தால்... நெஞ்சம் மாறாதிருப்பேன் இல்லையா...என்றொரு கண்ணதாசனின் பாடல் பதிவாகியிருந்தது. படத்தில் ஸ்ரீகாந்தை பார்த்து ஹீரோயின் பாடும் வரிகள் இவை. இதை மக்கள் ஏற்பார்களா என சந்தேகத்தை ஸ்ரீதருக்கு அவரது உதவியாளர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்.


இதனால் இவ்வளவு அழகான பாடல் படத்தில் இடம்பெறாமலே போய்விட்டது. இதன் மெட்டும் மிக அருமையாக இருக்கும். எனக்கு இந்த பாடல் வரிகளை கொடுத்து சம்பளமும் பெற்றுவிட்டதால், அந்த வரிகளை வேறு படத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு தோன்றவில்லை. அவன்தான் கவிஞன் என என்னிடம் ஒருமுறை ஸ்ரீதர் கூறினார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் இந்த ஆண்டில்தான் வெளியானது. தேசிய விருது பெற்ற படமிது. ஜெயகாந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த படம். ஆசியா ஜோதி பிலிம்ஸ் பெயரில் இப்படத்தை தயாரித்தார். பிரபலம் ஆகாத பிரபாகர், வீராசாமி, காந்திமதி நடித்த படம். ஆனால், இதன் கதையும் அதை சொன்ன விதமும் புதுமையானது. நட்சத்திர நடிகர்கள் இல்லை என்பதால் இப்படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் முன்வரவில்லை.


 ஜெயகாந்தனே படத்தை வெளியிட்டார். ரிலீசுக்கு பின்பு தியேட்டர் உரிமையாளர்களும் கேம் ஆடினார்கள். டிக்கெட் நிறைய இருந்தும் தியேட்டரில் ஹவுஸ்புல் என போர்டு வைத்துவிடுவார்கள். இதை நம்பி ரசிகர்கள் திரும்பிவிடுவார்கள். ரசிகர்கள் போனதும் போர்டை எடுத்துவிடுவார்கள். படம் பார்க்க ரசிகர்கள் வரவில்லை எனக் கூறி படத்தை தியேட்டரிலிருந்து எடுத்துவிடுவார்கள். இந்த விஷயத்தை ஜெயகாந்தனே எனனிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.


தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் வெளியான படம் ‘இதயக்கமலம்’. எல்.வி.ப¤ரசாத் தயாரித்தார். அவரது சிஷ்யரான ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கினார். வசனம் ஆரூர்தாஸ். கே.வி.மகாதேவனின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட். ரவிச்சந்திரனுடன் கே.ஆர்.விஜயா இரட்டை வேடத்தில் நடித்த படம். நன்றாக ஓடியது.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு - அதிரடி முடிவு...!



பாராளுமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அவர் மவுனம் சாதிப்பதால் எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் கூட்டங்கள் போட்டு தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதனை ரஜினிக்கு தெரிவித்து வருகிறார்கள். ரஜினியின் முதல் அரசியல் நடவடிக்கைகள் 1996–ல் நடந்தது.

அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.மா.கா. கூட்டணியை ஆதரித்தார். அந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாகவும் இருந்தார். அந்த அணி அமோக வெற்றி பெற்று ரஜினியின் அரசியல் செல்வாக்கை வலுவாக பறைசாற்றியது. அதன் பிறகு 1998–ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஆதரித்தார்.

அப்போது அ.தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்து நின்றன. அந்த சமயம் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது பாரதீய ஜனதாவுக்கு அனுதாப அலையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற வைத்தது. இதனால் 1999–ல் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தார்.

2004–ல் பா.ம.க.வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அவரை கட்டாயப்படுத்தி அரசியலுக்கு இழுத்தது. கட்சி துவங்குவார் என்ற பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது பா.ம.க.வை தோற்கடிக்க எதிர் அணியான பாரதிய ஜனதாவை வெற்றி பெற வைக்கும்படி வாய்ஸ் கொடுத்தார். அதற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக எந்த கட்சிக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுங்கியே இருக்கிறார்.

இந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோருக்கும் நெருக்கமாகி விட்டார். ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார். எதிர் முகாமில் இருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி போன்றோருடனும் நெருக்கமானார். ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்துக்கு அன்புமணி நேரில் வந்து வாழ்த்தினார். இது போல் பாரதீய ஜனதா தலைவர் நரேந்திர மோடியுடனும் நட்பு வைத்து இருக்கிறார்.

எல்லா தலைவர்களுடனும் இந்த நல்லுறவை நீடிக்க செய்வதே அவர் எண்ணமாக இருக்கிறது. எனவே வரும் தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்காமல் நடுநிலைமை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பாயும் புகார்கள்....!



மதுரவாயல் அருகே உள்ள வானகரம்–அம்பத்தூர் சாலையில் கோல்டன் அபார்ட்மெண்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த கடை பூட்டப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் நேற்று மாலை மதுரவாயில் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் 10–க்கும் மேற்பட்டோர் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.


 ரூ.5 லட்சம் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. குடியிருப்பு சங்கத்தினர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதேபோல் குடியிருப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில், அவர்கள் குடியிருப்பு பகுதியை ஆக்கிரமித்து பவர் ஸ்டார் சீனிவாசன் தனது சூப்பர் மார்க்கெட் முன்பு செட் அமைத்துள்ளார்.


அதை அகற்றக்கோரி டிசம்பர் மாதம் வரை கெடு விடுத்து இருந்தோம். ஆனால் அவர் அகற்றாததால் கிரீல் கேட்டை நாங்கள் அகற்றினோம்.


இதற்காக எங்களை அவரது தரப்பினர் மிரட்டி வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்பை அகற்ற ஆவணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த புகார்கள் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

விக்ரமின் அடுத்த படம்: விஜய் மில்டன் இயக்குகிறார்..!



 விக்ரம் நடிக்கும் புதிய படத்தை ‘கோலிசோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார். இந்தப்படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.


விக்ரம் மாறுபட்ட கதாபாத் திரங்களில் நடித்து வரும் ‘ஐ’ படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.


வரும் கோடை விடுமுறை யில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலை யில் இப்படத்தை அடுத்து ஒளிப்பதிவாளரும்,


இயக்கு நருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ‘இடம் மாறி இறங்கி யவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.


இந்தப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.


விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ படத்தை இந்த ஆண்டின் வசூல் சாதனை படமாக தயாரிப்பாளர் சங்கம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

'சைவம்' படத்தில் ஒரு மணி மகுடமாக திகழும் நாசர்...!



நடிப்பில் தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர், தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு.


இதோ மற்றொன்று. சமீபத்தில் இயக்குனர் விஜய்யின் 'சைவம்' படப்பிடிப்பின் போது, அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதாபாத்திரத்துக்கு என்று பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டி இருந்தது , அவரது முன்தலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை.


இதனால் அவர் தற்போது நடிக்கும்  மற்ற படங்கள் பாதிக்கப்படுமோ என்று தயங்கிய போது   இயக்குனர் விஜய், ஒப்பனை கலைஞரும் சிகை அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத் அவர்களை கலந்து ஆலோசித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நாசரின் அசல் சிகை அலங்காரம் போலவே ஒரு விக் செய்தனர்.


அதன் உபயத்தில் நாசர் மற்ற படங்களில் இடையூறு இல்லாமல் நடித்தார். படத்தின் rushes பார்த்த இயக்குனர் பெருமிதத்தோடு நாசர் சார் நமக்கு கிடைத்த மிக அரிய வகை நடிகர்.


'சைவம்' படத்தில் வரும் அந்த முதியவர் கதாபாத்திரத்தில், நம் குடும்பத்தில் நாம் காணும் தாத்தாக்களை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று மெருகூட்டிய நாசருக்கு 'சைவம்' ஒரு மணி மகுடமாக திகழும் என கூறினார்.

‘எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது முக்கியமல்ல’



 ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ படங்களை அடுத்து ‘பப்பாளி’ படத்தின் மூலம் மீண்டும் கல்வியையும், காமெடியையும் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் கோவிந்தமூர்த்தி. படத்தின் வெளியீடு, புரமோஷன் வேலைகளில் தீவிரம் செலுத்திக் கொண்டிருந்தவரை சந்தித்ததிலிருந்து…

‘பப்பாளி’ வழியே புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

இது முழுக்க முழுக்க பாசிடிவ் எனெர்ஜி படம். முந்தைய படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ பார்த்தவங்க பலரும் நல்லா இருக்குன்னு பாராட்டினாங்க. சிலர் சுமாராக இருக்கு என்றார்கள். அந்தப் படம் முழுக்க எதார்த்த மனிதர்களை பதிவு செய்திருந்தேன். அந்த எதார்த்தத்தை சொல்லவும் ஒரு அழகியல் தேவை என்பதை அந்தப்படத்தின் ரிசல்ட் எனக்கு புரிய வைத்தது. ‘பிதாமகன்’ சித்தன் கேரக்டர் அழகியல் இல்லாத ரோல்தான். அதற்கு விக்ரம் என்கிற ஹீரோ இருந்தாரே. அதுதான் எனக்கு அழகியலாக பட்டது. அப்படியான சில புரிதலோடு முதல் பாதியை காமெடியோடும், இரண்டாவது பாடியை கதையோடும் இந்தப் படத்தில் தந்திருக்கிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன்.

கல்வி, குடும்பம் என்று கதையின் களத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். படத்தில் அதை எப்படி பிரதிபலிக்கப் போகிறீர்கள்?

எல்லா காலகட்டத்துக்குமே தேவையான விஷயத்தைத்தான் எடுத்திருக்கிறேன். ஒரு பையனை பார்க்கும்போதெல்லாம் ‘நீ நல்லா வருவப்பா’ என்று பாசிடிவாக மட்டுமே அவனை உத்வேகப்ப டுத்திக்கிட்டே இருந்தால் நிச்சயம் அவன் வெற்றி பெற்றே தீர்வான். அவனுடைய முயற்சி, நம்பிக்கை எல்லாமே அந்த பாசிடிவான உத்வேக சொல்தான். அதற்காக ஏங்கி ஒரு கட்டத்தில் வெற்றியையும் அடையும் சாமான்யன்தான் என் ஹீரோ. இந்த விஷயம் இப்பவும், எப்பவும் தேவைதானே.

சிங்கம்புலி, சரண்யா பொண்வண்ணன், இளவரசு, ஆடுகளம் நரேன் இப்படி பலர் இருக்கிறார்களே?

