Friday 14 March 2014

தக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பது எப்படி..?


1) தக்காளி ஊறுகாய்!



தேவையான பொருட்கள்:

நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ,

 மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன்,

வெந்தயம் - 1 ஸ்பூன்,

ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி,

பூண்டு - 20 பல்,

பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்,

கடுகு - 1 ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு


தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும்.

 இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும்.

நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

 அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும்.

 இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம்.

இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.
------------
2) தக்காளி ஜாம்!



தேவையான பொருட்கள்:

தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ.

 சர்க்கரை - 750 கிராம்.

 சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.

தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்).

கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும்.

அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும்.

இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும்.

 சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும். 

ஆதியும் அந்தமும் - சினிமா விமர்சனம்…!




ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார் அஜய். அங்கேயே தங்கும் அவருக்கு ஒரு இளம்பெண்ணின் ஆவி தினந்தோறும் இரவில் கண்ணில் பட, அது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதே கல்லூரியில் ஒரு டிவி நிகழ்சிக்காக தங்கும் காம்பியருக்கும் அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்துகொள்கிறார்.

இதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்பு உருவானதால் கல்லூரி நிர்வாகத்தின் மேல் சந்தேகப்படுகிறார்கள். இந்த நிலையில் அஜய், காணாமல் போக கல்லூரி முதல்வர்தான் காரணமென அவரிடம் போய் கேட்கிறார் காம்பியர். அஜய் திரும்ப கிடைத்தாரா? அவரை ஏன் கல்லூரி நிர்வாகத்தினர் தடுக்கிறார்கள்? அந்த ஆவியின் பின்னணி என்ன? அது ஏன் அஜய் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது? என பல சஸ்பென்ஸ் கேள்விக்களுக்குப் பதிலாக திரையில் திரைக்கதையாக விரிகிறது ‘ஆதியும் அந்தமும்’.

படத்தில் முதல் காட்சியிலேயே நேராக கதைக்குள் ரசிகர்களை கூட்டிச் செல்கிறார் இயக்குனர் கௌசிக். அதோடு ரசிகர்களை சோதிக்காமல் இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்ததற்கும் பாராட்டுக்கள்!முதல் பாதியில் திகிலை மட்டுமே மையமாக வைத்து, என்னவாக இருக்கும்? என யோசிக்க வைத்த இயக்குனர், இரண்டாவது பாதியில் சீக்கிரமே அதை ரசிகர்களுக்கு சொல்லி எதிர்பார்ப்பை சற்று குறைக்கிறார்.

ஆனாலும் ரசிகர்களை இறுதிவரை சீட்டில் உட்கார வைக்கிறார் கௌசிக்.இதுபோன்ற திகில் படங்களுக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் சரியாக அமைய வேண்டியது அவசியம். அவை இந்தப் படத்தில் பிரமாதமாக கையாளப்பட்டிருக்கிறது. அழகான ஊட்டியின் ரம்மியத்தையும், இருட்டான அந்த கல்லூரி காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி படத்தோடு ஒன்ற வைக்கிறார் ஒளிப்பதிவாளர். திகில் காட்சிகளுக்கு பயத்தைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது பின்னணி இசை!

இந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு நாயகன் அஜய். ஒரு மனநல மருத்துவராக, பேராசிரியராக சிறப்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் சீரியஸ் அஜய், ஃப்ளாஷ்பேக்கில் சந்தோஷமாக, காதலுடன் வலம் வரும் ரொமான்ஸ் அஜய் என நடிப்பில் இரண்டு பரிணாமங்களைக் காட்டி பேலன்ஸ் செய்கிறார்.

நாயகி கவிதா ‘க்யூட்’டாக வலம் வருகிறார். இரண்டாவது பாதி முழுக்க ரசிகர்களை தன் நடிப்பாலும், அழகாலும் வசீகரிக்கிறார். அவரது முடிவு மனதில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.கல்லூரி முதல்வரும், முத்துவாக வருபவரும் பாத்திரத்திற்கு ஏற்ப யதார்த்தமாக நடித்துள்ளனர். ‘டிவி’ காம்பியராக வரும் இன்னொரு நாயகியும் ஓகே தான்.

