Thursday 13 March 2014

அமீர்கானை அட்டாக் பண்ணிய பேஸ்புக் நக்சல்கள்...!



சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தாறுமாறாக வெளியாகும் அவதூறு செய்திகளால் அதிர்ந்து கிடக்கிறார்கள் பிரபலங்கள்.

குறிப்பாக சினிமா நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பாக வெளியாகும் செய்திகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸை நாடிக்கொண்ட வருகிறார்கள். அந்த வகையில், இந்தி நடிகர் அமீர்கானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், நான் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே என்றொரு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். அதில், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசு கொலை உள்பட நாட்டில் நடக்கும் பல சமூக அவலங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நான் ஒரு சமூக அமைப்பிடம் பெருந்தொகையை பெற்று அதை, மசூதி கட்டவும், முஸ்லீம் இளைஞர்களின் நலனுக்காகவும் வழங்கியதாக பேஸ்புக்கில் தவறான செய்தி பரவியுள்ளது.

அதனால் இந்த செய்தியை வெளியிட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அமீர்கானின் இந்த புகாரை அடுத்து பேஸ்புக்கில் இந்த செய்தியை பரப்பியவரை கண்டு பிடிக்க சைபர் கிரைம் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

செவ்வாழையில் மறைந்திருக்கும் மகிமை...! தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டால்...



பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும்.

தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது.

வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

வீட்டில் அச்சத்துடன் தொல்லையைக் கொடுக்கும் பல்லியை விரட்ட சில டிப்ஸ்...!



வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும்.

 இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும்.

இப்படி வீட்டின் சுவர்களில் இருந்து அச்சமூட்டும் பல்லியை விரட்டுவதற்கு பல கெமிக்கல் கலந்த பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அதனைப் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் சிறந்தது என்பதைப் புரிந்து, அந்த வழியிலேயே பல்லியை விரட்ட வேண்டும்.

 மேலும் பல்லியை விரட்ட பல அருமையான பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அத்தகைய பொருட்களைக் கொண்டு விரட்டினால், நிச்சயம் பல்லியை விரட்டிவிடலாம். இப்போது அத்தகைய பல்லியை விரட்டுவதற்கு பயன்படும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

காபித் தூளை புகையிலை பொடியுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறு உருண்டைகளாக்கி, அதனை பல்லி அதிகம் வரும் இடத்தில் வைத்தால், அதனை பல்லி சாப்பிட்டால், பல்லி இறந்துவிடும்.

பாச்சா உருண்டை பூச்சிகள் வருவதைத் தடுக்கும் ஒரு சிறப்பான பொருள். இந்த பொருளை உடை அலமாரி, தண்ணீர் தொட்டி அல்லது அடுப்பிற்கு அடியில் வைத்தால், அது பல்லியை விரட்டிவிடும்.

பல்லிகளுக்கு மயில் இறகு என்றால் பயம். எனவே மயில் இறகை சுவற்றில் ஒட்டினால், அது பல்லி வருவதைத் தடுத்துவிடும்.

பெப்பரை நீரில் கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பல்லி வரும் இடங்களில் தெளித்தால், பல்லி அந்த மிளகுவினால் ஏற்படும் எரிச்சலுடன், அதிலிருந்து வெளிவரும் வாசனையால் வராமல் இருக்கும்.

நல்ல குளிர்ச்சியான தண்ணீரை பல்லியின் மீது தெளித்தால், அது பல்லியின் உடல் வெப்பநிலையை குறைத்து, அது நகர முடியாமல் தத்தளிக்கும். அப்போது அதனை வெளியே தூக்கி போட்டுவிடலாம்.

வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதனை பல்லி பதுங்கியிருக்கும் இடங்களில் போட்டால், வெங்காயத்தில் உள்ள சல்பர், துர்நாற்றத்தை உண்டாக்கி, பல்லியை வெளியேற்றி வராமல் செய்துவிடும்.

முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால், அதிலிருந்து வெளிவரும் வாசனையால், பல்லி வராமல் இருக்கும். குறிப்பாக முட்டை ஓட்டை 3-4 வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெங்காயச் சாறு மற்றும் சிறிது தண்ணீரை ஊற்றி கலந்து, அதில் சிறிது பூண்டு சாற்றினை ஊற்றி, நன்கு குலுக்கி, பின் அதனை பல்லி வரும் இடங்களில் தெளித்தால், வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைக்கு பல்லி ஓடிவிடும். வேண்டுமெனில், சில பூண்டுகளை உரித்து அதனை மூலைகளில் வைத்தாலும் பல்லி போய்விடும்.

