Sunday 16 March 2014

மோகன்லால் புலம்பிய இயக்குனர்...!



தமிழில் மோகன்லால், ஜீவா நடித்த அரண் என்ற படத்தை இயக்கியவர் மேஜர் ரவி. இப்படம் மலையாளத்தில் கீர்த்தி சக்ரா என்ற பெயரிலும் வெளியானது.


மேலும் மோகன்லால் நடித்த கந்தகார், குருசேத்ரா ஆகிய படங்களையும் மேஜர் ரவி இயக்கினார். இந்நிலையில் இந்திய எல்லை பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார்.


இப்படத்தில் நடிக்க மோகன்லாலிடமே கால்ஷீட் கேட்டு வந்தார். கால்ஷீட் தந்துவிடுவார் என்று காத்திருந்த மேஜர் ரவிக்கு மோகன்லால் டிமிக்கி கொடுத்தார்.


இதையடுத்து பிருத்விராஜை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ரவி.


இதன் ஷூட்டிங்கிற்காக சமீபத்தில் பிருத்விராஜ் மற்றும் பட குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர். இந்திய எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரன்,


அதேசூழலில் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புக்கு நிற்கும் ராணுவ வீரரின் உணர்வுகளையும் மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment