Monday 24 March 2014

கண்டிஷன்களைப் போட்டு கதறடிக்கும் கதாநாயகன்!



அட்டகத்தி படம் வெளியாகி இரண்டு வருடங்களாகிவிட்டன. அந்தப் படத்தில் அறிமுகமான தினேஷின் இரண்டாவது படமாக குக்கூ தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நடிப்பில் வாராயோ வெண்ணிலாவே, திருடன் போலீஸ் ஆகிய இரண்டு படங்கள் தயாரிப்புநிலையில் உள்ளன.


அட்டகத்தி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் இளம் ஹீரோக்களுக்கான பந்தயத்தில் தினேஷ் மிகவும் பின்தங்கியே இருப்பதால் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லையோ? என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


உண்மை என்ன தெரியுமா?


அட்டகத்தி படத்துக்குப் பிறகு தினேஷைத் தேடி வந்த பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாம். பெரிய சம்பளம், கை நிறைய அட்வான்ஸ் என்றெல்லாம் ஆசைக்காட்டியும் தினேஷ் அசைந்து கொடுக்கவில்லை என்கிறார்கள் அவரைத் தேடிப்போய் திரும்பி வந்த உதவி இயக்குநர்கள்.


கதை எனக்குப் பிடிக்க வேண்டும். அப்புறம் முழுக்கதையையும் சீன் பை சீன் சொல்ல வேண்டும். படத்தின் ஸ்கிரிப்ட்டை பைண்ட் செய்து புத்தகமாகக் என்னிடம் கொடுக்க வேண்டும்.


 அதைப் படித்துப்பார்த்து எனக்கு திருப்தியாக இருந்தால்தான் கால்ஷீட் தருவேன் - என்று சொல்லிச் சொல்லியே தேடி வந்த பல இயக்குநர்களை தலைதெறிக்க ஓட வைத்துவிட்டாராம் தினேஷ்.


இப்படி கண்டிஷன் மேல் கண்டிஷனை போட்டதால் தான் தினேஷின் மார்க்கெட் சூடு பிடிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் அவரது நலம்விரும்பிகள்.


சில வருடங்களுக்கு முன், சித்திரம் பேசுதடி என்ற படம் வெற்றியடைந்தபோது, அப்படத்தின் நாயகனான நரேன், தன்னை மினி கமல்ஹாசனாக நினைத்துக் கொண்டு இப்படித்தான் ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டு கதை சொல்ல வந்த இயக்குநர்களை கதற அடித்தார். பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பதை தினேஷ் உணர்ந்தால் சரிதான்!

நக்மாவை கட்டிப்பிடித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., அத்துமீறல்!



சமீபகாலமாக நடிகைகளிடம் நரைமுடி அரசியல்வாதிகள் அத்துமீறி நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது உ.பி மாநிலம் மீரட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நக்மாவிடமும் ஒரு நரைமுடி எம்.எல்.ஏ அத்து மீறி நடந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மீரட் தொகுதியில் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நக்மா. அப்போது ஹாபூர் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். அங்கு பெருந்திரளாக பொதுமக்கள் கூடியிருந்ததால் கூட்டத்தில் நீந்திச்சென்றிருக்கிறார் நக்மா. அப்போது அவரை மேடைக்கு அழைத்து செல்வது போன்று நக்மாவை, அரவணைத்தபடி வந்தாராம், ஹாபூர் எம்.எல்.ஏ., சர்மா என்பவர்.

முதலில் அரவணைத்தபடி வந்தவர் திடீரென்று நக்மாவின் கன்னத்தோடு தனது கன்னத்தை வைத்து ஒட்டி உரசியபடி வந்தாராம். முதலில் இதை கவனிக்காத நக்மா, பின்னர் அவரது பிடி இறுக்கமானதையடுத்து அவரது கைதட்டி விட்டு விட்டு விலகிச்சென்றிருக்கிறார். நக்மாவின் முகத்தில் கடும் கோபத்தைப்பார்த்த அந்த எம்.எல்.ஏ அதன்பிறகு அவர் இருக்கிற பக்கமே செல்லவில்லையாம்.

சரத்குமார் படத்திற்கு பைனான்ஸ் தர யாரும் முன்வரவில்லையாம்...!



ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த சரத்குமாரை, பழசிராஜா, காஞ்சனா போன்ற படங்கள் அவருக்குள் இருந்த வித்தியாசமான நடிகரை வெளியே கொண்டு வந்தன.


அதனால் அவரை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் நோக்கத்தில் உருவான படம்தான் வேளச்சேரி. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக இனியா நடித்து வந்தார்.


சிறிய இடைவேளைக்குப்பிறகு சரத்குமார் கதாநாயகனாக நடிக்க கமிட்டான இந்த படத்தில் அவருக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வீதம் சம்பளம் பேசி படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.


அந்த சமயத்தில் சில நாட்களில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் சரத்குமார் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததாககூட சலசலப்பு ஏற்பட்டது.


இருப்பினும், எப்படியும் படத்தை முடித்து விட வேண்டும் என்று வேகமாக நகர்த்தி வந்த நேரம், பைனான்ஸ் பிரச்னை வெடித்து விட்டதாம். சரத்குமார் என்ற பெரிய நடிகரின் படமாக இருந்தும் பைனான்ஸ் உதவி செய்ய யாரும் முன்வரவில்லையாம்.


அதனால், இப்போது படப்பிடிப்பை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் சரத்குமாரை விட இப்படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்த இனியா பெரிய வருத்தத்தில் இருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் படம்...!



இது தேர்தல் சீசன். அதனால் அரசியலை மையமாக கொண்ட படங்கள் ரிலீசாவதில் மும்முரம் காட்டி வருகின்றன.


சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் இயக்கி வரும் படம் பிரமுகர். திரிசூல், ஜெசி, மோகனவேல், மஞ்சுவா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வருகிறது.


இப்போது தேர்தல் நெருங்குவதால் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். காரணம் இது அரசியல் படம். அதைப் பற்றி இயக்குனர் ஜே.பி.அழகர் இப்படிக் கூறுகிறார்.


காதலுக்காக போராடுகிற இளைஞர்கள் ஏன் நாட்டுக்காக போரடக்கூடாதுன்னு சொல்ற படம். காதல் காதல்னு தங்களோட நேரத்தையும், சக்தியையும் இளைஞர்கள் வீணாக்கிகிட்டிருக்காங்க.


அவுங்கள நாட்டு பக்கம் திருப்புற படம். இன்றைய அரசியல் சூழ்நிலையை மாற்ற நினைக்கிற நான்கு இளைஞர்களின் கதை. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் பண்றோம் என்கிறார் அழகர்.

சிறுவர்-சிறுமிகளை மோதவிடும் இயக்குநர் விஜய்!



பசங்க படத்தில் முன்னணி நடிகர்களைப்போன்று சிறுவர்கள் பெரிய ஓப்பனிங் கொடுத்து படத்தை ஆரம்பித்தார் பாண்டிராஜ். அதேப்போல், ஒரு சிறுவன் ஹீரோ அவனைச்சுற்றி சில சிறுவர்கள், அதேபோல் ஒருவன் வில்லன் அவனைச்சுற்றி சில சிறுவர்கள் எனவும் கதை பண்ணியிருந்தார். அவர்களுக்கிடையே நிகழும் ஈகோப்போரை இயல்பாக படம் பிடித்திருந்தார்.


அதையடுத்து இப்போது ஏ.எல்.விஜய்யும், சிறுவர்-சிறுமிகளை மையப்படுத்தி சைவம் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமைக்கொண்டு அவர் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, பழைய தாத்தா- பாட்டி உறவுகளைப்பற்றியும் இப்படத்தில் சொல்லியிருக்கிறாராம் விஜய்.


அதோடு, பேபி சாரா, ஒரு சேவல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு 7வயது சிறுவனை வில்லனாக சித்தரித்திருக்கிறாராம் அவர். அதனால் அன்பு பாசம் என்பது கதையின் சாரம்சமாக இருந்தாலும், சிறுவர்-சிறுமிகளுக்கிடையே நிகழும் போட்டி பொறமைகளையும் காட்சிபடுத்தியிருக்கும் விஜய், அவர்களையும் காரசாரமாக மோதவிட்டுள்ளாராம்.

பிரிந்த காதலர்கள் தம்பதியர்கள் ஆனார்கள்...!



சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.

அம்மாவை கேட்காம இந்த காரியத்த பண்ணலாமா? இப்ப பாரு என்ன ஆச்சு...!



பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நான்குமுனை போட்டியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அதோடு சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.


இதில் அதிமுக சார்பில் நடிகர்கள் ராமராஜன், தியாகு, வையாபுரி உள்பட பல நடிகர்கள் தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.


அந்த வகையில், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவரை ஆதரித்து கடந்த சில தினங்களாக தியாகு, வையாபுரி இருவரும் ஒவ்வொரு கிராமங்களாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.


அப்படி அவர்கள் செல்லும் ஊர்களில் பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம்.


அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதனால்,


அந்த ஏரியாவைச்சேர்ந்த பறக்கும் படை பிரிவு தாசில்தார் குணசேகரன் வையாபுரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தெடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விஜய்க்காக நிறைய யோசிக்கிறேன் அனிருத்!



தனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.


 சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சில சிறிய பட்ஜெட் படங்களில் கூட கமிட்டாகி பின்னர் வெளியேறினார்.


மேலும், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும்போதே, விஜய் படத்துக்கான டியூன்களை ரெடி பண்ணத் தொடங்கி விட்டார். அப்படி தொடங்கியவர் இப்போது அப்படத்துக்கு தேவையான சில டியூன்களை ஓ.கே செய்து விட்டவர், விஜய் பாடும் டியூனை மட்டும் இன்னும் ஓ.கே பண்ணவில்லை.


ஏற்கனவே விஜய் பாட வேண்டிய டியூனை ரெடி பண்ணினபோதும், அதில் அனிருத்துக்கு போதுமான திருப்தி வரவில்லையாம். அதிலும், சமீபத்தில் துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி என விஜய் பாடிய இரண்டு பாடல்களுமே ஹிட் என்பதால். அந்த இரண்டு பாடல்களையும் மிஞ்சும் வகையில் தனது இசையில் உருவாகும் பாடல் மெகா ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறாராம்.


அதனால், அந்த ஒரு டியூனுக்காக நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அனிருத்.

ஷங்க்ரின் ‘ஐ’ லேட்டஸ்ட் தகவல்கள்!



ஷங்கர் படம் என்றால் எதிர்பார்ப்பை பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால், எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சும் அளவில் ‘ஐ’ படம் இருக்கும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.


 ரொமான்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்காக ‘ஹாபிட்’ போன்ற படங்களில் மேக்-அப் பணிகளைக் கவனித்த ‘வேட்டா’ நிறுவனம் ‘ஐ’ படத்தில் பணியாற்றுகிறது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து, இந்தியா முழுவதுமான பார்வை இப்படத்தின் மீது திரும்பி இருக்கிறது.


‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ போன்ற படங்களில் சமூக பிரச்சனைகளையும், ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் காதலையும், ‘எந்திரன்’ படத்தில் சயின்ஸ் ஃபிக்ஷனையும் மையப்படுத்தி படமெடுத்த ஷங்கர், ‘ஐ’ படத்திற்காக இதுவரை போகாத ரூட்டில் பயணித்திருக்கிறாராம். படத்தின் 30 சதவிகித படப்பிடிப்பை சீனாவில் நடத்தியிருக்கிறார்கள்.


‘ஐ’ படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே சீனாவிற்கு ‘டேக் ஆஃப்’ ஆகி, இடைவேளை வரை அங்கேதான் பயணிக்குமாம். பெரிய பெரிய பூக்கள் நிறைந்த ஏரியாக்களில் நிறைய தூரம் பயணம் செய்து படமாக்கியிருக்கிறாராம். ‘அந்நியன்’ படத்தில் வரும் ஆம்ஸ்டர்டாம் தோட்டத்தைவிட இதில் வரும் பூந்தோட்டங்கள் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்குமாம்.


அதோடு ‘மென் இன் ப்ளாக்’கில் வேலை பார்த்த மேரி வாட், ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பண்ணியிருக்கிறாராம். இப்படத்தின் ஒரு கேரக்டருக்காக உடலை மெலிய வைத்துள்ள விக்ரம், மேக்-அப் கலைஞர்களின் வேண்டுதலுக்கிணங்க தலையையும் மொட்டையடித்திருக்கிறார்.


படத்தில் வரும் அந்தக் கேரக்டர் மிகவும் பேசப்படும் என்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.


விக்ரமிற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தை கோடைவிடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.