மேற்கூறியவற்றை செய்வதற்கு முன்பு, வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வீட்டில் உள்ள அசுத்தத்தினாலேயே பூச்சிகள் பல வரும். ஆகவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டாலே, பல்லியின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தெனாலி ராமன் கதை...!



ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்.

அதற்கு அரண்மனையிலிருந்து அவர்களுக்குத் தினமும் பால் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிய எல்லாரும தங்கள் பூனைகளைக் கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார்.

அனைவரின் பூனையும் கொழுகொழுவென்று இருந்தன. ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் இப்படி உள்ளது என்று மன்னர் கேட்டார்.

அதற்கு, என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் அருந்த மாட்டேன் என்கிறது என்று தெனாலி ராமன் சொன்னார்.

மன்னரால் நம்ப முடியவில்லை. எங்கே பால் கொண்டு வாருங்கள் என்று சொன்னார். பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைக் கண்டதும் அந்தப் பூனை குதித்தோடியது.

என்ன நடந்தது, ஏன் பூனை இப்படி ஓடுகிறது என்று மன்னர் விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது, தெனாலி ராமன் முதல் நாளிலேயே பாலை கொதிக்க வைத்து அதை அப்படியே பூனைக்கு வைத்திருக்கிறார்.

அதைக் குடிக்க முயன்றதும் பூனை சூடு தாங்க முடியாமல் ஓடிவிட்டது. அதுவே வழக்கமாகி விட்டது. பாலை தெனாலி ராமன் அருந்தி வந்துள்ளார்.

அண்மைக் காலமாக சந்திக்கும் நபர்கள் அவர்களின் அனுபவங்கள் எனக்கு இந்தக் கதையை நினைவுறுத்தியது.

சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டவர்களுக்கு சமுதாயப் பணி செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் சமுதாயத்திலிருந்து தொலைவில் இருப்பவர்கள் ஆவார். அதோடு எந்தவித பொதுச் சேவையோ, அரசியல் அனுபவமோ இல்லாதவர்கள்.

இன்னும் சிலர் ஏற்கனவே சமுதாய, அரசியல் சேவைகளில் இருப்பவர்கள். இவர்கள் தங்களது அனுபவம், திறனுக்கேற்ப சமுதாயத்தில், அரசியலில் வெற்றிபெற்ற அல்லது தோல்விபெற்ற நிலையில் உள்ளவர்கள்.

சமுதாய, அரசியல் சேவைகளில் தோல்வி பெறுபவர்கள் தங்கள் இயலாமை, குறைபாடுகள் காரணமாக அந்த நிலையை அடைகின்றனர். இவர்கள் அந்தச் சேவைகளின் மூலமாக தங்கள் சொந்த அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பதும் இதற்கு காரணமாகிறது.

எனவே புதிதாக சமுதாய, அரசியல் சேவையில் ஈடுபட நினைப்பவர்கள் இதுபோன்ற நிலையில் உள்ளவர்களின் உதவியை நாடினால் அதோ கதிதான்.

எனவே நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். தாங்கள் உதவிக்காக நாடும் நபர்களையும் நன்கு அறிந்துகொண்டு அவர்களிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தெனாலி ராமன் பூனை வளர்த்த கதையாகிவிடும்.

பின்னர் அவர்கள் சமுதாயமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள். 

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களும்...! நீங்கள் செய்ய வேண்டியவைகளும்...!



மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய் விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.

2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.

2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.

3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.

5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.

6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.

7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.

9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.

10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.

11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.

13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.

15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.

16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.

17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.

18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.

19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.  

பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்!



பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் சிறுமியாக நடித்தவர் தாரணி. இவர் இப்போது சரித்திரம் பேசு படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.


டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் கன்னிகா ஒரு ஹீரோயின். தாரணிக்கு ஜோடியாக யோகஸ்வரன் போஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார்.


கிருபா என்ற புதுமுகம் ஹீரோ. அகிலன் படத்தை தயாரித்து நடித்த மதுரை டாக்டர் சரவணன் இதில் வில்லனாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு காமெடியனாக நடிக்கிறார்.