மொத்தத்தில் ‘ஆதியும் அந்தமும்’ திகிலான திரைப்படம்….

நடிகையின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த படகுழுவினர்...!



படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை மிச்சம் வைக்காமல் வெளுத்துகட்டினார் விசாகா.


இதனால் பட யூனிட்டார் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர்.


காட்சி தொடங்கும் முன் ஒரு குலாப் ஜாமுனை சாப்பிட்ட விசாகா, அதன் சுவையில் தன்னை மறந்து கிண்ணத்தில் இருந்த 10க்கும் அதிகமான குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டினார்.


இதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காட்சிக்கான டிஸ்கஷனில் இருந்த டைரக்டரோ தகவல் அறிந்து ஷாக் ஆனார். உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அதை காட்சிக்கான டேக் போகும்வரை மறைத்து வைக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.


இந்த ருசிகர சம்பவம் பற்றி விசாகா கூறும்போது, குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாக கூடி பேசிக்கொண்டிருந்த காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன் வைக்கப்பட்டிருந்தது.


அதை சாப்பிட்டபடியே சிரித்து பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார். எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு ஜாமுனை எடுத்து வாயில்போட்டேன் அப்படியே கரைந்துவிட்டது. அந்த சுவை என்னை சுண்டி இழுக்கவே 10க்கும் மேற்பட்ட ஜாமுனை எடுத்து சாப்பிட்டேன்.


அருகில் இருந்த சக நடிகர்களும் ம்… வெளுத்துக்கட்டு என்று ஊக்கப்படுத்தினார்கள். காட்சியை படமாக்குவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன். இதைப்பார்த்த பட யூனிட்டார்,

அடுத்த டேக் எடுத்தால் ஜாமுன் தேவைப்படும் என்பதால் என் கண்ணில் படாமல் மறைத்துவைத்து விட்டனர். ஜாமுன் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார்.

வங்கியில் புகுந்து பெண் ஊழியருக்கு தாலி கட்ட முயற்சி...!



வங்கிக்குள் நுழைந்து பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த கொத்தஇன்லு பகுதியை சேர்ந்தவர் விஜய கிருஷ்ணா (40). இவர் புங்கனூரில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.


என்டிஆர் சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் 22 வயது பெண் ஊழியரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு வங்கி மேலாளரிடம் அந்த பெண் முறையிட்டார்.


அதன்பின், புங்கனூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், விஜயகிருஷ்ணா மற்றும் அவரது பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று தாலி கயிறு, மாலைகள், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து கொண்டு தனது நண்பர்கள் கர்நாடக மாநிலம் சீனிவாசபுரம் சவுடனஹள்ளி பகுதியை சேர்ந்த வீரபத்ரா, பெங்களூர் ஆர்.கே.புரத்தை சேர்ந்த வெங்கட ரெட்டி ஆகியோருடன் விஜய கிருஷ்ணா வங்கிக்குள் திடீரென புகுந்தார்.


அங்கிருந்த ஊழியர் ஜலபதி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆத்திரம் அடைந்த விஜயகிருஷ்ணா தரப்பினர் அவரை சரமாரியாக தாக்கினர்.

வங்கி மேலாளர் சுதாகர் ராவையும் தாக்கிய விஜய கிருஷ்ணா, உள்ளே சென்று தான் ஒருதலையாக காதலிக்கும் பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்றுள்ளார். அதை வங்கி ஊழியர்கள் சேர்ந்து தடுத்தனர்.


இதுகுறித்து புங்கனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார், விஜய கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். வங்கிக்குள் நுழைந்து பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளையராஜா, வைரமுத்துவுக்கிடையே என்ன பிரச்சனை...!



வைரமுத்துவுடன் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்திருக்கும் யுவனை அவரது அண்ணனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா கடும் எதிப்பு தெரிவித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கூட்டணி இப்போது இணைவதில்லை. இனி இணையப்போவதும் இல்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இளையராஜாவின் வாரிசான யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் பாட்டெழுதுகிறார் வைரமுத்து.

ஆனால் இந்த இணைப்பு அவரது அண்ணன் கார்த்திக்ராஜாவுக்கு கடுப்பை கிளப்பியிருக்கிறது. இதுபற்றி அவர் கூறும்போது,

எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப அப்பாக்கூட இருந்த நண்பர்கள் யாருமே இப்போ அவர்கிட இல்லை. எல்லாருமே போட்டி பொறாமையால விலகிட்டாங்க. அப்பா கூட வேலை செய்றது இப்ப நான் மட்டும் தான். என்னோட ரெண்டு பசங்க யத்தீஸ்வரும், ஜெயேஸ்வரும் தான் அவருக்கு பிரெண்ட்ஸ்.

யுவன் ஷங்கர் ராஜா வைரமுத்துவோட ஒரு படத்துல இணைஞ்சிருக்காரு, அவர் வைரமுத்துவோட இணையுறதுல எனக்கு உடன்பாடே இல்லை. என்றவரிடம் அவர் வைரமுத்துவோட இணைந்தது மாதிரி, நீங்கள் பாரதிராஜா படத்திற்கு இசையமைப்பீர்களா? என்று கேட்டபோது

அப்பா ஓ.கே சொன்னால் பண்ணுவேன். ஆனால் பாரதிராஜா எந்த காலத்திலேயும் என்கிட்ட வரப் போறதில்லை. நானும் அவர்கிட்ட சான்ஸ் கேட்கப் போறதில்லை. பிறகெதுக்கு இந்தக் கேள்வி? என்று கடுப்பாகியிருக்கிறார்.

பிரபலங்கள் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது?

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் - பிரபல ஜோதிடர் கணிப்பு!!



ரஜினி, அரசியலுக்கு வருவாரா...? மாட்டாரா...? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்று கேரளாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் முருகதாஸ் குட்டி கணித்துள்ளார்.


 தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்து,


 பெரிய ஸ்டாராகி ஒருகட்டத்தில் மாநிலத்தையும் ஆட்சி செய்தார்கள், ஆட்சி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

அந்தவகையில், தமிழகத்தில் கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த்திற்கும், அரசியலில் நுழையும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லாமல் இருந்து வருகிறார்.


ஆயினும், தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டால் ரஜினி, அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா...? அதுப்பற்றிய அறிவிப்பை வெளியிட மாட்டாரா என்ற ஏக்கம் அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது.


அதேசமயம் அரசியல் கட்சிகளோ, ரஜினி தங்களது கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாரா என்று அவரது வீட்டுக்கு வரிசையாக படையெடுக்க தொடங்கி விடுவர்.


அந்தவகையில், தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ரஜினியின் அரசியல் பற்றி இப்போது மீண்டும் பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது.


இந்நிலையில், லோக்சபா தேர்தலில், போட்டியிடும் அரசியல் கட்சித் தலைவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்து, கேரள ஜோதிடர், முருகதாஸ் குட்டி முத்துப்போட்டு கணித்துள்ளாராம்.


அதில் மோடிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பவர், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளார். அதேப்போல் நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் கணித்துள்ளார்.


அதில், ரஜினிகாந்த், அரசியலுக்கு வர மாட்டார். அவருக்கு போன ஜென்மத்தில், அவரது ராசியில் முனி இருந்தது. இந்த ஜென்மத்திலும் அது தொடர்வதால், அவர் ஆன்மிக பாதையில் மட்டுமே செல்வார் என்று கூறியுள்ளார்.

ஒரு மோதல் ஒரு காதல் - திரை விமர்சனம்…!



சிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும் இவர்.


ஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.


ஒருநாள் அந்த பெண் இவரிடம் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிர்பந்திக்க நாயகனோ தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். தனது காதலை அவர்களிடம் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.


இருந்தாலும், தனது காதலியை எப்படியாவது கரம்பிடிக்க நினைக்கும் நாயகன், அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அவளை பதிவு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறார்.


