Friday 21 March 2014

அமலாபாலை கூட்டிக்கொண்டு காட்டுக்குப் போகும் டைரக்டர் : எதுக்குன்னு மட்டும் கேட்காதீங்க…



‘நிமிர்ந்து நில்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார் டைரக்டர் சமுத்திரக்கனி. பல மாதங்களாக தயாரிப்பில் கிடந்த படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டதில் கொஞ்சம் மன வேதனையுடன் தான் இருந்தாராம் சமுத்திரக்கனி. ”என் எதிரிக்குக் கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது” என்று தான் அந்த நேரத்தில் யோசித்தாராம் சமுத்திரக்கனி.

இதனால் அடுத்த படத்தை ஒரு சின்ன பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கும் அவர் அந்தப்படம் முழுவதையும் காட்டுக்குள் தான் எடுக்கப் போகிறார்.

“இந்தியாவில் 42 சதவீதம் காடுகள் தான் இருக்கு. அங்க வாழ்ற மக்கள் ரொம்ம ரொம்ப அதிகம். ஆனா நாம அவங்களைப் பத்தி எப்போதுமே கவலைப்பட்டது இல்லை. அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கவும் விரும்பறதில்லை. அவங்களோட ரியல் ஃலைப்பை பத்தித்தான் படமா எடுக்கப்போறேன் என்றார்.

ஊர்ப்பக்கம் போனா கிருஷ்ணா என்ற பெயரை சுருக்கு கிட்னா கிட்னா என்று கூப்பிடக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதைத்தான் இந்தப்படத்துக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இந்தப் படத்தில் அமலாபாலை ஹீரோயினாக்கி இருக்கும் அவர் பிறந்தது முதல் 45 வயது பாட்டி வரையான ஒவ்வொரு காலகட்ட கெட்டப்பையும் படத்தில் காட்டப்போகிறார். படத்தின் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். ஆனால் அமலாபால் அவருக்கு மகளாக நடிக்கிறார்.

க்ரேட் எஸ்கேப்.

0 comments:

Post a Comment