"தான் உண்டு, தன் வேலையுண்டு என்று ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோவும், அவரது நண்பர்களும் பயந்த சுபாவம் உடையவர்கள்.


ஆனால் அவர்களையே கொலைகாரன் ஆக்குகிறது இந்த சமூகம். ஏன் கொலை செய்தார்கள், அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தோட ஒன்லைன் ஸ்டோரி.


காமெடியும் ஆக்ஷனும் பிப்டி பிப்டி இருக்கும்" என்கிறார் இயக்குனர் மகேஷ். இவர் சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கியவர்.

"பசங்க படத்துக்கு பிறகு நிறைய சான்ஸ் வந்துச்சு. ஸ்கூல்ல படிக்க வேண்டியது இருந்தால நடிக்கல. இடையில சில படங்கள்ல நடிச்சேன்.


அது சரியா போகலைன்னு சொன்னாங்க. இப்போ ஹீரோயினா நடிக்கிறேன்.


 கிராமத்து வேடங்கள்ல நடிக்கத்தான் ஆசையா இருக்கு" என்கிறார் தாரணி.

சமூக சேவையை தொடங்கினார் சமுத்திரகனி!



ஒருவழியாக நிமிர்ந்து நில் பரபரப்பு ஓய்ந்து விட்டதால், தனது அடுத்த பட வேலைகளில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார் சமுத்திரகனி.


தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படும் சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்தை அடுத்து இயக்கும் புதிய படத்தில் இளைஞர்களுக்கு நல்லதொரு மெசேஜ் சொல்லப்போகிறாராம்.


அப்படத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கைக்காக அரும் பாடுபட்டதைத்தான் படமாக்க உள்ளாராம்.


வேளாண்மை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்படம் இருக்குமாம்.


இதற்காக, நம்மாழ்வாரின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை தற்போது தீவிரமாக சேகரித்து வருகிறார் சமுத்திரகனி.


இந்நிலையில், அவர் இயக்கிய நிமிர்ந்துநில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சரத்குமார், நம்மாழ்வார் கதையில் உருவாகும் படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிப்பதாக செய்தி பரவியுள்ளது.

உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?



“வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ விரதம் இருப்பது உடலுக்கு நல்லது’ – இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்களின் நம்பிக்கை இதுதான். ஆனால் அதில் உள்ள நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளாமலே பலர் விரதம் இருக்கிறார்கள்.

நோஞ்சானாக இருப்பார். “நான் இன்னைக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்.. விரதம் இருக்கேன்’ என்பார். யார் யார்? எது எதற்கு? எப்படி? விரதம் இருப்பது? என்ற முறை உள்ளது. அது தெரியாமல், உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அளவிற்கு கண்மூடித்தனமாக விரதம் இருக்கிறார்கள். அது பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
ஒரு நாள் வயிறைக் காயப் போட்டால் உடல் உறுப்புகளில் உள்ள கழிவுகள் சுத்திகரிக்கப்படும். ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்தால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது உண்மைதான். ஆனால் அது முறைப்படி விரதம் இருப்பவர்களுக்குதான்.

எந்த வயதினர் விரதம் இருக்கலாம்?

15 வயதுக்குக் குறைவானவர்கள், 70 வயதைக் கடந்தவர்கள், கடுமையான உடல் உழைப்பு உள்ளவர்கள், வெளியூரில் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் எந்த வகையான விரதமும் இருக்கக் கூடாது. விரதம் இருக்கும் போது, நம் உடலில் உள்ள உயிரி ரசாயனங்கள் வயிற்றுக்குக் கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகளும் முதியவர்களும் இறந்து போக வாய்ப்பு உண்டு.

நீண்ட நாட்கள் விரதம் இருந்தால் என்னாகும்?