பதிவு திருமணத்தன்று காதலி வராததால் என்னமோ, ஏதோவென்று பதறிக்கொண்டு அவளுடைய வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு, அவர்கள் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் நாயகனை, அவள் திருமணம் செய்ய மறுக்கிறார்.


இதில் நடக்கும் மோதலில் அந்த பெண்ணின் அண்ணன் தாக்கப்பட, நாயகன் சிறை செல்ல வேண்டியதாகிறது. சிறையில் இருந்து அவரது அண்ணன் இவரை வெளிக்கொண்டு வருகிறார்.


தன்னை காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் நாயகனுக்கு பெங்களூருவில் ஒரு இன்ஸ்ட்டியூட் ஒன்றில் வேலை கிடைக்கிறது. மன நிம்மதிக்கு அவ்வேலைக்கு செல்கிறான்.அங்கு படிக்க வரும் நாயகி மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார்.


நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் நாயகி, நாயகனை டெல்லிக்கு வரவழைத்து தனது குடும்பத்தாரிடம் அவனை அறிமுகப்படுத்துகிறாள். நாயகனை அவளது குடும்பத்தாருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள்.


 மேலும், நாயகனுடைய வீட்டில் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள்.தனது ஊருக்கு திரும்பும் நாயகன் முதலில் தனது திருமணத்துக்கு நோ சொன்ன நாயகனுடைய குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு ஓ.கே. சொன்னார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.


நாயகன் விவேக் படம் முழுவதும் துறுதுறுவென வருகிறார். குறும்புத்தனமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.பிரமீட் நடராஜன், மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.


சுவாமிநாதன் காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.காதலில் ஏற்படும் மோதலை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர், உண்மையான காதலை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார்.


முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் தடுமாறுகிறது.கே.ஆர்.கவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். யுகா ஒளிப்பதிவில் பாடல்கள் பதிவு செய்தவிதம் அருமை.

மொத்தத்தில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’ வழக்கமான பழைய காதல்….

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பம்...!



உடலின் குருதி அமுக்கம், ஒட்சிசன் போன்ற அளவுகளை கண்காணிப்பதற்கு iPhone கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Wello எனப்படும் விசேட சிப் மற்றும் சென்சார்களைக் கொண்ட இந்த iPhone வெளிக் கவரினை Azoi எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.


இதனை அடிப்படையாகக் கொண்டு விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றின் மூலம் இதயத்துடிப்பு வீதம், சுவாச வீதம், உடல் வெப்பநிலை, குருதி அமுக்கம், குருதியில் ஒட்சிசனின் மட்டம் போன்றவற்றை நாள்தோறும் இலகுவாக கண்காணிக்க முடியும்.


iPhone 5 மற்றும் iPhone 5S இல் செயற்படக்கூடிய இந்த கவர் ஆனது புளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் விலையானது 199 டொலர்கள் ஆகும்.

‘ரஜினிக்கு சல்யூட் வைத்ததால் ஷாரூக்கானுக்கு....



நமது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சல்யூட் வைத்ததால், ஷாரூக்கானுக்கும் தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் இடம் தந்துவிட்டார்கள், என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.


கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், “இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பளித்ததற்காகவும், இந்த மேடையில் பேச வாய்ப்புத் தந்ததற்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சவுந்தர்யாவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நானும் நாற்பது படங்களுக்கு மேல் இயக்கிவிட்டேன். பொதுவாக மற்றவர்கள் கதையை, தட்டி சரிபார்த்து சினிமாவுக்கேற்ற மாதிரி திரைக்கதை எழுதிப் படமாக்கித்தான் எனக்குப் பழக்கம்.


 ஆனால் நான் எழுதிய கதையில் வெளியாகும் முதல் படம் கோச்சடையான்தான். அந்தப் பெருமையை எனக்கு அளித்தவர் சூப்பர் ஸ்டார்.


 கோச்சடையான் கதையைக் கேட்டதும் அவர் ரொம்ப நல்லாருக்கு ரவி.. இந்தக் கதையையே படமாக்கலாம் என்று ஒப்புதல் தந்தார்.


