Tuesday 11 March 2014

காருக்குள் ஒரு ‘அதிர வைக்கும் மறைவிடம்’



ஸ்பெயின் நாட்டுக்குள் திருட்டுத்தனமாக செல்ல முயலும் ஆட்கள் எல்லை காவல்படை மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. 60 சதவீதமானவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்,

40 சதவீதமானவர்கள் தப்பி உள்ளே சென்றுவிடுகிறார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.


தற்போது மொரக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் எல்லை வழியாக செல்ல முயன்ற ஒருவரை எல்லை காவல்படையினர் பிடித்திருக்கின்றனர். இவர் எப்படி செல்ல முயன்றார் என்பதுதான், காவல்படையினரை அதிர வைத்திருக்கிறது.


ஸ்பெயின் நாட்டின் பெனி-என்ஸார் எல்லையில், ரெனால்டு-7 கார் கார் ஒன்று வந்தது. அதில் இரு மொராக்கோ நாட்டவர் இருந்தனர். இருவரிடமும் ஒழுங்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் இருந்தன. காருக்குள் வேறு யாரும் இல்லை. அத்துடன் போக விட்டிருக்க வேண்டும்.


ஆனால், ஏதோ சந்தேகம் ஏற்பட்டதில், காரை சோதனை போட்டதில், மூன்றாவது நபர் ஒருவர், காருக்குள் அதிர வைக்கும் மறைவிடம் ஒன்றில் இருந்தது தெரிந்தது.
‘அதிர வைக்கும் மறைவிடம்’ எது தெரியுமா? காரின் சீட்!

ஆம். முன் சீட்டுக்கு உள்ளே (சீட்டுக்கு அடியே அல்ல) ஒரு நபர் இருந்தார்.


முன் சீட்டுக்குள் உள்ள குஷன்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு, அதன் ஃபிரேமுக்குள் ஒரு நபரை அமர வைத்து, அதற்குமேல் சீட்டில் மேல் பகுதியை பொருத்தியிருந்தார்கள். சந்தேகம் ஏற்படாமல், அந்த சீட்டில் ஒரு நபர் அமர்ந்து பயணம் செய்திருந்தார்!

கீழேயுள்ள போட்டோவில், சீட்டுக்குள் உள்ள குஷன்கள் அனைத்தையும் எடுத்துவிட்ட, நிலையில் அதன் ஃபிரேம் மட்டும் இருப்பதை பாருங்கள். இதற்குள் ஒரு நபர் எப்படி மறைந்திருந்தார் என்பதை அடுத்த போட்டோவில் பாருங்கள்.


எல்லைக்காவல் அதிகாரிகள் இந்த நபர் சீட் பிரேமுக்கு வெளியே வருவதற்கு உதவி செய்தபின் அவரை கைது செய்தனர். இவரை காரில் மறைத்து வைத்து அழைத்து வந்த இரு மொராக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவரை பிடித்த அதிகாரி, “யாராலும் ஊகிக்க முடியாக மறைவிடத்தில் இருந்து பயணம் செய்திருக்கிறார். ஆனால், அவரது துரதிஷ்டம் எனக்கு சந்தேகம் ஏற்பட்டபோது சீட்டை அமுக்கி பார்த்தேன்.

அப்போதுகூட சீட்டுக்குள் கடத்தல் பொருட்கள் ஏதாவது மறைத்து வைத்திருக்கலாம் என்றுதான் சந்தேகித்தேன். உள்ளே முழுசாக ஒரு ஆள் இருப்பார் என கனவிலும் எண்ணவில்லை” என்றார்.

இந்த கூட்டணியால் விஜய் சேதுபதிக்கு பலமா,பலவீனமா...!



தென்மேற்கு பருவகாற்று படத்தின் முலம் அறிமுகமானவர் விஜய் சேதுபதி.