நாம் உண்ணும் உணவானது முதலில் குளூக்கோஸாகவும் கொழுப்பாகவும்
அமினோ அமிலமாகவும் பிரித்து எடுக்கப்பட்டு விடும். இதில் குளுக்கோஸ்தான் மிக முக்கியம். நம் உடலுக்குத் தேவையான சக்தி இதிலிருந்துதான் எடுக்கப்படுகிறத. இப்போது நீங்கள் விரதம் இருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் சோர்வு தட்டும். அதாவது சக்தி இழக்க நேரிடும். அந்த சக்தியை உடல் சேமித்து வைத்துள்ள குளுக்கோஸை கரைத்துத்தான் உடலானது எடுத்துக் கொள்ளும். குளுக்கோஸை தீர்ந்த பின்னர் உடலில் உள்ள கொழுப்பை எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் தீர்ந்த பின்னர் அதீத பசி எடுக்கும். அப்போதும் உணவு உண்ணாமல் விரதத்தைத் தொடர்ந்தால் தசைகள் வளர்சிதை மாற்றமடைந்து, தோல் சுருங்கி முகம் வாடத் தொடங்கிவிடும்.

உடலில் எலக்ட்ரோலைட் குறைந்தவிடும். இதனால் இதயம் வேகமாகத் தாறுமாறாக துடிக்கத் தொடங்கும். சிறுநீரகம் சரிவர வேலை செய்யாமல் போய்விடும். மேலும் பட்டினி தொடர்ந்தால் மரணம் கூட சம்பவிக்கும்.

விரதம் இருப்பது நல்லதா? கெட்டதா?

கொழுப்பையும் இரத்தத்தையும்ண சுத்திகரிக்க விரதம் இருப்பத நல்லது என்றே இப்போது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மேலும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்புக் குறைபாடு ஆகிய குறைகளை நிவர்த்தி செய்யலாம் என்கிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க விரதம் இருக்கிறார்களே அது சரியா?

உடல் எடையைக் குறைக்க விரதம் இருப்பது சரியல்ல. உணவு சாப்பிடாத அந்த நாட்களில் அவர்கள் கோபப்படுவதும் எரிச்சலடைவதும்தான் அதிகரிக்கும் இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. விரதம் முடிந்த பின்னர் பசியை அடக்க அதிகளவு உணவை உண்ணத் தொடங்கிவிடுகிறார்கள். அது அவர்களை மேலும் உடல் எடையைக் கூட்ட வைக்கிறது.

சரி, விரதம் எப்படி இருந்தால் நல்லது?


1. குறைந்தளவு உணவு அதாவது ஒருவேளை அல்லது இரு வேளை சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. இதனால் உடலின் இன்சுலின் சுரப்பது, கொழுப்புச் சத்து குறைவது, எடை குறைவது ஆகிய நன்மைகள் ஏற்படும்.

2. மன அழுத்தம், சோர்வு நீங்க குறைந்தபட்ச அளவில் வயிற்றைப் பட்டினி போடுவது நல்லது.

3. தண்ணீர் கூட குடிக்காமல், விரதம் இருக்கக் கூடாது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர்தான் செய்யும். தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்தால், கழிவுகள் உடலிலேயே தங்கிவிடும்.

4. பெண்கள் மதம், பக்தி, நம்பிக்கை அடிப்படையில் அடிக்கடி விரதம் இருப்பது கூடாது. அது ரத்தசோகை நோயை உண்டாக்கும். சிலருக்கு சர்க்கரை நோய் வர அதுவும் ஒரு காரணமாகிவிடும்.

5. வாரமோ மாதமோ ஒருநாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடையச் செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும். அதனால் இளமையுடன் இருக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்

சிவாவுக்கு ஏன் இந்த வீண் வேலை...திரையுலகை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயமா...



சென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார்.

சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.

இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக ‘தளபதி’ தினேஷ் மகன் ஹரி தினேஷ் அறிமுகமாகிறார்.

சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இசை வெளியீடு ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகம்! புதுப்பொலிவுடன்!!



               நிகழ்கால சினிமாவுக்கு சவால்விடும் அளவிற்கு புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் வரும் வெள்ளி அன்று (14.03.2014) வெளியாக உள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ஹீரோயிசம் அவருக்கு மட்டுமே பொருந்தி இருப்பதை இன்றைய இளைஞர்களும் உணர ஒரு வாய்ப்பாக இப்படம் உள்ளது.

1965யில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் தற்போது இருக்கும் சினிமா ரசிகர்களையும் கவர்கிறது என்றால் சினிமாவில் பணிபுரிந்த முன்னோர்களின் உழைப்பே நம் கண்முன் தெரிகிறது. எம்.ஜி.ஆரின் வால் சண்டை, நம்பியாரின் வில்லத்தனம், நாகேஷின் நகைச்சுவை, முதல் முறையாக எம்.ஜி.ஆரோடு ஜோடி சேரும் ஜெயலலிதா என அத்தனைபேரும் நேரம் போவது தெரியாமல் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.