இயக்குநர் சவுந்தர்யா மிகவும் திறமைசாலி. படப்பிடிப்பில் அவர் எனக்கு அளித்த மரியாதை, பழகிய பண்பு..  அந்த ரத்தம் அப்படித்தானே இருக்கும்!


இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஷாரூக்கான் அவர்களே.. உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் ஒரு இடம் அளித்துவிட்டார்கள்.


நம்ம தலைவர் சூப்பர் ஸ்டாருக்கு சல்யூட் அடித்தவர் என்ற வகையில் உங்களுக்கும் இதயத்தில் இடம் தந்துவிட்டார்கள். அதற்கு உதாரணம், உங்கள் சென்னை எக்ஸ்பிரசுக்கும் லுங்கி டான்ஸுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.


சூப்பர் ஸ்டார் ரஜினி இன்றைக்கு தமிழ் மக்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார். அதற்கு வைரமுத்து ரஜினிக்காக எழுதிய தமிழ் வரிகளும் கூட ஒரு காரணம்,” என்றார்.

நமக்கு தெரியாத கொய்யாவின் மறுபக்கம்...!



1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.


2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.


3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.


4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.


5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.


6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.


7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.


8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.


9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.


10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.

பால் நடிகையிடம் தனுஷ் சரண்டரான கதை இதுதானாம்...!



அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் அமலாபால் பக்கம் திரும்பிக்கொண்டிருந்த காலம் .


கூடவே தெலுங்கு படங்க வேறு, அப்போது அவரை பட விசயமாக எந்த கம்பெனி தொடர்பு கொண்டாலும் எக்குத்தப்பாக கால்சீட் , எக்கச்சக்கமாக கூலி கேட்டாராம்


அப்படித்தான் தனுஷ் நடிக்கயிருந்த 3 பட விசயத்திலும் நடந்திருக்கிறார் அமலாபால். அதனால்தான் அப்படத்தை தொடங்குவதற்கு முன்பு தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் மீடியாக்களை சந்தித்தபோது கூடவே இருந்த அமலாபால்,


அதன்பிறகு அந்த படத்தில் இல்லாமலிருந்தார். காரணம், தனுஷ் படம் என்ற போதும் கூட சம்பளத்தை எக்கச்சக்கமாக கேட்டது தான் காரணமாம்.


ஆனால், இப்போது அதே தனுசுடன் வேலையில்லா பட்டதாரியில் நடித்து முடித்து விட்ட அமலாபால், அடுத்து தனுஷ் நடிக்கும் காக்கா முட்டையிலும் அமலாபாலே நடிப்பதாக செய்தி பரவி வருகிறது.


இப்ப மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆச்சு என்கிறீர்களா? தலைவா தடுக்கி விட்டதில் குப்புற விழுந்த அமலாபால், இனி அடக்கிவாசித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு, அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.


அதன்காரணமாகவே மறுபடியும் தனுசுடன் நடிக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. அதோடு, ஜெயம்ரவியுடன் நடித்துள்ள நிமிர்ந்து நில் படத்தில் நடித்தபோது அவர் நடந்து கொண்ட விதத்தைப்பார்த்து வியந்து போன டைரக்டர் சமுத்திரகனி,



 அடுத்து தான் கதை எழுதி தயாரிக்கும் படத்திலும் அமலாபாலுக்கே சான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.


ஆக, ஒரு படத்தில் நடித்து விட்டால், இதோடு விட்டால் போதும் என்று அமலாவை ஓரங்கட்டாமல் மீண்டும் மீண்டும் சான்ஸ் கொடுக்கும் அளவுக்கு ரொம்ப நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறாராம் அவர். இந்த அடக்கம் இன்னும் நீடித்தால் அமலாபாலின் உயரம் ரொம்ப பெருசாகி விடும் போல் தெரிகிறது.

காங்கிரஸிலிருந்து அழைப்பு வந்ததா ரஜினிக்கு..?



முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.


தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.


இச்சந்திப்பின்போது பேசிய கருத்துகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவாரா?