பரவலாக குறும்பட இயக்குனர்களின் வெள்ளித்திரை படங்களில் அதிகபடியாக  நடித்து வரும் இவரை பல ஜாம்பவான்களிடையே பாராட்டப்பெற்றுள்ளார்


தற்போதைய தகவலின்படி பாலாவோட படத்தில் நடிக்க போறாராம் விஜய் சேதுபதி


பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் இப்போழுது வசந்த குமாரன் படத்தை தயாரித்து வருகிறார்கள்

 இதில் ஹீரோவாக நடிக்கிறார் விஜய் சேதுபதி


தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில்,

 ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் இப்படத்தில் இசையமைக்கிறார்

 ஜஸ்டின்பிரபாகரன்.

முட்டை கெடாமல் இருக்க… டிப்ஸ் இதோ…



அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய எளிமையான, அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ் இதோ…

முட்டை கெடாமல் இருக்க…

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க…

உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

ஸ்வீட் செய்த பின்…

ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.

குலோப்ஜாமூன் செய்யும்போது…

குலோப்ஜாமூன், ஜிலேபி, ஜாங்கிரி முதலியவைகளுக்கு ரொம்ப கம்பி பதம் தேவையில்லை. பிசுக்குப் பதம் இருந்தால் போதும் கைகளில் பிசுக்காக ஒட்ட வேண்டும் கம்பிப்பதம் ஆரம்பிக்கும் முன் எடுத்துவிட வேண்டும்.

மைசூர் பாகு செய்யும்போது…

மைசூர் பாகு, காஜு கட்லி, பாதாம் கேக் முதலியவைகளில் கடலை மாவு அல்லது முந்திரி அல்லது பாதம் போட்டுக் கிளறும் ஸ்வீட்டுகளுக்கு, பாகு, ஒற்றைக் கம்பிப் படியாக இருக்க வேண்டும்.

விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவியும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா...!



மியூசிக் சேனலில் நேயர்களுடன் உரையாடி அவர்களுக்கு பிடித்த பாட்டை போட்டுக் கொண்டிருந்த தொகுப்பாளர் சுரேஷ் ரவி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


 படம் அதிமேதாவிகள். அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லிசிங் தயாரிக்கிறார். சுரேசுக்கு ஜோடியாக நடிக்கிறார் இஷாரா. கலாபவன்மணி, தம்பி ராமையா, ரேணுகா, நடிக்கிறார்கள்.


கே.பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார்.

"கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களை அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு எதையாவது செய்து மாட்டிக் கொள்வார்கள்.


அதன் பிறகு அதிலிருந்து வெளி வரமுடியாமல் தவிப்பார்கள். அப்படி தவிக்கிற ஒரு மாணவனும், அவனை காப்பாற்றுகிற ஒரு அதிமேதாவியின் கதை.


சீரியசான விஷயங்களை ஜாலியாக சொல்றோம்" என்கிறார் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன்.

தணிக்கை குழுவின் அதிரடி முடிவு...!



யூ சான்றிதழ் வாங்கிக் கொடுத்த டாஸ்மாக் பாட்டு!

ஒரு படத்தில் டாஸ்மாக் பாட்டு இருந்தால் அந்த படத்துக்கு உறுதியாக யு/ஏ அல்லது ஏ சர்ட்டிபிக்கேட்தான். வரிவிலக்கும் கிடைக்காது.

 நாங்க விற்போம், ஆனால் நீங்க காட்டக்கூடாது என்பது அரசின் பாலிசி. முதன் முறையாக ஒரு டாஸ்மாக் பாடலுக்காகவே அந்த படத்தின் மற்ற குறைகளை கண்டுகொள்ளாமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளது தணிக்கை குழு.

ஆசாமி என்ற பெயரில் போலி சாமியார்களை பற்றி படம் எடுத்த ஆண்டாள் ரமேஷ் இப்போது, இன்னாருக்கு இன்னார்தான் என்று இறைவன் எழுதி வைத்ததை யாராலும் மாற்ற முடியாது என்ற கருத்தை கொண்ட இன்னாருக்கு இன்னாரென்று என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.