நாயகன் செந்தில், நாயகி இஷாரா இருவரும் இளைய தலைமுறையின் சேட்டை, காமெடி, காதல் என்று வாழ்ந்திருக்காங்க. இளவரசு வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து வில்லனாக பார்த்து வரும் ‘ஆடுகளம்’ நரேன் இந்தப்படத்தில் நாயகியின் அப்பாவாக வருகிறார். முழுக்க பாசிடிவ் கேரக்டர். என் நண்பன் சிங்கம்புலி இது வரைக்கும் இல்லாத காமெடி கதாபாத்திரத்தில் வருவான். அவ்வளவு அழகான கதாபாத்திரம் அவனுக்கு.

‘நீ எதையாவது சாதிக்க விரும்பினால் திருமணத்திற்கு முன்பே சாதித்துவிடு’ என்று லியோ டால்ஸ்டாய் ஒரு இடத்தில் கூறியிருப்பார். அதை கொஞ்சம் மாற்றி யோசித்து இங்கே திருமணத்திற்கு பின்பும் சாதிக்க வழிகள் இருக்கு என்கிற விஷயத்தை இன்னும் புதுமை கலந்து சொல்லியிருக்கேன்.

இது பட்ஜெட் படம் மாதிரி தெரியுதே? எல்லா விஷயங்களையும் சமரசம் இல்லாமல் அடக்க முடிந்ததா?

பட்ஜெட் படங்கள் பணத்தை பொறுத்துதான் இங்கே தீர்மானிக் கப்படுகின்றன. ஒரு இயக்குநராக நான் என்ன நினைத்தேனோ, அந்த விஷயங்களை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் கொடுத்திருக்கிறேன். எத்தனை கோடியில் படம் பண்ணுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. எப்படி அழுத்தமான கதையை எடுத்துக்கிருக்கிறோம் என்பதுதான் என் பட்ஜெட் பார்முலா.

ஹீரோக்களை டம்மியாக்கவே நான் ஹீரோவாக நடிக்கிறேன்...! சந்தானம்



தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து காமெடி நடிகரானவர் சந்தானம். அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் காமெடி நடிகரானார்.


சந்தானத்தின் கால்ஷீட்டுக்காக ஹீரோக்களே காத்திருந்தார்கள். இப்போது சந்தானம் காமெடி டிராக்கிலிருந்து மாறி வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக் இது.


ஹீரோவாக நடிப்பது ஏன் என்பது பற்றி சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஹீரோவாக நடிக்கணும், பன்ஞ் டயலாக் பேசி பத்து பேரை பறக்க விடணுங்ற ஆசையெல்லாம் கிடையாது. ஆனா இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவாக நடிக்க முடியும்.


அப்பாவியாகவும் இருக்கணும் ஹீரோயிசம் காட்டி கைதட்டலையும் அள்ளணும். இதை ஒரு பெரிய ஹீரோ செய்ய முடியாது. செய்தா ரசிக்க மாட்டாங்க. புதுமுகங்கள் இந்த கேரக்டரை தாங்க மாட்டாங்க. அதான் நானே நடிக்க தீர்மானிச்சேன்.


வழக்கமான என்னோட படத்துல வர்ற காமெடியை விட கூடுதலா கொஞ்சம் காமெடி சேர்த்துகிட்டு ஹீரோவாகிடவில்லை. நான் எது பண்ணினதாலும் மக்கள் ரசிச்சு கைதட்டுவாங்கன்னும் நினைக்கல.


ஸ்கிரிப்ட்டுதல ஆரம்பிச்சு நான் ஜிம்முக்கு போயி தயாரானது வரைக்கும் பார்த்து பார்த்து பண்ணியிருக்கோம். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை சேர்த்திருக்கோம். படம் வரும்போது அது தெரியும். என்கிறார் சந்தானம்.

முன்பு சூப்பர்ஸ்டார்,இப்ப அல்டிமேட்ஸ்டார் அசத்தும் ஷாருக்கான்...!!!



வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான்.

இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.

அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.

இந்த விஷயத்தை அறிந்த பாலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.

கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.

கோச்சடையானில் ஷாருக்கான் ரஜினியை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. 

டானாவுக்கு பிறகு பார்ப்போம்- இயக்குனர் பொன்ராமை திருப்பி அனுப்பிய சிவகார்த்திகேயன்



வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது.


தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது.


இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம்.


அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம்.


அதை நிராகரித்த சிவகார்த்திகேயன் நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பிறகு இந்த காம்பினேசனுக்கு ரொம்பவும் எதிர்பார்ப்பு இருக்கு, அதனால் எனக்கு விருப்பமில்லை.


எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார்.


 எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


இதனால் புள்ளி மான் வேகத்தில் கதை ரெடி பண்ணிட்டு இருக்கிறாராம் இயக்குனர் பொன்ராம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த பொன்ராம், தன்னுடைய அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகிறார் என்று நம்பத்தகுந்த வட்டராம் தெரிவித்தது.
தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தாக லிங்குசாமி தயாரிப்பில் தான் இந்த படம் படப்பிடிப்புக்கு போக வேண்டியது.
இன்னும் சொல்ல போனால் சிவகார்த்திகேயன் கால்ஷீட்டும் கொடுத்து விட்டாராம், ஆனால் இயக்குனரோ திட்டமிட்டபடி  இன்னும் கதையை ரெடி பண்ணவில்லையாம்.
அதனால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்டாகிவிட, முதலில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு, பிறகு டாக்கிபோர்ஷனை எடுக்கலாம் என்று பொன்ராம் யோசனை சொன்னாராம்.
அதை நிராகரித்த சிவகார்த்திகேயன் நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பிறகு இந்த காம்பினேசனுக்கு ரொம்பவும் எதிர்பார்ப்பு இருக்கு, அதனால் எனக்கு விருப்பமில்லை. 
எனவே இன்னும் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொன்னதோடு, தனுஷின் டானா படத்துக்கு கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டார். எந்த விளம்பரமும் இல்லாமல் டானா படத்துக்கு பூஜை போடப்பட்டு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனால் புள்ளி மான் வேகத்தில் கதை ரெடி பண்ணிட்டு இருக்கிறாராம் இயக்குனர் பொன்ராம்.
- See more at: http://www.cineulagam.com/tamil/newsta/cinema/20140322102323/#sthash.HLSujc4Y.dpuf

சமுத்திரகனியை பாராட்டிய சகாயம் IAS ...!



நிமிர்ந்து நில் படம் பார்த்து பலரும் தன்னை பாராட்டினர்கள் என்று சமுத்திரகனி தெரிவித்தார்.


அதில் முக்கியமாக சகாயம் IAS தன்னிடம் பேசும்போது ஊழலுக்கு எதிராக இந்த உலகில் யார் குரல் கொடுத்தாலும் அவன் என் நண்பன் என்று சொல்லி பாராட்டினார்.


 அவரின் ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்ந்து’  என்ற வாசகத்தை தான் படத்தில் பயன்படுத்தினேன், அவர் அழைத்து பாராட்டியது எனக்கு பெருமையாக இருந்தது.


ஜெயம் ரவியின் கதாபாத்திரதின் பெயர் அரவிந்த் என்று இருப்பதால் பலரும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோடு அதை ஒப்பிடுகிறார்கள்.


நான் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்தக் கதையை ஜெயம் ரவியிடம் சொல்லிவிட்டேன். அதனால் அதற்கு இதற்கும் சமந்தமில்லை.


 நாங்கள்  நினைத்த பலவிஷயங்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நடந்து வந்தன. அரவிந்த் என்ற என் நண்பன் இங்கே இருக்கும் ஊழல் விஷயங்களால் திணறிப்போய் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டான்.


அவனை நினைத்துத் தான் ஜெயம் ரவியின் கதாபாத்திரதிற்கு அரவிந்த் என்று பெயர் வைத்தேன் என்றார்.

படத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை...!காரணம் சொல்லும் நடிகை...!



வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.


 "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் பணம் வாங்காமலும் நடிக்க தயார்" என்கிறார். மேலும் அவர் கூறியதாவது:

சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல. அன்னிக்கு அனுமதிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு ஹீரோயினா இருந்திருப்பேன்.


இப்போ கல்யாணமாகி துபாயில செட்டிலாகிட்டேன். என்னோட கணவர் துபாய், லண்டன் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார். நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துறேன். தீடீர்னு ஒரு நான் சினிமால நடிக்கட்டுமான்ன ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கு விருப்பமுன்னா நடி என்றார். நடிக்க வந்து விட்டேன்.

நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. சினிமா மேல உள்ள பக்தியில நடிக்க வந்திருக்கேன். அதனால கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். என்னோட வாழ்க்கை ரொம்ப மார்டன்தான்.


அதனால வில்லேஜ் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆயிரத்தில் இருவர்ங்ற படத்துல அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல கதையோட வந்த இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன். என்னோட திறமையை வெளிப்படுத்துற மாதிரி நல்ல கேரக்டரோடு வந்தால் பணம் வாங்காமல் கூட நடிக்க ரெடி. என்கிறார் ரித்திகா.

எம்.ஜி.ஆரை புகழ்ந்து சிவாஜி பாடிய பாடல்...!



ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப்படத்தில், ரவி யாதவ் என்ற ஒளிப்பதிவாளரை உதயகுமார் அறிமுகப்படுத்தினார். அவர் பெரிய ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.

உதவி டைரக்டராக பணியாற்றிய தரணி, பிற்காலத்தில் 'கில்லி', 'தூள்' ஆகிய படங்களை டைரக்ட் செய்து பெரும் புகழ் பெற்றார்.

1990-ம் ஆண்டு, கேமராமேன் ரவியாதவ் தயாரிப்பில் 'உறுதிமொழி' என்ற படத்தை உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்த படம், வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. மரண தண்டனை கைதியை தூக்கில் போட கொண்டு செல்லும்போது, அங்கு வரும் டாக்டர், கைதியை கடத் திச் சென்று, பல கொடியவர்களை கொல்வதுதான் கதை.

இந்தப்படத்திலேயே 'கிராபிக்ஸ்' காட்சிகளை அமைத்திருந்தார்கள். சென்னையில் ஒரு பெரிய கட்டிடம் தீப்பற்றி எரிவது போல் கிராபிக்ஸ் மூலம் காண்பித்தார்கள்.

உறுதிமொழியை தயாரித்தபோது, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனுக்காக 'கிழக்கு வாசல்' படத்தையும் உதயகுமார் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் உதயகுமாரே எழுதியிருந்தார். தெருக்கூத்துக் கலைஞரான கார்த்திக்கை, அடுத்த ஊரின் பண்ணையார் மகள் குஷ்பு காதலிப்பது போல் நடித்து ஏமாற்றுவார். இதற்கிடையே பண்ணையாரால் அந்த ஊருக்கு அழைத்து வரப்படும் ரேவதியை கார்த்திக் காதலிப்பார்.