என்று எதிர்பார்ப்பிலிருக்கும் இந்நிலையில் இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லட்சுமி மேனனை பாதுகாக்கும் காரணம்...பொட்டு உடைத்த விஷால்...!




நான் சிகப்பு மனிதன்” ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 13ம் தேதி சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஷ்ணு, விக்ரகாந்த் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது விழாவில் பேசிய விஷ்ணு, விஷாலிடம், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஷூட்டிங்கை காண, நான் வருகிறேன் என்று கூறினேன். விஷால் பலமுறை தட்டி கழித்தார். பின்னர் அவரே ஒருநாள் என்னை வர சொன்னார்.


அங்கு விஷால், லட்சுமி மேனனுக்கு தடபுடலாக விருந்து வைத்து கொண்டிருந்தார். நான் லட்சுமி மேனனை பார்க்க எண்ணினேன், ஆனால் கடைசிவரை என்னை, லட்சுமி மேனனை பார்க்கவே விஷால் விடவில்லை. விஷால் என்ன லட்சுமி மேனனுக்கு பாதுகாவலரா என்று நகைச்சுவையாக கேட்டார்.

விஷ்ணுவுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், விஷ்ணு தானாக இப்படி பேசவில்லை. யாரோ பேசச்சொல்லி கேட்பது போன்று தோன்றுகிறது. நான் ஹீரோயின்களை ரொம்பவே மதிக்கிறேன்.


பாலா சாரின் அவன் இவன் படத்தில் நடித்தபோது பெண்கள் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது. அந்தப்படத்தில் பெண் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக பாலா சார் எனக்கு 10 நாட்களுக்கு மேல் பயிற்சி கொடுத்தார்.


பெண்களின் நடை, உடை, பாவனை எப்படி என்று கற்றுக்கொள்ள அவர்களிடம் நேரடியாக பழகவிட்டு எனக்கு பயிற்சி கொடுத்தார். பெண் போன்று நடிப்பதற்கு நான் கிட்டத்தட்ட ஒருவாரம் ஆனது. அப்போது முதல் பெண்களின் மீதான மதிப்பு எனக்கு கூடிவிட்டது.

லட்சுமி மேனன் மிகவும் சின்னப்பொண்ணு, அவர் பயந்த சுபாவம் உடையவர். விஷ்ணுவின் அப்பாவோ ஐ.ஜி.யாக இருப்பவர். விஷ்ணு சும்மா எதேச்சையாக லட்சுமியிடம் பேசப்போக அவர் ஈவ்டீசிங் என பயந்து போலீஸை கூப்பிட்டுவிட்டால்,


பிறகு விஷ்ணுவின் அப்பாவான ஐ.ஜி.யே தன் மகனை கைது செய்து அழைத்து போக நேரிடும். அப்படி ஒரு விபரீதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஷ்ணுவை, லட்சுமி மேனனை பார்க்க நான் அனுமதிக்கவில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

கோச்சடையான் கார்ட்டூன் படமல்ல, அனிமேஷன் படம்! ரசிகர்களிடம் உலரும் செளந்தர்யா!!



கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா நடந்ததையடுத்து அப்படத்தின் பாடல் மற்றும் டரைலரும் யு.டியூப்பில் வெளியிடப்பட்டது.


அதை இரண்டே நாளில் 12 லட்சம் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். அதைப்பார்த்து சில ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டபோதும், பலர் இதென்ன கார்ட்டூன் படம் மாதிரி உள்ளது என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்களாம்.


ரசிகர்களின் இந்த கருத்து அப்படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை பெரும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அதையடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்தும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.


அதையடுத்து செளந்தர்யா வெளியிட்டுள்ள செய்தியில், கோச்சடையானை கார்ட்டூன் படம் என்று நினைக்கக்கூடாது. இதுஒரு அனிமேஷன் படம். அவதார், டின் டின் போன்ற படங்களை எப்படி ரசித்தீர்களோ அதேபோன்ற மனநிலையுடன் ரசிக்க வேண்டும்.


