Thursday 13 March 2014

சமூக சேவையை தொடங்கினார் சமுத்திரகனி!



ஒருவழியாக நிமிர்ந்து நில் பரபரப்பு ஓய்ந்து விட்டதால், தனது அடுத்த பட வேலைகளில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார் சமுத்திரகனி.


தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படும் சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்தை அடுத்து இயக்கும் புதிய படத்தில் இளைஞர்களுக்கு நல்லதொரு மெசேஜ் சொல்லப்போகிறாராம்.


அப்படத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கைக்காக அரும் பாடுபட்டதைத்தான் படமாக்க உள்ளாராம்.


வேளாண்மை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அப்படம் இருக்குமாம்.


இதற்காக, நம்மாழ்வாரின் வாழ்க்கை மற்றும் அவரது போதனைகளை தற்போது தீவிரமாக சேகரித்து வருகிறார் சமுத்திரகனி.


இந்நிலையில், அவர் இயக்கிய நிமிர்ந்துநில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சரத்குமார், நம்மாழ்வார் கதையில் உருவாகும் படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிப்பதாக செய்தி பரவியுள்ளது.

0 comments:

Post a Comment