சிலம்பரசன் (சிம்பு அல்ல), ஸ்டெபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குடிக்காதீங்கப்பா... என்று அட்வைஸ் பண்ணும் பாடல் ஒன்றை இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் எழுதி அந்த பாட்டுக்கு ஆட்டமும் போட்டிருக்கிறார்.

"கேட்டுக்க நண்பா கேட்டுக்க, மாத்திக்க நண்பா மாத்திக்க..." என்று துவங்கும் அந்தப் பாடல் குடியின் தீமையை புட்டு புட்டு வைக்கிறதாம்.

வேல்முருகன் பாடியிருக்கிறார். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்த பாட்டுக்காகவே படத்துக்கு யூ சான்று தர்றோம் என்று சொல்லி யூ சர்ட்டிபிக்கேட் கொடுத்திருக்கிறார்கள்.

 அதோடு வழக்கமாக பாட்டிலின் பிராண்டை மறைக்க சொல்வார்கள். அதைக்கூட செய்ய சொல்லவில்லையாம். இதை பெருமையாக சொல்கிறார் ஆண்டாள் ரமேஷ்.

இன்று ஒரு பயனுள்ள தகவல்...!



புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.

என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும்.

கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் 1 /2 மேசைக்கரண்டி தேன் கொடுத்தால் நன்கு தூங்கும்.

அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.


பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல்  வரமால் தடுக்கும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா.  கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்.

விரைவில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...!



ஒவ்வொரு முறையும் ரஜினி சார்பாக நான் தான் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறேன், அதனால் விரைவில் ரஜினி தனது ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டிகோள் வைத்தார் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்.

நேற்று நடந்த கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் டைரக்டர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ரஜினி தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து மாநில மாநாடு போல் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கேட்டுக் கொண்டார்.

“ரஜினிகூட நான் 25 படம் வேலை செஞ்சிருக்கேன்.. அப்பவும் போலத்தான் இப்பவும் இருக்கிறார்.. அவருக்கு லைட் பாயும் ஒண்ணும் தான், நானு ஒண்ணு தான். டைரக்டர் ஷங்கரும் ஒண்ணு தான். அல்லோர்கிட்டேயும் ஒரே மாதிரி பாசத்தோடு தான் பழகுவார். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை பார்ப்பதே அபூர்வம்.

ரஜினி என் படத்துல நடிக்கும் போதுதான் லவ் பண்ணினார்.. என் படத்துல நடிக்கும் போது தான் கல்யாணம் செஞ்சார். என் படத்துல நடிக்கும் போது தான் புள்ளை பெத்துக்கிட்டார்… அவருடைய மனைவி லதாவை விட அதிகமா நான் தான் அவர் கூட இருந்திருக்கேன்.. நானும், அவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறோம்.

ரஜினிய அவருடைய ரசிகர்கள் பல காலமாக பார்க்க முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு முன்னர் பல ரசிகர் மன்ற கூட்டங்களுக்கு ரஜினி என்னையே அவர் சார்பாக பேசி விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைப்பார். நானும் போய் ரஜினி சார்பாக பேசிவிட்டு வருவேன். ஆனால் ஒவ்வொரு முறை போகும் போதும் என்னசார் நீங்க மட்டும் தான் வர்றீங்க. ஒரு தடவையாவது தலைவரை கூட்டிட்டு வாங்க… என்று செல்லமாக கோபித்துக் கொள்வார்கள்.

அதனால் இந்த மேடையில் ரஜினிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ப்ளீஸ் நீங்க சீக்கிரம் உங்க ரசிகர்களை நேரில் சந்திக்க வேண்டும். அதற்கு இந்த ‘கோச்சடையான்’ படத்தின் வெற்றி விழாவை ரஜினி தனது ரசிகர்களை ஒரு மாபெரும் ரசிகர் மன்ற மாநாடாக நடத்த வேண்டும் என்று அவரை கேட்டுக் கொள்கிறேன்..” என்று பேசினார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ரஜினி கோச்சடையான் வெற்றி விழாவை ரசிகர்கள் மாநாடாக நடத்துவேன், அதில் எனது ரசிகர்களை நேரில் சந்திப்பேன் என்றார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 28 - இருளில் மறைந்திருக்கும் இனம் வெளிச்சத்திற்கு வருகிறது...!




பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் எழுதி, ஒளிப்பதிவு செய்து, தயாரித்து, இயக்கியிருக்கும் இனம் திரைப்படம் வருகிற மார்ச் 28ல்
வெளியாகவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரினால் ஏற்பட்ட கொடூரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம், போரினால் அகதியாக வேறு நாட்டிற்குச் சென்று அங்கு வாழும் ஒரு பெண்ணின் கதையினை மையப்படுத்தி, உணர்வுப்பூர்வமாகத் தயாராகியிருக்கிறது இப்படம். கடந்த பிப்ரவரி 20ல் வெளியான இப்படத்தின் டீசர் ஏற்கெனவே பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுவருகிறது.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கடந்த 2013ல்
நடைபெற்ற பூசான் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டுப் பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

சந்தோஷ் சிவனுக்கு இவ்வாண்டிற்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

பறக்கும் எச்சரிக்கையால் பயந்த போன காமெடி புயல்...!




காமெடி புயல் வடிவேலு சில அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு பிரச்சனையில் இருந்தார். அதனால் சினிமா வாழ்க்கையை இரண்டு வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தார்.


இப்போது மறுபடியும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.அந்தப்  படங்களில்  வடிவேலுவின்  முகபாவங்களைப்  பார்க்கும் போதே     சிரிப்பு  தானாக வருகிறது.


இந்நிலையில் தற்போது  படப்பிடிப்பை  முடித்து விட்டு  இறுதிகட்ட  பணிகளில் பிசியாகியுள்ளனர். படத்தை சித்திரை  மாதம் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


இதையடுத்து,  கோடை  விடுமுறையில்  கோச்சடையான்,  விஸ்வரூபம்-2,  நான் சிகப்பு மனிதன்,  மான்கராத்தே  போன்ற  மெகா  படங்களும் திரைக்கு வருவதால், வடிவேலு  படத்துக்காகவும்  தியேட்டர்களை  கைப்பற்றும் வேலைகள்  நடக்கிறது.


ஆனால் இந்தப் படத்தை திரையிட இருந்த சில தியேட்டர்களுக்கு எச்சரிக்கை வருகிறதாம்.

இயக்குநர் பாண்டிராஜின் ஃப்ளாஷ்பேக் - காணாமல் போன பக்கங்கள்..!



 இது தேர்வுகளின் காலம். அழிக்கவே முடியாத நினைவுகளின் இங்க் நம் விரல்களின் ரேகைகளில் நிரந்தரமாய் படிந்திருக்கிறது.


ஸ்லேட் குச்சி, பென்சில் என பரிணாம வளர்ச்சி யடைந்து இங்க் பேனாவால் எழுதப்போகும் நாட்களுக்காகக் காத்திருப்போம். கண்டிப்பாக நம் முதல் இங்க் பேனாவை ரொம்ப வருடங்களுக்கு பத்திரமாய் வைத்திருப்போம். இன்றும் கூட சிலர் வைத்திருக்கலாம்.


பேனாக்களை வாங்கப் போவதே ஒரு சுகம். கடைக்கு சென்று இங்க் பேனா என்றதும் இரண்டு, மூன்று பாக்சை திறந்து வைப்பார்கள். கலர் கலராக நம்மை பார்த்து சிரிக்கும் பேனாக்களில் இருந்து, எதை தேர்ந்தெடுப்பதென முழிப்போம்,


இறுதியாக, நமக்கு ராசியான நிற பேனாவை எடுத்து, நிப்பை இங்கில் நனைத்து பிடித்த பெயரையோ, பிள்ளையார் சுழியையோ எழுதிப் பார்ப்போம். முதல் எழுத்து எழுதும் போதே மனசு சொல்லும், “டேய்.. இவ உனக் கானவடா... இனிமே உன் பாக்கெட்ல இருந்து இதயத்தை உரசிக்கிட்டிருக்க போறா!!!”.