மாறாக, ரஜினியின் முந்தைய படங்களை மனதில் கொண்டு இப்படத்தை பார்க்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும், கோச்சடையானில் நிஜ ரஜினியை திரையில் பார்க்க முடியாது. அனிமேஷன் வடிவில்தான் பார்க்க முடியும். ஆனால், எல்லா வகையிலும ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.


அந்த வகையில், இப்படம் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார் செளந்தர்யா.

என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு! - டைரக்டர் பாலா



தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.


 ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் திடீரென்று தூங்கி விழும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் விஷால்.


இந்நிலையில், நேற்று நடந்த நான் சிகப்பு மனிதன் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தைப்பற்றி பலரும் ஜாலியாக பேசினார். அதிலும் எந்த விழாவிலும் அதிகமாக பேசாத டைரக்டர் பாலாவும் இந்த விழாவில் ஜாலியாக பேசினார்.


அவர் பேசும்போது, இந்த படத்தில் எனது நிஜ கேரக்டரையே காப்பியடித்து படமாக்கி விட்டனர் என்றார். காரணம், நான் தினமும் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு செல்வேன்.


அதேமாதிரி,நள்ளிரவு படப்பிடிப்பு என்றால் அதிகாலையில்தான் செல்வேன். இதை நான் வேணுமென்று செய்யவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தூக்கம்தான். நல்லா தூங்கி விடுவேன்.


அதனால் இந்த படத்தில் விஷால் தூங்கிக் கொண்டேயிருப்பார் என்பதை கேள்விப்பட்டதும் என்னை காப்பியடித்துதான் இந்த கேரக்டரை டைரக்டர் திரு உருவாக்கி விட்டனர் என்று தோன்றியது என்று பாலா கிண்டலாக பேச, விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.

ஐஸ்வர்யாராய் இனிமேல் நடிக்கமாட்டார்...மாமியார் கண்டிஷன்...!



தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம்.


இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார். இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார்.


திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார். அதேபோல் தமிழுக்கும் நட்சத்திர தேர்வு நடத்த முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தமிழில் கடைசியாக அவர் இயக்கிய கடல் படம் படு தோல்வி அடைந்தது.


 இதனால் பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.


இப்போது அவரது அடுத்த தமிழ் படத்துக்கு பைனான்ஸ் செய்ய பலரும் யோசிக்கிறார்கள். இதனால் டோலிவுட்டுக்கு சென்று அந்த மொழியில் மட்டுமே இப்படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.


அதே சமயம், ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதை அவரது மாமியார் ஜெயா பச்சன் விரும்பவில்லை.


மகள் ஆராத்யாவை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருப்பதால் நீண்ட கால்ஷீட் தருவது முடியாத காரியம் என ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு மொழியில் மட்டும் மணிரத்னம் படம் இயக்குவதற்கு இதுதான் காரணம் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது. 

கமலின் ஜெட் வேகம்! இந்த வருட ப்ளான்,உத்தமவில்லனுக்கு 60 நாட்கள் பிறகு திரிஷ்யம்...



கடந்த இரண்டு வருடங்களாக விஷ்வரூபம் திரைப்படத்தின் பணிகளில் மூழ்கியிருந்த கமல்ஹாசன் தற்பொழுது விஷ்வரூபம் - 2 படத்தின் பணிகளையும் முற்றிலும் நிறைவு செய்துவிட்டு அடுத்த படமான உத்தமவில்லன் திரைப்படத்தின் நடித்துவருகிறார்.


கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கிவரும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெங்களூருவில் துவங்கின.


 கமலின் குருவான கே.பாலச்சந்தரின் அறிவுரையின் பேரில் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்துவிடவேண்டும் என்று உறுதியெடுத்திருக்கும் கமல்ஹாசன் உத்தமவில்லன் திரைப்படத்திற்கு 60 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம்.


உத்தமவில்லன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் மெஹா ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தின்
படப்பிடிப்புக்கள் வருகிற ஜூன் மாதம் துவங்கவுள்ளன.


உத்தமவில்லன் திரைப்படத்தில் விஷ்வரூபம் நாயகிகளான ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் மரியான் நாயகியான பார்வதி மேனன் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.