பாட்டு வந்தாலே வெளியே போகத்தூண்டும் இந்த கால படங்களுக்கு மத்தியில், அவ்வப்போது பாடல்கள் வந்தாலும் அத்தனைப் பாடல்களும் ரசிக்க வைக்கிறது. காரணம், எல்லாப் பாடல்களும் கதையோடு கலந்து இருப்பதே! ஏன்? ஏன்? ஏன்? என அடிமைகளாய் வேலைசெய்பவர்கள் கேள்வி கேட்க, ‘ஏன் என்ற கேள்வி... இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை’ என்று பாய்ந்து வந்து பாடுகிறாரே... ஹீரோன்னா இவருதம்பா என்று  இதயம் சொல்கிறது.

‘அதோ அந்த பறவைபோல...’ ‘ஆடாமல் ஆடுகிறேன்...’ ‘உன்னை நான் சந்தித்தேன்...’ ‘ஓடும் மேகங்களே...’ ‘பருவம் எனது பாடல்...’ ‘நாணமோ இன்னும் நாணமோ...’ என்று ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூத்தியின் மயக்கும் இசையில், டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலாவின் அசரவைக்கும் குரலில், கண்ணதாசன், வாலி வரிகளில் அனைத்து பாடல்களும் மணி மணியாக ஒலிக்கிறது. பார்ப்பதற்கும் அத்தனை அழகு, திரையில் இருப்பது மக்கள் திலகம் அல்லவா!

‘நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்’ என்று மக்கள் திலகம் பாடும்போது கைத்தட்டல் அரங்கத்தை அதிரவைக்கிறது. ‘நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்’ என்று ஜெயலலிதவிடம் அவர் பாடும்போதும் சிலர் கைத்தட்டும் ஓசை கேட்கிறது!

ஜெயலலிதவின் அறிமுகப் பாடல் முடிந்ததும் அவர் தந்தை வந்து ‘நீ அயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரியாகி ஆனந்தம் அடையவேண்டும்’ என்று ஆசீர்வதிக்கும் காட்சி இந்த கால இளைஞர்களுக்கு ஆச்சரியத்தையேக் கொடுக்கிறது.

‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கேட்டதும் ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்று சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகத்தின் கம்பீரம், அவருக்கு நிகர் அவரே என்பதை உறுதிப்படுத்தும் காட்சி. ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா என்றென்றும் நிலைத்து நிற்க’ என்று நம்பியாரைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்பதும்,  ‘தோல்வியையே அறியதவன் நான்’ என்று நம்பியார் சொன்னதும் ‘தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழகியவன் நான்’ என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனங்கள் அனல் பறக்கிறது.

கடல் சார்ந்த பயணம் அதில் நடக்கும் போராட்டங்கள் என்பதால் காடு, தீவு, கடல், கடற்கரை, கப்பல் என காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்! கடலில் தத்தலிக்கும் கப்பலில் சண்டைக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாக படமாக்கிய இயக்குனர் பி.ஆர்.பந்தலுவின் திறமை பிரம்மிக்க வைக்கிறது.

டிஜிட்டல் வடிவத்தில் வெளியாகி இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அந்த கால ரசிகர்கள் மட்டுமல்ல இந்த கால இளைஞர்களும் பார்த்து ரசிக்கலாம்!

சிவகார்த்திகேயனால் மூடுஅவுட்டில் தனுஷ்...!



தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘வேலை யில்லா பட்டதாரி’. இதில் அவரது ஜோடியாக அமலா பால் நடித் துள்ளார்.


இந்தப் படத்திற்காக அண்மையில் சில கோடிகள் அவசர நிதி தேவைப்பட்டதாம். விநியோகஸ்தர்களிடம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார் தனுஷ்.


இதையடுத்துத் தனக்குத் தெரிந்த சிலரை தொலைபேசி வழி தொடர்பு கொள்ளவும் செய்தாராம். ஆனால் யாரிடமும் எதிர்பார்த்த சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுதான் செய்தி.


எல்லா பதில்களுமே வெறுப்பையும், எரிச்சலையும்தான் ஏற்படுத்தியதாம். பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை.


அவர்கள் சொன்ன பதிலே வேறு என்பதுதான் முக்கியம்.


 “சார், நீங்கத் தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற ‘டாணா’ படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம் என்பதுதான் அது ம்ம்ம்ம்ம் - 

பட வாய்ப்பு பறிபோவதற்கு காரணம் சீனு ராமசாமி தான்..இது பழிவாங்கும் செயல்...!



ஆதலால் காதல் செய்வீர், வழக்கு எண் போன்ற படங்களில் நடித்த மணிஷா யாதவ் இப்படங்களுக்கு பிறகு சிறு பட்ஜட் படங்கள் சில நடித்து வந்தார்.


பிறகு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பின் என்ன காரணம் என்று தெரியவில்லை அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


இப்போழுது அந்த படத்திலும் சிக்கல், சீனு ராமசாமிக்கும் மனிஷாக்கு ஒத்துப்போகாத நிலையில் இந்த படம் உனக்கு செட்டாகாது என மனிஷாவை கைக்கழுவ தற்போது நடிகர் சங்கத்தில் பஞ்சாயத்தில் நிற்கிறார் மனிஷா.


இடம் பொருள் ஏவல் படத்திற்காக தனக்கு வந்த படத்தை விட்டுவிட்டதாகவும் திடீர்னு இப்படி போக சென்னா தான் வீட்டிலிருக்கப்போகும் இந்த இரண்டு மாதங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் படி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் மனிஷா.

நா யாரையும் போட்டியா நினைக்கவில்லை - கவுண்டமணி...!



காமெடியில் சினிமா உலகத்தை புரட்டிப்போட்ட கவுண்டமணி, வடிவேலு என்ற இரண்டு ஜாம்பவான்களுமே சில வருடங்கள் வெள்ளித்திரையை விட்டு விலகி நின்றிருந்தனர்.


தற்போது இருவரும் தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிருக்கிறார்கள்.


கவுண்டமணி ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் 49ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார்.


அதேபோல் வடிவேலுவும் ஜெகஜால புஜபல தெனாலி ராமன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.


ஏப்ரலில் ரிலீஸாகும் இந்த இரண்டு படமுமே முடிவடையும் கட்டத்தில் எட்டியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ்  களைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.


ஆக மொத்தத்தில் எப்பவும் போல கொண்டாட்டம் தான்!

கமலுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைவதில் மகிழ்ச்சி...!



விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் உத்தம வில்லன்.


இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
பூ, மரியான் போன்ற படங்களில் நடித்த பார்வதி இந்த படத்தில் கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் ஊர்வசி மற்றும் இயக்குனர் பாலசந்தரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.


இதற்கிடையில், உத்தம வில்லன் படத்தில் ஜெயராம் தானும் நடிக்க உள்ளதாக தனது மைக்ரோ பிலாகர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


மேலும் ஜெயராம் உத்தம வில்லன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.


ஜெயராம் உலக நாயகனுடன் தெனாலி, பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் நடித்தவர்.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கிரேசி மோகன் வசனங்கள் எழுதுகிறார். 

நடிகைகள் காதலிக்க கூடாதா..? கொலவெறியில் காஜல்...!



பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை.


 ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.


அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தார் காஜல். அந்த நேரம் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைத்ததால் சென்னையிலேயே தங்கி விட்டார்.


அதையடுத்து ஆந்திராவுக்கு மீண்டும் அவர் சென்றபோது, பழைய தொழிலதிபர் சர்ச்சை காணாமல் போயிருந்தது. அதனால் நிம்மதியடைந்தார் நடிகை.


ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது ஒரு நபருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியாக, மீண்டும் அதே தொழிலதிபர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.


இருப்பினும் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த காஜல்அகர்வால், தற்போது சில மீடியாக்களுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல.


நடிகைகளுக்கும் மனசு உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காஜல், தான் தொழிலதிபரை காதலிக்கவில்லை என்று மறுப்பு சொல்லவில்லை.


 மாறாக, இன்னும் மூன்று ஆண்டு கழித்து என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். 

அவர் வேகத்திற்கு எங்களால் போக முடியாது...



அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.


அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.


அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.


இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல்,


அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார். ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.


அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல். அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும்,


தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.