என் பேனாவை வேறு யாராவது எடுத்து எழுதினால் பிடிக்கவே பிடிக்காது. விடாப்பிடி யாக “ஒரு நிமிஷம் பேனா கொடேன்... எழுதிட்டு தர்றேன்” என யார் கேட்டாலும் மூடியை கழற்றிக்கொண்டுதான் கொடுப்பேன். அப்போதுதான் பேனா திரும்ப வரும். பேனாவிற்கு இங்க் போட, இன்று காருக்கு பெட்ரோல் போடுவதை விட அதிக கவனம் எடுத்த நாட்கள் அவை.


 துரை கடையில் தான் சுத்தமான, கெட்டியான ப்ரில் இங்க் கிடைக்கும். ஆர்.பி. கடையில், அப்போதே கலப்பட இங்க்தான். கேம்லின் இங்கில் தண்ணீர் கலந்து விற்பார்கள். எழுதினால் வெளுத்தது போல இருக்கும்.


சில நேரம் நண்பர்களிடம் ஐந்து சொட்டு, பத்து சொட்டு இங்க் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் வரும். சிலர் ஐந்து சொட்டுக்கு மேல் கடன் கொடுக்க மாட்டார் கள். ஊத்தும்போது ஒரு சொட்டு கீழே விழுந்துவிட்டாலும், அதுவும் நம்ம கணக்குதான். அதிலும், காதலிப்பவர்கள் காதலியிடம் இங்க் கடன் வாங்குவதற்காகவே ‘இங்க்’கை கீழே ஊற்றிவிட்டு கடன் கேட்பார்கள்.


அவள் பேனாவில் இருந்து அவன் பேனாவுக்கு, சொட்டு சொட்டாக இங்க் இறங்குவது இதயம் துடிப்பது போலவும், இளையராஜா மெட்டு போடுவது போலவும் இருக்கும். மேலும் பேனா மூடியால் விசிலடித்து காதலியை திரும்பிப் பார்க்க வைப்பதிலும் அவ்வளவு சந்தோஷம்.

வகுப்பில் ஒருவன் உஜாலா சொட்டு நீலம் போட்ட வெள்ளை சட்டையோடு வந்துவிடக் கூடாது. எப்படித்தான் இங்க் அடிப்பார்களோ, வீட்டுக்குப் போகும் போது ஒரு மாடர்ன் ஆர்ட் கண்டிப்பாய் அவன் சட்டையில் இருக்கும். நமக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நட்பு எதிரிகள் வேறு எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள், “இங்க பாருடி.. பேனாவை திறந்தே வச்சிருக்கோம்.. யாராவது பெஞ்சில சாஞ்சீங்க.. அம்புட்டுதான் சட்டை...” என, ஏவுகணைகளாக பேனாக்கள் பின் பெஞ்சில் வரிசை கட்டியிருக்கும்.

இந்த இங்க் பேனாக்களில் பலவகை உண்டு. இங்க் எவ்ளோ இருக்கிறதென தெரியும் கண்ணாடி பேனா, மர பேனா, குட்டி பேனா, குண்டு பேனா, ஒல்லி பேனா, என அப்பப்போ பேனாக்கள் ரிலீஸ் ஆகி கலக்கும். கேமல், லக்சர் என உள்நாட்டு பேனாக்களின் காலத்தில்தான் திடீர் என்ட்ரி கொடுத்தார் ஹீரோ. அதுவும் தங்க நிற மூடியோடு. அவ்வளவுதான், ஹீரோ பேனா வைத்திருப்பவன்தான் ஹீரோ. எனக்கும் முத்து மச்சான் அந்தமான்ல இருந்து ஹீரோ பேனா கொண்டுவந்து கொடுத்தார்.