'கிழக்கு வாசல்' படப்பிடிப்பின்போது பல விபத்துக்கள் நடந்தன. ஒரு விபத்தில், மரணத்தின் விளிம்புவரை சென்று அதிசயமாக உயிர் பிழைத்தார், உதயகுமார். 

இவுங்க தாங்க சொந்த தியேட்டர்ல படம் காட்ரவங்க...!



சிவாஜி குடும்பத்து வாரிசு விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம் இவன் வேற மாதிரி. எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ட் செய்திருந்தார்.


இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. விக்ரம் பிரபுக்கு ஜோடியாக புதுமுகம் சுரபி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த டிசம்பர் மாதம் 13ந் தேதி ரிலீசானது.


கும்கி படத்துக்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம், எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சரவணன் இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்புகளுடன் படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த ரிசல்ட்டை படம் கொடுக்கவில்லை.


 என்றாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபமும் இல்லை, பெரிய அளவில் நஷ்டமும் இல்லை என்பது சினிமா வியாபார வட்டார தகவல்.


படம் 25 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியது. சென்னையில் மட்டும் சில தியேட்டர்களில் 50வது நாளை தொட்டது.


அதுவும் ஓரிரு காட்சிகளாக. சிவாஜி குடும்பத்தின் தியேட்டரான சென்னை சாந்தியில் தினமும் ஒரு காட்சியாக திரையிட்டு 100வது நாளை எட்டிப்பிடிக்க வைத்துவிட்டார்கள்.


கும்கியை போலவே இந்தப் படமும் 100 வது நாள் போஸ்டரை கண்டுவிட்டதில் சிவாஜி குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி.

பாடல்களோடு வருகிறார் தெனாலி ராமன்!



நடிகர் வடிவேலுவின் ரீ-என்டிரி படமான ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’


 படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி இசை சேர்ப்பு போன்ற


போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


’ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.


 ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக மீனாட்சி தீட்சித் நடித்திருக்க,


இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் ராதா ரவி, மனோபாலா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Saturday 22 March 2014

’மான் கராத்தே’வுக்கு நாள் குறிச்சாச்சி...!



‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'.


இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க,


படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரு மடங்காகி உள்ளது.


 ரசிகர்களிடையே இப்போது எழுந்துள்ள கேள்வி படம் எப்போது ரிலீஸ்?


என்பதுதான்!


இந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக இப்படக்குழுவினரும் ரிலீஸ் தேதிதியை அறிவித்திருக்கிறார்கள்!


வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்!


அதற்கு முன்னதாக வருகிற 26-ஆம் தேதி படம் சென்சார் செய்யப்படவிருக்கிறது.


ஆக, ’மான் கராத்தே’வின் ’கவுண்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆனது!

எம்எச்370 விமானம் தேடல்: இரண்டு வாரங்களாக, மலேஷியா ஏர்லைன்ஸ் இருக்கும் இடம்பற்றிய மர்மம் தொடர்கிறது



மீட்பு குழுக்கள், தெற்கு இந்திய பெருங்கடலி ல் காணாமல் போன எம்எச்370 விமானத்தைத் தேடி, செயற்கைக்கோள் இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பைகள் கண்டறியப்பட்டது அங்கு ஒரு பகுதியில் சனிக்கிழமை தங்கள் தேடலைத் தொடங்கியது.

ஆறு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் அந்த பகுதியில் தேடும் போது, ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒரு 24 வரை மீட்டர் (72 அடி) நீளமான பொருட்களை, காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று எச்சரித்தார். அதத் தேடி செல்லும் போது மறைந்துவிட்டது.எனவே அதிகாரிகள் குப்பைகள் மூழ்கிவிட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் 370 முதல் இரண்டு வாரங்களுக்கு போர்டில் இருந்த 239 பேர் காணாமல் போனதாக பிறகும் கூட இந்திய பெருங்கடல் பரந்த பகுதியில் சர்வதேச தேடல் எந்த முடிவையும் எட்டவில்லை.

வெள்ளிக்கிழமை தேடுதலில் வானிலை இது தெற்கு இந்திய பெருங்கடல் சாதகமான உள்ளது என்றும், இப்போது மனித உருவகம் செய்ய சாத்தியம் என்றும் கூறினர்.

எனினும், நேற்று இரவு 7.30 மணிக்கு எபி-3C ஓரியன் தேடல் மற்றும் மீட்பு விமானம் இறங்கிய லெப்டினன்ட் ரஸ்ஸல் ஆடம்ஸ், பத்திரிகையாளரிடம் பேசிய போது, நிலைமைகள் மாறிவிட்டன என்றும் , இன்னும் அவரது போர்க்கப்பலில் எம்எச் 370 அறிகுறிகள் தேடி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்றும் கூறினார்.

6 கோடியில் பிரம்மாண்ட செட் - இது விக்ரமின் ஐ!



தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையிலும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர்தான். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இருந்து இன்று வரையிலும் அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்துமே பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களைக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன.

சியான் விக்ரம், எமிஜேக்சன் நடிப்பில் அவர் இயக்கிவரும் ஐ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி.

அந்த ஒரு பாடல் காட்சியினை தமிழ் சினிமா இதுவரை கண்டிராத மஹா பிரம்மாண்டமான பாடல்காட்சியாக உருவாக்கக் கடுமையாக உழைத்துவருகிறது ஐ படக்குழு. பாடல்காட்சியின் பட்ஜெட்டைக் கேட்டு, இளம் இயக்குனர்கள் வாய்பிளந்து நிற்கின்றனர்.

விக்ரம், எமிஜேக்சன் நடனமாடவுள்ள இப்பாடல் காட்சிக்காக சுமார் 6 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுவருவதாகவும், விரைவில்
இப்பாடல்காட்சி படமாக்கப்படும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

தற்போதைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எடுக்கும் மொத்தப் படத்தின் செலவே ஒன்று அல்லது இரண்டு கோடிகளைத் தாண்டாத நிலையில் ஒரு பாடல்காட்சிக்கு மட்டுமே 6 கோடியென்றால் யார்தான் ஆச்சர்யப்படமாட்டார்கள்?

ஐ திரைப்படம் வருகிற மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடடே அப்டியா..? : பாஸ்ட்புட் கடைக்காரரின் கதையை திருடிய ‘பப்பாளி’ பட டைரக்டர்!



ஜெயங்கொண்டத்தில் ஹோட்டல் தொழிலில் பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்து திரைப்பட பாடலாசிரியராகும் ஆசையில் குடும்பத்தை பிரிந்து சென்னை வந்து தள்ளுவண்டிக் கடையில் எச்சில் தட்டு கழுவும் வேலை செய்து, பிறகு பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்து, ஒரு நிலையில் முயன்று இப்போது சொந்தமாக சென்னையில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் பாஸ்ட் புட் கடையை சொந்தமாக ஒரு சிறு ஓட்டல் துவங்கி, அதை நிர்வகித்தபடியே தளராத தனது லட்சிய முயற்சிகளின் விளைவாக…. இப்போது வேடப்பன், திருப்புகழ், சோக்குசுந்தரம், இந்திரசேனா, காட்டுமல்லி ஆகிய படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான்.

ஆனால் இவரது வாழ்க்கையை படமாக எடுக்கும் அதே நேரம் இவரால் பலன் பெற்று இவரையே புறக்கணித்து ஏமாற்றி இருக்கிறாராம் “பப்பாளி” என்ற படத்தை இயக்கும் கோவிந்தமூர்த்தி.

நடந்தது என்ன என்பதை ஜெயங்கொண்டானே சொல்கிறார்….

கோவிந்த மூர்த்தி தனது முதல் படமான ‘கருப்பசாமி குத்தகைக்காரர்’ எடுத்து முடித்த சமயத்தில் எனது கடைக்கு வந்து எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு கடைக்கு அடிக்கடி வருவார். சொந்த வீட்டில் சாப்பிடுவது போல சாப்பிட்டு விட்டு போவார். அவர் ஒரு வளரும் இயக்குனர் என்ற நிலையில் அப்போது அதை நான் பெருமையாகவே நினைத்தேன். அவர் தனது அடுத்த படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ ஆரம்பித்த சூழ்நிலையில் நான் பாடலாசிரியர் என்பதை அறிந்து என் படத்தில் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். நீங்க நடிக்க கூட செய்யலாம் என்றார். மகிழ்ந்தேன் இரவில் என் கடைக்கு வந்து மணிக்கணக்கில் இருந்துவிட்டு ‘உற்சாகமாக’ கிளம்பிப் போகும் அவருக்கு சிறு செலவும் இருக்காது.

கடையில் அவர் இருக்கும் போது எனக்கு கடன் கொடுத்த பலருடைய அழுத்தங்களுக்கும் நான் ஆளாவேன். அப்போது கூட அவருக்கு ஒரு சிறு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். இந்த நிலையில் ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு தராதபோதும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. அவருக்கு பாடலாசிரியர் விஷயத்தில் ஏதாவது நிர்பந்தம் இருக்கலாம். அடுத்த படத்தில் தருவார் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

அடுத்து அவர் கொஞ்சநாள் படம் இல்லாமல் இருந்தபோது, அவருக்கு நான் வழக்கம் போலவே உதவிகள் செய்தேன். இந்த நிலையில் என் குடும்பம் வாழ்க்கை தொழில் பற்றி அடிக்கடி என்னிடம் பேசினார். தள்ளுவண்டி கடை அனுபவங்கள், வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் நான் பட்ட கஷ்டங்கள், மற்ற பிரச்சினைகளை சமாளிப்பது என்று…நான் என் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.

ஒரு நிலையில் அவர் பேசப்பேச, அவர் எனது வாழ்க்கையை அப்படியே கதையாக எழுதிக்கொண்டு இருக்கிறார் என்பது புரிந்தது. நானும் அவரும் அதை பலமுறை விவாதிப்போம். நான் பல காட்சிகளாகவும் சொன்னேன். இன்னிக்கு நம்ம நாலு பேருக்கு வணக்கம் வச்சா, நமக்கு நானூறு பேர் வணக்கம் வைப்பாங்க என்பது உட்பட பல வசனங்களையும் சொன்னேன். ஒரு முறை அவர் என்னிடம் நீங்க ஏன் சரவணபவன் முதலாளி மாதிரி ஆவதை லட்சியமாக கொள்ளக்கூடாது. என்று கேட்டார். அதுதான் என் லட்சியம் என்றால் நான் ஊரிலேயே இருந்திருப்பேன். அதை போகிற போக்கில் செய்திருப்பேன்.

படித்து கலெக்டராகவும் ஆகி இருப்பேன். அது மட்டுமல்ல…. ஒரு தள்ளுவண்டிக் கடைக்காரன் கலெக்டர் ஆகா முடியாதா? என்றேன். அன்று அவர் முகத்தில் பூரண திருப்தி. அடுத்த சில நாட்கள் அவர் கடைக்கு வரவில்லை. அவர் புதுப்படம் ஒன்றை ஆரம்பித்து விட்டார் என்று தகவல் மட்டும் வந்தது. அப்பறம் என் கடைக்கு வரவே இல்லை. நான் போன் செய்தபோதும் எடுக்கவே இல்லை. நான் பாடல் எழுதும் திறமையை பலமுறை பாராட்டி இருக்கும் அவரிடம் ஒரே ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பலமுறை அவர் ஆபீசுக்கு நடையாய் நடந்தேன். ஒருமுறை கூட அவர் என்னை சந்திக்கவே இல்லை. பலமணி நேரம் உக்கார வைத்துவிட்டு பார்க்க நேரமில்லை என்று தகவல் சொல்லி அனுப்பி விடுவார். நான் நொந்து போனேன். நான் அவருக்கு செய்த உதவிகளை உடன் அனுபவித்த அவரது உதவியாளர்கள் சிலரே, அவர் என்னை புறக்கணிப்பதை சொல்லி மனசாட்சியோடு மிகவும் வருந்தினார்கள். சரி மனிதர் மாறி விட்டார் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் அண்மையில் ‘பப்பாளி’ படத்தின் கதை என்று அவர் கொடுத்த பேட்டிகளில் ஒரு தள்ளு வண்டி கடைக்காரன் ஐ.ஏ.எஸ். ஆவதுதான் படத்தின் கதை என்று சொல்லி இருக்கிறார். விசாரித்த போது படத்தில் எனது காட்சிகள் நான் சொன்ன வசனங்கள். தொழிலில் எனது மேனரிசம் எல்லாம் இருப்பதாக சொல்கிறார்கள். எனது இந்த 31 வயதுக்குள் எனது வாழ்க்கை படமாவதும் அதில் நான் சொன்ன வசனங்கள் இடம் பெறுவதும் மகிழ்ச்சிதான்.

ஆனால் என்னை வைத்து கதை செய்து இருக்கும் இயக்குனர் கோவிந்த மூர்த்தி அவரே வாக்களித்த படி பாடலாசிரியரான எனக்கு ஒரே ஒரு பாடலாவது கொடுத்து இருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு முறை சந்தித்து என்னை ஒரு பாட்டு எழுதச்சொல்லி அதன்பிறகு பாட்டு நான் எதிர்பார்க்கும்படி இல்லை என்றாவது சொல்லியிருக்கலாம்.

ஒருவேளை கவிஞர் யுகபாரதிக்கு எல்லாப் பாடல்களையும் தர வேண்டும் என்று அவர் முடிவு செய்து இருந்தால், அவரே முன்பு சொல்லியபடி, என் கதையில் உருவாகும் படத்தில் எனக்கு நடிக்க ஒரு சின்ன கேரக்டராவது தந்திருக்கலாம். அதற்கும் விருப்பமில்லையா..? என்னை ஒரு முறை சந்தித்து எப்படி இருக்கீங்க..? என்று ஒரு வார்த்தையாவது நட்போடு கேட்டிருக்கலாம்.
என்னை முற்றிலுமாக புறக்கணித்தது தான் என்னால் தாங்க முடியவில்லை.

சினிமா என்பது டீம் வொர்க். இங்கே நட்புதான் ஜெயிக்கும் என்கிறார்கள். நான் அவருக்கு கை கொடுத்து எவ்வளவோ உதவியிருக்க, அவர் எனக்கு கைகொடுத்தால் என்ன குறைந்து விடுவார்? ஒருவருக்கு ஒருவர் உதவி இரண்டு பேருமே முன்னேறுவது தப்பா? என்று கலக்கத்தோடு கேட்கிறார் ஜெயங்கொண்டான்.

அஜீத் மற்றும் ரஜினியுடன் மோத முடிவு செய்தது ஏன்? விஷாலின் விறுவிறு பேட்டி



”தீபாவளிக்கு அஜித் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்தோட ‘பாண்டிய நாடு’ படமும் ரிலீஸ் ஆச்சு. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’னு ரஜினி பட டைட்டில் வெச்சுக்கிட்டே ‘கோச்சடையான்’ படத்தோட மோதுறீங்களே! இது புது கேம் பிளானா?”

”நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போதே, பட பூஜை போடும் அன்னைக்கே ரிலீஸ் தேதியை அறிவிச்சிடணும்னு உறுதியா இருந்தேன். ‘பாண்டிய நாடு’ தீபாவளி ரிலீஸ்னு நாங்க முடிவு பண்ணபோது, வேற என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு தெரியாது. ‘ஆரம்பம்’ ரிலீஸ் உறுதியானதும், ‘வீம்புக்காகப் படத்தை ரிலீஸ் பண்ணணுமா? ரெண்டு வாரம் கழிச்சு வெளியிடலாமே’னு பலரும் சொன்னாங்க. நல்லதோ, கெட்டதோ, எடுத்த முடிவில் உறுதியா இருப்போம்னு ‘பாண்டிய நாடு’ ரிலீஸ் பண்ணேன். நல்ல பேர்தான் கிடைச்சது. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’ ஏப்ரல் இரண்டாவது வாரம் ரிலீஸ்னு முடிவெடுத்திருக்கேன். ஏன்னா, சம்மர் ஹாலிடேஸ் ஆரம்பிக்கிறப்போ நான் நடிச்ச படம் வெளிவர ணும்கிறது, என் ரொம்ப நாள் கனவு!”

”ஏன்… ஏப்ரல் 14-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?”

”அது ஒரு மேஜிக் நாள். ஏன்னா, ஏப்ரல் மாசம் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு நல்ல ரீச் கிடைக்கும். செமத்தியா ஹிட் ஆகும். ‘அயன்’, ‘பையா’, ‘கோ’, ‘ஓ.கே. ஓ.கே.’னு பல படங்கள் ஏப்ரல் மாசம் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. அந்த பாசிட்டிவ் வைபரேஷன் என் படத்துக்கும் கிடைக்கணும்!”

” ‘நான் சிகப்பு மனிதன்’ டிரெய்லர்ல தூக்க வியாதியால் அவதிப்படும் கேரக்டர்னு ஆர்வம் உண்டாக்கிறீங்க. பஸ் ஏறி வந்து ரவுடிகளை வெளுக்கும் விஷாலுக்கு பிரேக் கொடுத்துட்டீங்களா?”

” ‘பாண்டிய நாடு’வில் சாதுவா அடக்கி வாசிச்சதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அந்தத் தைரியத்தில்தான் ‘நார்கொலெப்ஸி’ வியாதி பாதிக்கப்பட்டவனா நடிக்கிறேன். இயக்குநர் திருவுக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு நார்கொலெப்ஸி வியாதி இருக்கு. ‘அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவங்க, ரொம்பக் கோபம் வந்தா தூங்கிடுவாங்க’னு திரு சொன்னார். ஆனா, அந்த கேரக்டருக்கு எந்த ரெஃபெரன்ஸும் இல்லை. யூ-டியூப்ல நார்கொலெப்ஸி பாதிக்கப்பட்டவங்க வீடியோ பார்த்துதான், ஹோம்வொர்க் பண்ணேன். அந்த வியாதி காரணமா எனக்கு யாரும் வேலை தர மாட்டாங்க. ஆன்லைன்ல வேலை பார்ப்பேன். அந்த வியாதி பாதிக்கப்பட்டவன் அடிச்சா எப்படி இருக்கும்னு உங்களை யோசிக்க வெக்கிற திரைக்கதை. ரொம்பப் புதுசா இருக்கும் படம்!”

”உங்ககூட நடிக்கிறதுனா லட்சுமி மேனன் கிளாமரா நடிக்கிறாங்க, பாலா படத்துல வரலட்சுமி நடிக்க நீங்க சிபாரிசு பண்றீங்க, ஸ்ருதிக்குக் கதை சொல்லப்போறீங்கனு… பல ஹீரோயின்களோட உங்களைச் சம்பந்தப்படுத்தி செய்தி வந்துட்டே இருக்கே!”

”ஓ… லட்சுமி மேனன்கூட தண்ணிக்கு அடியில் இருக்கிற மாதிரி ஸ்டில் பார்த்துக் கேக்கிறீங்களா? அந்த கேரக்டர்ல சின்ன சர்ப்ரைஸ் இருக்கு. நிச்சயம் பரபரப்புக்காகவோ, கிளாமருக்காகவோ அந்த சீன் வெக்கலை. படம் பார்க்கும்போது அது எவ்வளவு அவசியம்னு உங்களுக்குப் புரியும்.

பாலா சார் படத்தில் யாராச்சும் சிபாரிசு பண்ணா, நடிச்சுட முடியுமா என்ன? ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்துதான் வரூவை ஓ.கே. பண்ணாங்க. பாலா சாரின் எல்லாப் படங்களிலும் நான் ஹீரோவா நடிக்கணும். அது மட்டும்தான் என் ஆசை.

ஒரு வழியா முடிவுக்கு வந்த பிரசன்னாவால் நொந்த சினேகா...!



இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள் தான் இதில் விதிவிலக்கு. மற்றபடி நடிகைகளுக்கு அவர்களது கணவர்கள் ‘ரெட்கார்டு’ போட்டு விடுவார்கள். அதிலும் சில நடிகைகளை அவரது கணவன்மார்கள் ஹீரோயினாக நடிக்க விடுவதில்லை. மாறாக அக்கா, அண்ணி, அம்மா போண்ற கேரக்டர்களுக்கு மட்டுமே பெர்மிஷன் கொடுப்பார்கள்.

நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்த நடிகர் பிரசன்னாவும் இப்போது சினேகாவின் நடிப்பாசைக்கு திடீர் தடை போட்டிருக்கிறாராம். ஏற்கனவே ஜவுளிக்கடை திறப்பு, நகைக்கடை திறப்பு, ரியல் எஸ்டேட் என எல்லாத் திறப்பு விழாக்களுக்கும் போய் பணம் சம்பாதிக்கிறார் சினேகா. கூடவே தேடி வருகிற விளம்பரப்படங்களையும் விட்டு வைப்பதில்லை. எந்த பப்ளிசிட்டியாக இருந்தாலும் கூடவே பிரசன்னாவையும் துணைக்கு அழைத்துச் செல்லும் அவர் பிரசன்னாவுக்கும் சேர்த்து தான் வசூல் செய்கிறார்.