அதை சட்டையில் சொருகிக்கொண்டு சுற்றும் போது, ஏதோ தங்க மெடலை சொருகியிருப்பது போல பெருமை பொங்கும். என்னுடன் படித்த ‘சாரி’ சங்கர், பள்ளிக்கூடத்திலேயே எல்லோருக்கும் வட்டிக்கு விடுவான். ஒரு ரூபாய்க்கு பத்து பைசா பிடித்துக்கொண்டு தொண்ணூறு பைசா தருவான்.


வாங்கி தின்பதற்காக அவனிடம் இரண்டு ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். சொன்னபடி திருப்பி தரமுடியாததால், என் ஹீரோ பேனாவை ஜப்தி செய்துவிட்டான். வட்டியும் முதலுமாக திருப்பி அடைத்து அதை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இங்க் பேனாக்களை நமக்கு வசமாக பழக்குவதே ஒரு கலை. ஒரே கோணத்தில் பிடித்து சாய்வாக எழுதி, நிப்பை கண்ணாடியில் தேய்த்து, பிளேடால் கீறி, சீர்படுத்துவோம். இப்படி, தயாராகும் பேனாவை களவாண்டு போகவே ஒரு கூட்டம் இருக்கும். நம் மேல் இருக்கும் பகையில் பேனாவின் நிப்பை உடைத்தோ, வளைத்தோ வைத்து விடுவார் கள். இவர்களிடம் இருந்து பேனாவை காப்பாற்றுவதற்காக எப்போதும் பேனாவை பாக்கெட்டில் சொருகியபடியே சுற்றவேண்டும்.


தேர்வுக்கு முதல்நாள் பேனாவை கழற்றி, அலசி, காயவைத்து, புது இங்க் நிரப்புவதே தனி சுகம். இதையெல்லாம் பார்த்துவிட்டு நம் வீட்டிலோ, “படிக்கிறத தவிர மத்ததெல்லாம் நல்லா பண்ணு...” என பாராட்டு பத்திரம் வாசிப்பார்கள். பரீட்சை எழுத இரண்டு, மூன்று பேனாவுடன் வருபவர்கள் மத்தியில், சிலர் இங்க் பாட்டிலோடு வருவார்கள். அவ்வளவு முன்ஜாக்கிரதையாம்.


கடைசியில் பரிட்சை முடிந்ததும், இங்க் அடித்து கொண்டாடினால்தான் ஒரு முழுமையே அடைவோம். இப்படி சந்தோஷங்களில் மட்டு மல்ல, சண்டைகளின் காயங்களிலும் இங்க் இருக்கும். கீழே விழுந்தாலும், கட்டி புரண்டு சண்டை போட்டாலும், தீப்புண் ஏற்பட்டாலும் காயங்களின் மேல் இங்க்கையே தடவுவோம். அதுதான் எங்களின் சர்வரோக நிவாரணி.


இப்படி இங்க் பேனாக்கள் தனிக்காட்டு ராஜாவாக ஆண்ட காலகட்டத்தில்தான் வெள்ளை நிற ரெனால்ட்ஸ் பால் பேனாக்கள், படையெடுக்கத் தொடங்கின. முழுபரிட்சை யெழுத பால் பேனாக்களுக்கு சில ஆசிரியர்க ளின் ஆதரவும், பலரின் எதிர்ப்பும் நிலவ எங்களுக்கோ பயங்கர குழப்பம். பிறகு தலைமையாசிரியரிடம் இருந்து பால் பேனாவை உபயோகிக்கலாம் என்று சர்க்குலர் வந்தது நினைவிருக்கிறது.

இன்றும் கம்ப்யூட்டரில், ஸ்கிரிப்ட்டை டைப் செய்து பிரிண்ட்அவுட் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் போனாலும், முதலில் அந்த காட்சி களை பேனா பிடித்து அடித்து, திருத்தி, கோடு போட்டு எழுதுவதில் இருக்கும், ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைப்பதே இல்லை.