இதற்கிடையே சினேகா தற்போது பிரகாஷ்ராஜ் தயாரித்து வரும் ‘உன் சமையலறையில்’ உட்பட ஒரு தெலுங்கு, ஒரு கன்னடப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரின் இந்த ஹீரோயின் தரிசனத்துக்குத்தான் திடீர் தடை போட்டிருக்கிறார் பிரசன்னா. ஆனால் சினேகாவோ என்னால் நடிக்காமல் இருக்க முடியாது என்று பிரசன்னாவின் பேச்சை மீறி அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார்.

அப்புறமென்ன, ”நான் எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டேங்கிறா” என்பது தான் பிரசன்னாவின் ஒரே புலம்பலாக இருக்கிறதாம்

பிரச்னைகளால் நின்று போன பிரபல நடிகர்களின் படங்கள்



தமிழில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பட ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும். பிறகு பல காரணங்களால் நின்றுவிடும். ஓரிரு படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே கைவிடப்படும். அப்படி நாம் கேள்விப்பட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே.


ரஜினியின் ராணா, கமல்ஹாசனின் மருதநாயகம், மர்மயோகி, கார்த்திக் நடித்த மனதில், அத்தை மகன், லிவிங்ஸ்டன் நடித்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், பிரபு நடித்த ஆயிரம் பொய் சொல்லி, சத்யராஜ் நடித்த திருநாள், பேட்டை முதல் கோட்டை வரை, குலசேகரனும் கூலிப்படையும், உதயா நடித்த டில்லி, பூங்குயிலே, காதல் சாதி போன்ற படங்களில் ஓரிரு படங்களின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டது.


ஆதி, ராஜ்கிரண் நடித்த சரித்திரம், சிம்பு நடித்த கெட்டவன், தனுஷ் நடித்த டாக்டர்ஸ், விக்ரம் நடித்த சிந்துபாத், கரிகாலன், சூர்யா நடித்த சென்னையில் ஒரு மழைக்காலம், பிரபுதேவா நடித்த களவாடிய பொழுதுகள், மயூர் நடித்த சத்தமின்றி முத்தமிடு, பலே, சரத்குமார் நடித்த புகழ், விடியல், பிரசாந்த் நடித்த விண்ணோடும் முகிலோடும், என்ன விலை அழகே, பிரகாஷ்ராஜ் நடித்த பிறந்த நாள், நெப்போலியன் நடித்த பரணி, விவேக் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன், ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, வெங்கட் பிரபு மற்றும் சங்கீதா அறிமுகமான பூஞ்சோலை, விஜய் சேதுபதி நடித்த சங்குதேவன், ரம்பா நடித்த விடியும் வரை காத்திரு போன்ற படங்களில், ஓரிரு படங்களின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு நிறுத்தப்பட்டன.


சில படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில், தவிர்க்க முடியாத பிரச்னை காரணமாக முடக்கப்பட்டுள்ளன. விஷால் நடித்த மதகஜராஜா படத்துக்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளன. ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. 

லேகியம் விற்பனை செய்ய தயாராகிறார் பரத்!



சில சேனல்களை ஓப்பன் பண்ணினால் சித்த வைத்தியர்களின் ஆக்ரமிப்புதான் அதிகமாக உள்ளது. பாட்டி வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்று சொல்லிக்கொண்டு மூலிகை மருந்துகளை விற்பனை செய்கிறார்கள்.


அதிலும் சிலர் செக்ஸ் சம்பந்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்காக செய்யும் பிரசாரங்களை சமீபகாலமாக சில படங்களில் காமெடியாகவும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.


அந்த வகையில், சமீபத்தில் வெளியாகிய நவீன சரஸ்வதி சபதம் படத்தில் பரம்பரை சித்த வைத்தியராகத்தான் நடித்திருந்தார் ஜெய். அவரைத் தொடர்ந்து இப்போது பரத்தும் ஒரு படத்தில் பரம்பரை சித்த வைத்தியராக நடிக்கிறார்.


சசி இயக்கிய 555 படத்திற்கு பிறகு தமிழில் பரத் நடிக்கும் அப்படத்துக்கு ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


முந்தைய படங்களுக்காக தனது உடல்கட்டை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றிய பரத், இப்படத்திற்காக சேனல்களில் தோன்றும் சித்த வைத்தியர்களைப்போன்று தனது பாடிலாங்குவேஜை மாற்றி வருபவர்,


அவர்கள் நோய்களைப் பற்றி எப்படி எப்படி கமெண்ட் கொடுக்கிறார்கள் என்பதையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்.


ஆக, ஜெய்யைத் தொடர்ந்து பரத்தும் லேகியம் விற்பனை செய்ய தயாராகி விட்டார்.

கமல் படத்தில் ரஜினி நடிக்கிறாராமே!



ஆரம்ப காலங்களில் கமல் நாயகனாக நடித்த படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவான பிறகுதான் தனித்துவமாக நடிக்கத் தொடங்கினார்.


இதற்கு கமலும் ஒரு முக்கிய காரணம். நாம் இருவரும் இணைந்து நடிப்பதால் ஒரு சம்பளத்தைதான் இருவருக்குமே பிரித்து தருகிறார்கள்.


அதுவே தனித்தனியாக நடித்தால் இருவருக்கும் தனி சம்பளம் கிடைக்கும் என்று அப்போது ரஜினிக்கு ஐடியா கொடுத்தார்.


அதையடுத்து இருவருமே அதை பின்பற்றி தங்களுக்கென ஒரு வியாபார வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனால், பின்னர் எந்தவொரு படத்திலும் ரஜினி-கமல் இருவரும இணையவே இல்லை.


அப்படி இணைந்தால் அந்த படங்களின் பட்ஜெட் 100 முதல் 150 கோடி ஆகும் என்பதால் எந்த படாதிபதியும் ரிஸ்க் எடுக்க துணியவில்லை.


இந்த நிலையில், தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவதாக கூறப்படுகிறது.


அதாவது 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக கமல் நடிக்கும் காட்சிகளில் அவரை நடிகனாக உருவாக்கும் வேடத்தில் அவரது குருநாதரான கே.பாலசந்தரே நடிக்கிறார்.


 கமலை அவர் உருவாக்கிய காலத்தில் ரஜினியும் நடித்தவர் என்பதால், ஒரு வீடியோ கான்பரன்சிங் காட்சியில் ரஜினியும் தோன்றுகிறாராம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ரஜினி ஓ.கே சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.

சர்ச்சையிலிருந்து மீண்ட சீனு ராமசாமி துவக்கினார் வேலையை...!



திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் ‘இடம் பொருள் ஏவல்’


படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இப்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்தப் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் முடிவடையுமாம்!


இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவிருக்கிறது.


 இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,


 அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்து வருகிறார்.


பாடல்களை கவியரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.


’நீர்ப்பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம்,


சீனுராமியும், விஜய் சேதுபதியும் இணையும் முதல் படம்,


யுவன் – வைரமுத்து இணையும் படம் என பல ஸ்பெஷல்கள் உள்ள இப்படத்தின் மீது


இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

அம்பூட்டு நல்லவனாய்யா நீ...... வியக்க வைத்த நடிகர்!



சமீப நாட்களாக திரைத்துறையிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்(விமர்சிக்கப்பட்டவர்) சிவகார்த்திகேயன். தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மான் கராத்தே திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.


அப்போது ‘உங்களது ஒவ்வொரு படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றதே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய சிவகார்த்திகேயன் “சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் கதைக்கு தேவைப்படுவதால் என் படங்களில் இருக்கிறதே தவிர, 


என் சொந்ஹ முயற்சியால் புகுத்தப்பட்டவை அல்ல. அப்படி இருந்தும் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதை நான் படங்களில் தவிர்த்து விடுவேன். படத்திற்காகத்தான் நான் புகைப் பிடிப்பது, மது அருந்துவது ஆகியவற்றை செய்கிறேன். 


சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது.(சொந்த வாழ்க்கையில் நான் இதுவரை புகைப் பிடித்ததோ, மது அருந்தியதோ கிடையாது)” என்று கூறினார்.

 மேலும் அவர் அடுத்ததாக நடிக்கும் இரு படங்களின் கதாபாத்திரங்களின் தனிச்சிறப்பே குடிக்காதவன், புகை பிடிக்காதவன் என்பது தானாம். ஆனால் சிவகார்த்திகேயன் இதுவரை குடித்ததுமில்லை,


 சிகரெட் பிடித்ததுமில்லை என்று கூறியதைக் கேட்ட அனைவரும் அம்பூட்டு நல்லவனாய்யா நீ.... என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை படங்களில் மட்டும் இதுபோன்ற காட்சிகளை தவிர்த்தால் போதும் என்கிறது ரசிகர்களையே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகம்.

லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம்...!திடுக்கிடும் பின்ன்னி...!



ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார் லிங்குசாமி. ஒரு நேரத்தில் ஒரு படம் தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம்.

அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கும் முன்னர் கடுமையாக நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். ஆனால் ஒரே தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கின்றார் என்பதே இப்போதைய கோலிவுட்டின் உச்சபட்ச டாக்.

இதுகுறித்து கோலிவுட்டில் பலவித கிசுகிசுக்கள் கசிந்து வருகிறது. மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி லிங்குசாமிக்கு சுமார் 200 கோடி ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை வைத்துதான் லிங்குசாமி இத்தனை படங்களையும் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்பினரோ மதுரை அன்புவிடம் மொத்தமாக 50 கோடிக்கும் மேல் லிங்குசாமி கடன் வாங்கி ஒவ்வொரு மாதமும் கரெக்டாக வட்டி கொடுத்து வருவதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டு கிசுகிசுக்களும் கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அஞ்சானை காப்பி அடித்த பென்சில் ...!



லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், ‘அஞ்சான்’.


 இந்தப் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.


 பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’


என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன்!


உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’


 என்பது குறிப்பிடத்தக்கது!


 ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும்


‘பென்சில்’ படத்திலும் இந்த கேமராவை பயன்படுத்துகிறார்கள்!


முதலில் வேறு கேமராவை பயன்படுத்தி ‘பென்சில்’


படத்தின் படப்பிடிப்பை துவங்கிய படக்குழுவினர் இப்போது


 ‘ரெட் டிராகன்’ கேமராவை வைத்து பென்சிலை படம் பிடித்து வருகிறார்கள்! 

யாசகன் - திரைவிமர்சனம்...! [‘யாசகன்’ - வித்தியாசமானவன் ]



நடிகர் : மகேஷ்

நடிகை : நிரஞ்சனா

இயக்குனர் : துரைவாணன்

இசை : சதீஷ் சக்ரவர்த்தி

ஓளிப்பதிவு : பாபு

மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர். யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் உடனே சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்.

மகேஷ் ஒரு நாள் வேலை தேடி ஒரு கம்பெனிக்கு செல்கிறார். அங்கு புதியதாக திருமணம் ஆன மகேஷின் நண்பரும் வேலை தேடி வருகிறார். மகேஷ் வேலையை விட்டுக் கொடுத்தால் தான் நண்பருக்கு வேலை கிடைக்கும் என்று நினைத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இந்த மாதிரி பல தியாகங்களை செய்து வருகிறார் மகேஷ்.

இதற்கிடையில் மகேஷ் அப்பாவின் குடும்ப நண்பரின் மகளான நாயகி நிரஞ்சனா, மகேஷையே சுற்றி சுற்றி வருகிறார். முதலில் கண்டுக்கொள்ளாத மகேஷ், பிறகு நிரஞ்சனா காதலை சொன்னவுடன் ஏற்றுக் கொள்கிறார்.

ஒருநாள் மகேஷின் வீட்டு அருகில் இருக்கும் ஒரு சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதைக் கண்ட மகேஷ் அவர்களை பின் தொடர்ந்து மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்கிறார்கள். நிறைய பணம் தேவை என்பதால் மனம் வருந்துகிறார் சிறுமியின் தாயார். இவருக்கு ஆறுதல் கூறிவிட்டு பணத்திற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லுகிறார் மகேஷ்.

சிறுமியை காப்பாற்றுவதற்காக தன் சகோதரியான ஜானவியிடம் பணம் கேட்கிறார். அதற்கு ஜானவி பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். பிறகு தான் உதவி செய்த அனைவரிடமும் சென்று பணம் கேட்கிறார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வரவில்லை. இறுதியாக ஏற்கனவே தான் உதவி செய்த ஒருவரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்கிறார். அவரும் பணம் தர மறுக்க  மனமுடைந்து அங்கிருந்து செல்கிறார். மகேஷ் பணத்தை கேட்டவரிடம் இருந்த பணம் திடீரென காணாமல் போக, இதற்கு காரணம் மகேஷ் தான் என்று போலீசில் புகார் செய்கிறார் அவர். இதனால் போலீஸ் மகேஷை கைது செய்கிறது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாததால் மகேஷ் வெளியே வருகிறார்.

வெளியில் வரும் மகேஷ், சிறுமி வீட்டிற்குச் சென்று பார்த்தால் சிறுமி இறந்து விடுகிறாள். இதனால் மனமுடைந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஆகிவிடுகிறார் மகேஷ். இதற்கிடையில் நிரஞ்சனாவின் அப்பாவிற்கு பணி இடம் மாற்றம் ஆகி வேறு ஊருக்குச் சென்று விடுகிறார்.

மகேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் குடும்பத்தினர் வெறுக்கின்றனர். இறுதியில் மகேசின் மனநிலை சரியானதா? காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

‘அங்காடித் தெரு’ வில் நடித்த மகேஷ், அந்தப் படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு நிகரான பாத்திரம்தான். ஆனால், அது வலுவாக இல்லை என்றே சொல்லலாம். படம் முழுக்க சோர்வாகவே வருகிறார். கேரளத்து வரவான நாயகி நிரஞ்சனா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷின் அக்காவாக வரும் ஜானவி, நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 2 பாடல்கள் அருமை. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம்.

மதுரையில் நடத்த உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ள துரைவாணன், கதாபாத்திர தேர்விலும், கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் காட்சிகளை ஒருங்கினைப்பில் சற்று தடுமாறியிருக்கிறார். திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘யாசகன்’ - வித்தியாசமானவன். 

’வழக்கு எண் 18/9’ பட்டறையிலிருந்து இன்னொரு படம்!



பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களில் உதவியளராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கும் படம் ’13’. இந்தப் படத்தில் மனோஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷீரா என்ற புதுமுகம் நடிக்கிறார்.


ஷீராவின் பெண் குழந்தைகளாக சதன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகிய இரு குழந்தைகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக டி.செந்தில், ‘ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ்’ சார்பாக ஆர்.கே.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.


பாலாஜி சக்திவேலின் சினிமா பட்டறையிலிருந்து வெளியே வந்து படம் இயக்கும் முதல் மாணவராம் சுரேஷ்! ‘‘ பொதுவாக ‘13’ ன்னாலே அதிர்ஷ்டம் இல்லாத நம்பர்னு சொல்லுவாங்க.


ஆனா இந்த கதையோட திருப்பமே 13-ங்கிற தேதியில நடக்கிற ஒரு மகிழ்ச்சியான, லக்கியான விஷயத்திலிருநந்து ஆரம்பிக்கிற மாதிரி இருக்கிறதால படத்திற்கு ‘13’ன்னு டைட்டில் வைத்திருக்கோம்’’ என்கிறார் இயக்குனர் சுரேஷ்!


இந்தப் படத்திற்கு ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, பவன் இசை அமைக்கிறார். எடிட்டிங்கை பகத்சிங் கவனிக்கிறார்.

மகா கஞ்சனாக மாறிய கஞ்சா கருப்பு



தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காந்தர்வன்”

இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, காதல்தண்டபாணி, நெல்லைசிவா,சபாபதி,ஆண்டமுத்து, வெள்ளைசுப்பையா, செல்லத்துரை,கிரேன் மனோகர், கோவைசெந்தில்குமார், ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அனில் கே.சேகர் ,

இசை – அலெக்ஸ்பால்

எடிட்டிங் – எஸ்.எம்.வி.சுப்பு

பாடல்கள் – கவிஞர் வாலி, விவேகா, முத்துவிஜயன், கவின்சம்பத்

கலை – எம்.ஏ.ராமதுரை , நடனம் – தினா.

ஸ்டன்ட் – தீப்பொறி நித்யா

தயாரிப்பு நிர்வாகம் – நாகராஜன்

கதை,திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சலங்கைதுரை . இவர் கரண் – வடிவேலு நடித்த காத்தவராயன் வெற்றிப் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்:

இந்த படத்திற்காக சமீபத்தில் கதிர் – ஹனிரோஸ் பங்கேற்ற “நெருப்பாய் நெருப்பாய் தெரியுது நிழலே ” என்ற பாடல் காட்சி சென்னையில் படமாக்கப் பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கி பாண்டிச்சேரி வரை நடைபெற்றது.

காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். கஞ்சாகருப்பு இந்த படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறார். இந்தப் பட ரிலீஸுக்கு பிறகு கஞ்சாகருப்புவை கஞ்ச கருப்பு என்று அழைப்பார்கள் அந்த அளவிற்கு படத்தில் அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது.

அதே மாதிரி கதிர் நிச்சயம் பெரிய அளவிற்கு வரக்கூடிய நடிகராக காந்தர்வர் மூலம் மாறுவார் என்று கூறினார் இயகுனர்.

Friday 21 March 2014

ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. சந்தானத்தின் கலகல பேட்டி



என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ. இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா. ‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா.

 தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல இருந்த எனக்குப் புரிஞ்சது!”-ஆர்ம்ஸ் ஏற்றி, பாலீஷ் கூட்டி பளபளக்கிறார் சந்தானம்.

100 படங்களில் காமெடியன் என்ற மைல்கல்லுக்குப் பிறகு, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் ஹீரோ என்ட்ரி கொடுக்கிறார்.

”ஆர்யா, அப்படிச் சொன்னார். மத்தவங்கள்லாம் என்ன சொன்னாங்க?”

”சிம்பு, ‘என்ன ஹீரோ… என்ன பண்றீங்க?’னு விசாரிச்சார். ‘அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க’ன்னேன். ‘ஏன்… என்னாச்சு?’னு கேட்டார். ‘நான் ஹீரோவா நடிக்கிறதுக்குள்ள வி.டி.வி.கணேஷ் எல்லாம் ஹீரோ ஆகிட்டார். ‘ஏண்டா ஹீரோ ஆனோம்?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. அதனால நீங்க ‘சந்தானம்னே கூப்பிடுங்க’ன்னேன்.


 சிம்பு லைனை கட் பண்ணதும் பக்கத்துல இருந்த கணேஷ், ‘ஏண்டா அவரு உனக்கு போன் பண்ணார்னா, ஊர் உலகத்தைப் பத்தி ஏதாச்சும் பேசுங்க. என்னை ஏண்டா ஊறுகாய் ஆக்குறீங்க?’னு காண்டானார். ‘ஹீரோவா நடிக்கிற. முடி எல்லாம் கரெக்டா இருக்கா. மார்க்கெட்ல ஏகப்பட்ட புது விக் வந்திருக்கு. சாம்பிள் பார்த்தியா?’னு மெசேஜ் பண்ணார் ஜீவா. ‘நானும் யூத்தான்யா…’னு ரிப்ளை பண்ணேன். இப்படி… பல போட்டி பொறாமைகளுக்கு மத்தியில்தான் ஹீரோவா நடிக்க வேண்டியிருக்கு!”

”காமெடிப் பயணம் தெளிவாப் போயிட்டு இருக்கிறப்ப, ஏன் இந்தத் திடீர் திருப்பம்?”

”பழைய பல்லவிதான். ஆனா, இது, இந்தக் கதைக்காக எடுத்த முடிவு. இந்தப் படத்துல ஒரு காமெடியன்தான் ஹீரோவா நடிக்க முடியும். ஏன்னா, அப்பாவியாவும் இருக்கணும்; அப்ளாஸும் அள்ளணும். அப்போ ஒரு எஸ்டாபிளிஷ்டு ஹீரோவால இதைப் பண்ண முடியாது. புதுமுகமும் தாங்க மாட்டார். ஆக, எனக்கான சப்ஜெக்ட்டாத் தோணுச்சு. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.

மத்த படங்களைவிட கொஞ்சம் எக்ஸ்ட்ரா காமெடி, பளிச் பன்ச் மட்டும் சேர்த்துட்டு நான் ஹீரோ ஆகலை. ‘நான் எது பண்ணாலும் தியேட்டர்ல கைதட்டுவாங்க’னும் நினைக்கலை. ஸ்க்ரிப்ட்ல ஆரம்பிச்சு என் ஸ்கின்டோன் வரைக்கும் சிறிசும் பெருசுமா நிறைய சுவாரஸ்யம் சேர்த்திருக்கோம். படத்துல டான்ஸ், சேஸிங், ரன்னிங்னு நிறைய இருக்கு.