இப்படி என் வாழ்வில் என்னுடன் ஏராள மான, ‘பென்’கள் பயணித்திருந்தாலும் (பெண்கள் அல்ல, பேனாக்கள்!) இன்றும் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பேனா, ‘வம்சம்’ படத்தின்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர், எனக்கு கொடுத்த பேனா. தனது வாழ்வின் பெரும்பகுதியில், எழுதிக்கொண்டே இருந்தவர், இருப்பவர் கலைஞர் அவர்கள். இன்றும் அவர் எழுதிப்பார்த்து கொடுத்த பேனாவை பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்.


நாம் கைத்தட்டி ரசித்த டூரிங் டாக்கீஸ், அழுது சிரித்து எழுதிய கடிதங்கள், ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டைகள், மக்கிய மட்டை கொஞ்சம், கோழி எச்சம் கொஞ்சம், செங்கல் தூள் கொஞ்சம் வைத்து, அரைத்து பூசி அழகு பார்த்த மருதாணிகள், இவையெல்லாம் மெல்ல மெல்ல காணாமல் போனது போல, ‘இங்க்’ பேனாவும் மெல்ல மெல்ல நம்மை விட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கிறதே! 

அமரா - திரை விமர்சனம்...!



ஊரில் வெட்டி ஆபீசர் வேலை பார்ப்பவர் ஹீரோ அமரன். தம், தண்ணி என்று தெனாவட்டு காட்டும் ஹீரோவை, திருமணத்துக்கு பெண் பார்க்க செல்லும் நண்பன் தவிர்க்கிறான்.


காரணம் தெரிந்து ஷாக் ஆகும் ஹீரோ, திருந்தி வாழ நினைக்கிறார். அத்தை நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்கிறார். அங்கு போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் சம்பத்தை இவர் அடிக்க, வில்லங்கம் விபரீதமாகிறது.


பிறகு அங்கிருந்து சென்னைக்கு எஸ்கேப் ஆகிறார். ரயிலில் ஹீரோயினை சந்திக்க, சினிமா இலக்கணப்படி பார்த்த உடனேயே காதல் வந்துவிடுகிறது. ஹீரோயின் யாரென்று பார்த்தால், சாதிக் கட்சி தலைவரின் மகள்.


காதலை எதிர்க்கிறார் என்பதால், அவரிடமிருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இவர்களை ஒருவர் எதேச்சையாக புகைப்படம் எடுக்க, அமைச்சர் மகள் காதலனுடன் ஓட்டம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அமரனை காதலன் என்று அமைச்சர் துரத்த, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.


வெட்டி ஆபீசர் கேரக்டருக்கு பொருந்துகிறார் அமரன். அடுத்த படத்தில் நன்றாக நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அவருக்கான காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறது. ஹீரோயின் ஸ்ருதி அழகாக இருக்கிறார்.


மற்றபடி நடிக்க வாய்ப்பு குறைவு. பிஸ்கட் மயக்கத்தில் ஹீரோவுடன் இருந்துவிட்டு மறுநாள், ‘நீ யாருடா’ என்று எகிறுவது முதல் அவருக்கான காட்சிகள் அழகாக இருக்கிறது. ஆனால், எதுவும் மனதில் பதியவில்லை.


 சாதிக் கட்சி தலைவராக நடித்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆறுதல் தருகிறார். சம்பத் பெரிதாக ஏதோ செய்வார் என்று பார்த்தால், ம்ஹும். கஞ்சா கருப்பு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இமானின் இசையில் பாடல்கள் அருமை. மற்றபடி சொல்வதற்கு எதுவும் இல்லை.

வாழைப்பழ தேங்காய் பிரட் - அதிரடி ரெசிப்பி..!



 குழந்தைகளுக்கு பிரட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் இனிப்பு பிரட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். காலை வேளையில் குழந்தைகளுக்கு தோசை, இட்லி போன்றவை சாப்பிட்டு போர் அடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு வாழைப்பழத்தையும், தேங்காய் துருவலையும் வைத்து, ஒரு அருமையான சுவையில் பிரட் செய்யலாம்.


இந்த பிரட்டை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ தேங்காய் பிரட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

எண்ணெய் - 1/2 கப்

முட்டை - 3

தயிர் - 1 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வாழைப்பழம் - 2 (மசித்தது)

தேங்காய் துருவல் - 1/2 கப் (வறுத்தது)

தேங்காய் துருவல் - 1/2 கப்

வென்னிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன் செய்முறை:


செய்முறை:

முதலில் மைக்ரோவேவ் ஓவனை 350 டிகிரியில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பின் பிரட் பேனை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பௌலில் சர்க்கரை, முட்டை, வென்னிலா எசன்ஸ், எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு ஸ்பூனை வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து மசித்து வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் வறுத்த தேங்காய் துருவலை, முட்டை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அதே கலவையில் மாவை மெதுவாக போட்டு கிளறி விட்டு, அதனை பிரட் பேனில் ஊற்றி, பின் அதன்மேல் தேங்காய் துருவலை தூவி, பிறகு ஒரு அலுமினிய பேப்பரினால் அதனை சுற்றி, ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கும் போது, அதனை ஒரு கத்தியினால் வெட்டும் போது, கத்தியில் மாவானது ஒட்டிக் கொண்டால், மீண்டும் அதனை 30 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது பிரட்டானது ரெடியாகியிருக்கும். அதனை குளிர வைத்து பரிமாறலாம்.

குறிப்பு:

இந்த பிரட்டை சரியாக பராமரித்து வந்தால், 2-3 நாட்களுக்கு நன்றாக இருக்கும். 

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...!



குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர்.


அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.


 மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர்.


 இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.


ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம்.


இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு

பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.


வெங்காயம்

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

மருத்துவர் ஆலோசனை

தேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.

ரோமானிய அழகி சல்மான்கானின்வலையில் விழுந்த கதை இதுதான்...!




நடிகர் சல்மான்கான் ரோமானிய அழகியை காதலிக்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. இவரை பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும் சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது.


இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார்


இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–


என் வாழ்க்கை இப்போது திடீர் பிரகாசமாகியுள்ளது. 15 வயதில் இருந்து இது போன்ற கால கட்டம் எனக்கு அமைந்தது இல்லை. முதல் தடவையாக இந்த மாற்றத்தை அனுபவிக்கிறேன்.


 விரைவில் என் வாழ்வில் நல்ல விஷயம் ஒன்று நடக்கப்போகிறது. மனித நேயத்தை நான் பின்பற்றுகிறேன். முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பின்பற்றுகிறேன்.


எனது தந்தை பதான் சமூகத்தை சேர்ந்தவர். தாய் இந்து. இரண்டாவது அம்மா கத்தோலிக்க மதம், மைத்துனர் பஞ்சாபி எனது மனைவியை வெளியே இருந்து கொண்டு வர நினைக்கிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்.

தன் சத்தோஷத்திற்கு புது காரணம் சொல்லும் ஹன்சிகா...!



சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு ஹன்சிகா இன்னும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்.


தரணி இயக்கும் 'ராஸ்கல்' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல், மகிழ் திருமேனி இயக்கும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவுக்கும் ஜோடியாக நடிக்கிறார்.


ஏற்கனவே 'மான்கராத்தே', 'அரண்மனை' படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அதிக படங்களில் நடிக்க கமிட் ஆவதால் சந்தோஷமாக இருக்கிறாராம்.


சிம்புவின் காதலும், பிரிவும் உங்களைப் பாதிக்கவில்லையா என்று யார் கேட்டாலும், ''இல்லை. முன்பை விட இப்போதுதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று பட்டென்று பதில் சொல்கிறாராம் ஹன்சிகா.