திடீர்னு ஒருநாள் கொஞ்ச தூரம் ஓடிட்டு, ‘கால் பிடிக்குது, தொடை பிடிக்குது’னு உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து நடிச்சா, ரெண்டு வருஷமாகும் படத்தை முடிக்க! அதுவும் போக, ‘வயித்தைப் பாரு தலகாணி மாதிரி வெச்சிருக்கான்’னு நாமளே பலரை ஓட்டியிருக்கோம். இப்போ நாமளும் அப்படி வந்து நின்னா, எல்லாரும் சிரிப்பாங்கள்ல. அதனால ஜிம் ஓட்டம், டான்ஸ் ஆட்டம்னு எல்லா ஏரியாலயும் பட்டி, டிங்கரிங் பார்த்துட்டுத்தான் நடிக்க ஆரம்பிச்சேன். பார்த்தா கொஞ்சாமாவது ‘ஹீரோ லுக்’ வருதுல்ல!”

”வருது… வருது… ஆனா, அது மட்டும் போதுமா?”

”எவ்வளவோ யோசிக்கிறோம்… அதை யோசிக்க மாட்டோமா? ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’-வில் பவர்ஸ்டார் மாதிரி இந்தப் படத்துலயும் ஒரு சர்ப்ரைஸ் மேஜிக் வெச்சிருக்கோம். ஆனா, அதைப் பத்தி அப்புறம் பேசலாம்!”

”இப்பவே சொல்லுங்க…!” என்று அழுத்திக் கேட்டதும்…

” ‘லட்டுக்கு ஒரு பவர்ஸ்டார்’னா ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ல ஒரு சோலார்ஸ்டார். ஆமா ப்ரோ… நம்ம ராஜகுமாரன் சார், படத்துல பிரமாதமான ஒரு கேரக்டர் பண்றார். ‘காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப. கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியா?’னு என்கிட்ட கேட்பார். ‘பார்த்ததில்லை’ம்பேன். ‘இதுல நீ பார்ப்ப’னு சொல்வார். இது ஒரு டீஸர்தான். இப்படி படம் முழுக்க அவரோட அழும்பு தூள் பறக்கும்!

படத்தோட இயக்குநர் ஸ்ரீநாத், என் நண்பன். ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ல நடிக்கும்போதே, ‘நீ, நான், பிரேம்ஜி மூணு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் மச்சான். நான்தான் டைரக்ஷன்’னு சொல்லிட்டு இருப்பான். அவனுக்கு டைரக்ஷன்தான் ஆர்வம். ஆனா, நடிக்கும் வாய்ப்புதான் வந்துச்சு. இப்போ அவன் திறமையை நிரூபிக்கிற மாதிரி இந்தப் படம் அமைஞ்சிருக்கு!”

”உங்க ஆதர்சம் கவுண்டமணியும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டாரே!”

”எனக்கு தங்கவேலு, கவுண்டமணி… இவங்க ரெண்டு பேரும்தான் இன்ஸ்பிரேஷன்னு பல தடவை சொல்லியிருக்கேன். கவுண்டமணி அண்ணன்கிட்ட எப்பப் பேசினாலும், செம லந்து கொடுப்பார். ஏதோ ஒரு படம் வந்து செம மொக்கை வாங்கின சமயத்துல பேசினேன். ‘அண்ணே அந்தப் படம் பயங்கரமாப் போயிட்டு இருக்கு. டிக்கெட்டே கிடைக்கலையாம்’னு சொன்னேன். பட்டுனு, ‘ஏன் டிக்கெட்டே அடிக்கலையா?’னு கேட்டார் பாருங்க


ஒரு கேள்வி… அதுதான் கவுண்டர்!


சுந்தர்.சி, ராஜேஷ், பூபதி பாண்டியன், சுராஜ்னு காமெடியில பின்ற எல்லா டைரக்டர்ஸும், ‘அவர்கூட சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க. சூப்பரா இருக்கும்’னு சொல்லுவாங்க. அந்த ஐடியா எனக்கும் உண்டு. ஆனா, அவர்கிட்ட இதைப் பத்தி நான் இதுவரை பேசினதே இல்லை. இப்போ இந்தப் பேட்டி மூலமா சொல்றேன்… இப்ப அவரும் ஹீரோவாப் பண்ணிட்டு இருக்கார். நானும் பண்றேன். அதனால எங்க ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்துச்சுனா, அண்ணன்கிட்ட போய் கேட்கலாம்னு இருக்கேன்

வரலெட்சுமியை சினிமாவை விட்டு ஓட வைத்தது பாலா தானா?



பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை.


இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே.


வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம்.


மேலும் படத்திற்காக சசிகுமார் தனது கெட்டப்பை மாற்ற, தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.


இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்

அமலாபாலை கூட்டிக்கொண்டு காட்டுக்குப் போகும் டைரக்டர் : எதுக்குன்னு மட்டும் கேட்காதீங்க…



‘நிமிர்ந்து நில்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி. பல மாதங்களாக தயாரிப்பில் கிடந்த படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டதில் கொஞ்சம் மன வேதனையுடன் தான் இருந்தாராம் சமுத்திரக்கனி. ”என் எதிரிக்குக் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது” என்று தான் அந்த நேரத்தில் யோசித்தாராம் சமுத்திரக்கனி.

இதனால் அடுத்த படத்தை ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கும் அவர் அந்தப்படம் முழுவதையும் காட்டுக்குள் தான் எடுக்கப் போகிறார்.

“இந்தியாவில் 42 சதவீதம் காடுகள் தான் இருக்கு. அங்க வாழ்ற மக்கள் ரொம்ம ரொம்ப அதிகம். ஆனா நாம அவங்களைப் பத்தி எப்போதுமே கவலைப்பட்டது இல்லை. அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்லை. அவங்களோட ரியல் ஃலைப்பை பத்தித்தான் படமா எடுக்கப்போறேன் என்றார்.

ஊர்ப்பக்கம் போனா கிருஷ்ணா என்ற பெயரை சுருக்கு கிட்னா கிட்னா என்று கூப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைத்தான் இந்தப்படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இந்தப் படத்தில் அமலாபாலை ஹீரோயினாக்கி இருக்கும் அவர் பிறந்தது முதல் 45 வயது பாட்டி வரையான ஒவ்வொரு காலகட்ட கெட்டப்பையும் படத்தில் காட்டப்போகிறார். படத்தின் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். ஆனால் அமலாபால் அவருக்கு மகளாக நடிக்கிறார்.

க்ரேட் எஸ்கேப்.

ஈட்டியாக பாயும் அதர்வா!



ஸ்ரீதிவ்யா என்று சொல்வதைவிட ஊதா கலரு ரிப்பன்... என்று சொன்னால் தான் பலருக்கும் நினைவுக்கு வருவார் அந்த நடிகை. சிவகார்த்திகேயனோடு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா இப்போது பென்சில் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ஜோடியாக நடித்து வருகிறார்.


அடுத்து இந்த ஊதா கலரு ரிப்பன் அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஈட்டி’ என்ற படத்தில் நடிக்கிறார்.


இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ரவி அரசு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.


ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்கிறார். மைக்கேல் ராயப்பனுடன் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடிக்கிறார்.


ஈட்டி படத்தின் நான்கு பாடல் முடிவந்துவிட்டது. இவ்வருடத்தின் சிறந்த பாடல்கள் வரிசையில் ஈட்டி படத்தின் பாடல்கள் இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் கூறுகிறார். ஈட்டி படத்தின் படபிடிப்பு தஞ்சாவூரில் நடந்து வருகிறது. ‘பரதேசி’யில் பிரமாதமாக நடித்து அதிரவைத்த அதர்வா, இப்படத்தில் ஈட்டியாக பாய்வார் என எதிர்பார்க்கலாம்.

மான் கராத்தே இசை விமர்சனம்



எதிர்நீச்சல்’ ஆல்பத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதோடு, ஸ்ருதிஹாசன், தேவா, ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன் என பாடகர்களிலும் வெரைட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மற்ற ரசிகர்களைவிட ‘மான் கராத்தே’ ஆல்பம் எப்படி வருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ‘தல தளபதி’ ரசிகர்களுக்குதான் ஆர்வம் அதிகம். பின்னே... அஜித், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறாரே அனிருத். இவ்வளவு பில்டப்களுக்கும் ஈடுகொடுத்திருக்கிறதா ‘மான் கராத்தே’வின் பாடல்கள்!

மாஞ்சா...
பாடியவர் : அனிருத்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி

வழக்கமாக தன் இசையமைப்பில் வெளிவரும் ஆல்பங்களில் குறைந்தது இரண்டு பாடல்களையாவது பாடிவிடுவார் அனிருத். ‘மான் கராத்தே’ ஆல்பத்தில் முதல் பாடலையே தன் குரலில் ஆரம்பித்து பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார். இந்த வெஸ்டர்ன் டைப் பாடலின் பின்னணியில் கர்நாடக இசையை லேசாக ஒலிக்கவிட்டு பாடலை வித்தியாசமாக அமைத்திருக்கிறார் அனிருத். குறிப்பாக கர்னாடிக் கோரஸும், தவிலின் இசையையும் ரசனையாக கலக்க வைத்திருக்கிறார் அனிருத். கார்க்கியின் ஸ்டைல் வரிகளும், அனிருத்தின் குரலும் இந்தப் பாடலுக்கு பெரும் பலம். டிரம்ஸ், கிடார், பியானோ, தவில் என எல்லாவிதமான வாத்தியங்களையும் கலந்து கட்டி ரசிக்க வைத்திருக்கிறார். டிரைலரில் வரும் இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயனின் டான்ஸ் மூவ்மெண்ட் வாய்பிளக்க வைக்கிறது.

டார்லிங் டம்பக்கு....
பாடியவர்கள் : பென்னி தயாள், சுனிதி சௌகான்
பாடலாசிரியர் : யுகபாரதி

ஃபர்ஸ்ட் லுக் டீஸரின் பின்னணியில் ஏற்கெனவே ஹிட்டடித்துவிட்ட ட்யூன் என்பதால் பரிச்சயத்துடன் இந்தப் பாடலுக்குள் நம்மால் உள்புக முடிகிறது. எனர்ஜி கொப்பளிக்கும் இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்திருப்பவர்கள் பென்னி தயாளும், சுனிதி சௌகானும். ‘டார்லிங் டம்பக்கு... கிருடா... கிருடா....’ என பென்னி தொடங்கி வைக்க, ‘பாவிப்பயலே இவ உயிர்மூச்சுல கடைபோடுற...’ என சுனிதி ஆரம்பிக்கும் ஸ்டைலே சூப்பராக இருக்கிறது. கிடாரின் ஜாலங்கள் நிறைந்திருக்கும் இந்த போக் பாடலை திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆடப்போவது நிச்சயம். சிவகார்த்திகேயன், ஹன்சிகாவின் ‘லுங்கி டான்ஸ்’ இப்பாடலுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமையும். யுகபாரதியின் பாடல் வரிகள் ரசிக்கும்படி உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்த பாடலாக நீண்ட நாட்கள் டிவிகளில் இடம்பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது இந்த ‘டார்லிங் டம்பக்கு’!

உன் விழிகளில்...
பாடியவர்கள் : அனிருத், ஸ்ருதிஹாசன்
பாடலாசிரியர் :ஆர்.டி.ராஜா

ஆல்பத்தின் இந்த ஒரே மெலடிப் பாடலைப் பாடியிருப்பவர்கள் அனிருத்தும், ஸ்ருதிஹாசனும். வெஸ்டர்ன் ‘பேஸ்’ சப்தங்களும், கர்நாடிக் வயலினும் கலவையாக கலந்து ஒலிக்கிறது இப்பாடலில். சரணத்தை அனிருத் பாட, பல்லவியில் அவரோடு கைகோர்த்திருக்கிறார் ஸ்ருதி. புதிதாக எதுவும் இந்தப் பாடலில் நம்மை ஈர்க்கவில்லை என்றாலும், கேட்பதற்கு போரடிக்காத ரகம்தான். ஆச்சரியமாக இப்பாடலின் மூலம் ‘கவிஞர்’ அவதாரம் எடுத்திருப்பவர் ‘மான் கராத்தே’வின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ‘ஹேப்பி பர்த்டே’ ட்யூனோடு இப்பாடல் முடிவதால், அதற்கான காட்சி படத்தில் இடம்பிடித்திருக்கலாம்.

ராயபுரம் பீட்டரு...
பாடியவர்கள் : ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன்
பாடலாசிரியர் : ஆர்.டி.ராஜா

ரசிகர்களுக்கு வித்தியாச விருந்து கொடுக்கும் முனைப்போடு இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயனையும், நாட்டுப்புற பாடல் ஸ்பெஷல் ‘பரவை’ முனியம்மாவையும் இணைந்து பாடவைத்திருக்கிறார்கள்! தியேட்டரை அதிர வைக்கும் முடிவோடு இறங்கி குத்தியிருக்கிறார் அனிருத். எலக்ட்ரிக் கிடாரும், உறுமியும் இணைந்து விளையாடியிருக்கிறது ‘ராயபுரம் பீட்டரு...’ பாடலில்! ரகளையான இந்தப் பாடலுக்கு கைகொடுத்திருக்கிறது ஆர்.டி.ராஜாவின் வித்தியாசமான பாடல் வரிகள்! மொத்தத்தில் இந்தப் பாடல் ‘கொலக் குத்து’!

ஓப்பன் த டாஸ்மாக்...
பாடியவர்கள் : தேவா, அனிருத்
பாடலாசிரியர் : கானா பாலா

கானா பாலாவின் வரிகளுக்கு ‘கானா’ தேவாவின் குரல் என செம ரகளை பண்ணியிருக்கிறார்கள் இந்தப் பாடலில். ‘சரி சரி... க ம ப த நி....’ என தேவாவின் வாய்ஸில் கர்நாடக சங்கீதத்தோடு கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல் முழுவதும் பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் அனிருத். பார்ட்டிகளிலும், ‘பப்’களிலும் நிச்சயமாக இடம் பிடிக்கும் இந்த ‘ஓப்பன் த டாஸ்மாக்’. முழுப்பாடலையும் தேவா பாட, இடையிடையே சின்ன சின்ன வித்தியாசமான வரிகளுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார் அனிருத். பாடலின் கடைசியில் ‘பில்டிங் ஸ்டராங்கு பேஸ்மென்ட் வீக்கு...’, ‘ஐயாம் வெரி ஹேப்பி...’ என வடிவேலு, கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடி டயலாக்கையே பாடல் வரியாக்கி எனர்ஜி ஏத்துகிறார் கானா பாலா. இன்னும் கொஞ்ச நாட்கள் பட்டி தொட்டியெங்கும் இந்தப் பாடல் ஒலிக்கப்போவது நிச்சயம்!

மொத்தத்தில்... ‘3’, ‘எதிர்நீச்சல்’ ‘வணக்கம் சென்னை’ ஆல்பங்களைப் போன்ற பாடல்கள் நிச்சயம் இந்த ‘மான் கராத்தே’வில் இல்லைதான். ஆனால், இந்த வருடத்தின் ‘சூப்பர் ஹிட்’ வரிசையில் இந்த ஆல்பத்திற்கும் நிச்சயம் இடமிருக்கும். அமைதியாக உட்கார்ந்து ரசிப்பதற்குப் பதிலாக ரகளையாக எழுந்து நின்று ஆடவைத்திருக்கிறார் அனிருத்! காட்சிகளோடு பார்க்கும்போது பாடல்கள் கூடுதல் கவனம் பெறும்! ‘மான் கராத்தே’... அனிருத்தின் ஸ்பெஷல் குத்து!

பரத்தின் ஐந்தாம் தலைமுறை! ஒரு சிறப்பு பார்வை...!



பரத் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ’ஐந்து ஐந்து ஐந்து’.


 இந்தப் படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ’கில்லாடி’.


 அத்துடன் ‘கூதரா’ என்ற மலையாள படத்திலும் நடித்து வரும் பரத்,


தமிழில் அடுத்து ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியசாலை’


என்ற படத்தில் நடிக்கிறார்.


இந்தப் படத்தை ‘ராஜம் புரொடக்‌ஷன்ஸ்’


 மற்றும்


‘கவிதாலயா’


 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க,


ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பழனியில் துவங்கவிருக்கிறது.


இந்தப் படத்தில் பரத்துடன் முக்கிய கேரக்டர் ஒன்றில் ‘படவா’ கோபியும் நடிக்கிறார்.

விஜய்க்கு ஈடு கொடுப்பாரா அனிருத்?



துப்பாக்கி’,

 ‘தலைவா’,

‘ஜில்லா’


ஆகிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாடிய விஜய்,


அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்திற்காகவும் ஒரு பாடலை பாட இருக்கிறார்!


‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜெயாராஜ், ’தலைவா’வில் ஜி.வி.பிரகாஷ்குமார்,


‘ஜில்லா’வில் இமான் ஆகியோர் இசையில் பாடிய விஜய் இப்படத்தில் அனிருத் இசையில் பாட இருக்கிறார்.


விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் அனிருத் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே விஜய் பாடிய மூன்று படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதை விட பெரிய ஹிட்டை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்


 ’ஹிட் மெஷின்’ அனிருத்!

அமரன் - திரைவிமர்சனம்...!



மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஹீரோ அமரன், நண்பர்களின் அவமானத்திற்கு பிறகு மதுரையில் உள்ள தனது அத்தையின் காய்கறிக்கடையில் வேலை செய்கிறார். அங்கு காய்கறி வாங்க வந்த போலிஸாருடன் சண்டை போடுவதோடு, போலீஸ் அதிகாரியான சம்பத்தையும் அடித்து விடுகிறார்.

இதனால் பயந்து போன அமரனின் அத்தை, அமரனை சென்னைக்கு அனுப்பிவிடுகிறார்.சென்னைக்கு செல்லும் ரயிலில் நாயகி சோனுவை சந்திக்கும் அமரன், அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் அவரோ திடீரென மயக்கமாகி விழுந்துவிடுகிறார். சோனுவை அமரன் காப்பாற்றுகிறார். நினைவு திரும்பிய சோனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சோனுவும், அவரது காதலனும் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்ய இந்த ரயிலில் ஏறியதாகவும், யாரோ மயக்க பிஸ்கட் கொடுத்து தன்னை மயக்கிவிட்டு, காதலனை கடத்திக்கொண்டு சென்றுவிட்டாதாகவும் கூறுகிறார். சோனுவின் காதலனுடன் சேர்த்து வைக்க அமரன் முயற்சிக்கும்போது தான் காதலனை சோனுவின் தந்தையே கொன்று விட்டார் என்றும், சோனுவையும், அமரனையும் கொலை செய்ய தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில் போலீஸ் அதிகாரி சம்பத்தும் அமரனை பழிவாங்க துடிக்கிறார். வில்லன்களிடம் இருந்து அமரன் – சோனு தப்பித்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

கதை வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் படு சொதப்பல் அதைவிட கேரக்டரகளை புரிந்து கொள்ளாமலே நடிக்கும் நடிகர்களை வைத்து இயக்குனர் ஜீவன் எப்படித்தான் படத்தை இயக்கினாரோ தெரியவில்லை.இந்த படத்தை ஒரு நல்ல நடிகர், நடிகையை வைத்து எடுத்திருந்தால் கண்டிப்பாக ஹிட்படம் இது.

படத்தை பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்தால் ஏதாவது டிவியில் போடுவார்கள். அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லாத படம்.

புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு தரும் டி.இமான்!



விஜய் டி.வி.யின் ‘ஸ்டார் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்த திவாகருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வழங்கிய டி.இமான்,


அதற்கடுத்து கேரளாவை சேர்ந்த கண்பார்வையற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியை ஒரு படத்தில் பாட வைத்தார்!


இப்படி நிறைய புதியவர்களுக்கு பாட வாய்ப்பு வழங்கி வரும் டி.இமான், அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சரத் சந்தோஷ் என்ற இளைஞருக்கும் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.


இமான் இசை அமைக்கும் ’பஞ்சுமிட்டாய்’ படத்தில் வரும் டூயட் பாடல் ஒன்றில் சின்மயி கூட பாடுகிறார் சந்தோஷ்!


இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாபா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கடுப்பேத்தும் பார்ட் - 2 படங்கள்...! மாறுவார்களா இவர்கள்...!



சமீபகாலமாக வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் படமெடுப்பது தொடர்ந்து வருகிறது. சிங்கம்-2, பீட்சா-2 வில் ஆரம்பித்தது விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என பல படங்களின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா-சந்தானம் ஆகியோர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம்.


இந்த படத்திலும் ஆர்யா-நயன்தாரா ஜோடி சேருவதோடு, இன்னொரு நாயகியாக தமன்னாவும் நடிக்கிறாராம். வழக்கம்போல் சந்தானம் இருக்கிறாராம்.

அதேபோல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறதாம்.


இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா இல்லையாம்.


மாறாக, ஆண்ட்ரியா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். சூரி, முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்திலும் கலக்குகிறாராம்.

இதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன், ரஜினி நடித்த எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம்கூட வளர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.