Thursday 20 March 2014

மிஷ்கினை அலைய வைக்கும் சிம்பு...!



சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களால் கைவிடப்பட்ட முன்னணி இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பரந்த மனசு கொண்டவராக மாறி வருகிறார் சிம்பு.


அந்த வகையில், விஜய், சூர்யா போன்ற நடிகர்களால் கைவிடப்பட்டு நிர்கதியாக நின்று கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு சிம்புதான் தக்க சமையத்தில் கைகொடுத்தார்.


அதையடுத்து இரண்டாம் உலகம் படத்தை ப்ளாப்பாக கொடுத்த செல்வராகவனைக் கண்டாலே முன்னணி ஹீரோக்களெல்லாம் தெறித்து ஓடிக்கொண்டிருக்க சிம்புவிடம் கேட்டபோது, உங்கள் படத்தில் நடிக்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை.


அதனால் கண்டிப்பாக கால்சீட் தருகிறேன் என்று சொல்லி ஒப்பந்தமானார்.


அதையடுத்து இப்போது, மிஷ்கினும் சிம்புவை துரத்துகிறாராம். யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்தவர் என்பதால்,


மிஷ்கின் எதிர்பார்க்கிற எந்த மேல்தட்டு ஹீரோக்களும் அவர் சொல்லும் கதையை காது கொடுத்து கேட்ககூட தயாராகயில்லை.


அதனால்தான், ஹீரோக்களால் கைவிடப்பட்ட டைரக்டர்களுக்கு கைகொடுக்கும் நடிகராகி விட்ட சிம்புவை இப்போது தனது புதிய படத்தில் நடிக்குமாறு துரத்திக்கொண்டு வருகிறாராம் மிஷ்கின்.


தற்போது வாலு, வேட்டைமன்னன், சட்டென்று மாறுது வானிலை, இது நம்ம ஆளு என பல படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு, மிஷ்கினுக்கு இன்னமும் பிடி கொடுக்கவில்லையாம்.

ஸ்ருதிஹாசன் நடித்த தெலுங்குபட போஸ்டரை கிழித்தெறிந்த ஆந்திர போலீசார்!



தமிழில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு, இந்தி படங்கள் என்று வருகிறபோது வரிந்து கட்டி விடுகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரேஸ் குராம் என்ற படத்தில் இதுவரை எந்த தெலுங்கு படத்திலும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதி.


பப்ளிசிட்டிக்காக அப்படத்தின் போஸ்டர்களை ஆந்திராவிலுள்ள முக்கிய சாலைகளில் ஒட்டியபோது, சாலையில் சென்ற மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டு அந்த ஆபாச போஸ்டர்களைத்தான் ஜொள் விட்டார்களாம். இதனால் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்துக்களும் ஏற்பட்டதாம்.


இதனால் ஆத்திரம் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட முக்கிய ஏரியாக்களில் போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்களாம். இதனால், ஆந்திர போலீசாரே களமிறங்கி அப்பட போஸ்டர்களை கிழித்தெறிந்து விட்டார்களாம். அதோடு, இனிமேல் இந்த மாதிரி ஆபாச போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்று அந்த பட நிறுவனத்தையும் எச்சரித்துள்ளார்களாம்.


இப்படி ஆபாச போஸ்டர் விவகாரம் ஆந்திராவில் பத்தி எரிந்ததால், தனக்கு எதிர்ப்பாகவும் மகளிர் அமைப்புகள் கொடி பிடிக்க நேரும் என்பதால், தற்காலிகமாக ஐதராபாத் முகாமை மும்பைக்கு உடனடியாக மாறறியுள்ளாராம் ஸ்ருதிஹாசன்.

காணாமல் போன மலேஷியா ஏர்லைன்ஸ் ஜெட் தொடர்பாக உடைந்த இரண்டு பாகங்கள் ஆஸ்திரேலியா கண்டுபிடிப்பு



ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஒரு ராயல் ஆஸ்திரேலியன் விமானப்படை ஓரியன் பொருட்களை பார்த்து திருப்பி விடப்பட்டது என்று பாராளுமன்றத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஓரியன் தெற்கு இந்திய பெருங்கடல் பொருட்களை பார்க்க இன்று பிற்பகல் சென்றடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மூன்று கூடுதல் விமானம் காணாமல் போன ஜெட் பகுதிகளில் இருக்க வேண்டும் என்பது பற்றி அதை தேடி துணை ஓரியன் அமைக்கப்பட்டுள்ளது.


காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் பற்றி சமீபத்திய தகவல், இரண்டு பொருள்கள்,போயிங் 777 விமானம் தொடர்பாக இருக்கக் கூடும் என்று ஆஸ்திரேலிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் காணப்பட்டதாக, ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.


வியாழக்கிழமை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை (AMSA) சாத்தியமான தேடல் தொடர்பான பொருட்களை செயற்கைக்கோள் தகவல் அடிப்படையில் தகவல்களை பெற்றுள்ளது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


"இந்த செயற்கைக்கோள் படங்களை சிறப்பு பகுப்பாய்வு செய்த பின்னர், தேடல் தொடர்பான இரண்டு பொருட்களின் அடையாளம் காணப்பட்டுள்ளன."

ஹீரோவின் இமேஜை கெடுக்கும் ஸீரோக்கள்...!



தமிழர்களின் இசை ரசனையில் கானா பாடல்கள் பெரும் இடத்தைப் பெற்றுவந்திருக்கின்றன. அதேபோலவே கானா பாடகர்களுக்கும் தனி இடம் உண்டு. இசையமைப்பாளர் தேவாவின் அனேகப் படங்களில் கானா பாடல்களைக் கேட்கமுடியும்.


சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இடம்பெற்ற கானா பாடலான ”வாள மீனுக்கும் விளாங்கு மீனுக்கும்” கல்யாணம் பாடல் அப்படத்தின் வெற்றிக்குப் பேருதவி புரிந்தது நினைவிருக்கலாம். அந்தவகையில் இக்காலகட்டத்தின் மிகப் புகழ் பெற்ற கானா பாடகர்களான கானா பாலாவும், வேல்முருகனும் கலக்கிவருகின்றனர்.


கானா பாலா பாடிய “ ஆடி போனா ஆவணி” பாடலும், சூது கவ்வும் திரைப்படத்தில் பாடி, நடித்த “ காசு பணம் துட்டு” பாடலும் இன்றும் பலராலும்
முனுமுனுக்கப்படும் பாடலாக இருந்துவருகிறது. தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமடைந்துவரும் பாடகரான கானா பாலா விரைவில் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான கானா பாலா நடிக்கவுள்ள இத்திரைப்படமும், சென்னையைச் சார்ந்த கதையம்சம் கொண்ட கதையாக உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு பாடகராக கொடிகட்டிப் பறக்கும் கானா பாலா, ஹீரோவாகவும் கலக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சிவகார்த்திகேயனையும் விட்டுவைக்க வில்லை இந்த பார்ட் - 2 ...!



சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மாபெரும் மைல்கல்லாக உருவாகியிருக்கிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.

மக்கள்மத்தியிலும், வசூலிலும் கொடிகட்டிப் பறந்த இப்படத்தின் படக்குழு மீண்டும் புதிய படத்தில் இணையவுள்ளனர். சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இப்புதிய படம் வருகிற ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், மீண்டும் அதே படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக்
கலைஞர்கள் இணையவுள்ளனர்.


இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தினைத் தயாரிக்கவுள்ளது.


வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து இப்படத்திற்கான பாடல்கள் இசையமைக்கப்படலாம் என்றும், ஜூன் மாதத்தில் படப்பிடிப்புக்கள்
துவங்கப்பட்டு, செப்டம்பரில் படத்தினை வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இச்செய்தியால் மீண்டும் ஒரு நகைச்சுவைத் திருவிழாவாக இப்புதிய படமும் அமையுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

கலைஞர் குடும்பத்தில் இப்படி ஒரு ஆளா...!



சமீபகாலத் திரைப்படங்களில் மதுபான, டாஸ்மாக் காட்சிகள் இல்லாத திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெரும்பாலும் அனைத்துத்திரைப்படங்களிலுமே நகைச்சுவை என்கிற பெயரிலோ அல்லது சோகப்பாடல் என்கிற பெயரிலோ ஹீரோவே டாஸ்மாக்கில் சென்று தண்ணியடித்துவிட்டுப் புலம்புவது போன்ற காட்சிகள் ஏராளமாகக் காட்டப்படுகின்றன.


தமிழ் சினிமாவின் புதிய, தவிர்க்கவியலாத ட்ரெண்டாகவே இக்காட்சிகள் உருவாகிவருவது வருந்தத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இனிமேல் தான் நடிக்கவிருக்கும் எந்தப் படத்திலும் டாஸ்மாக், மதுபானம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளாராம்.


பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் அனைத்துப் படங்களிலும், டாஸ்மாக் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுவருவது நினைவுகூறத்தக்கது. உதயநிதி படங்களில் சந்தானம் தவிர்க்க இயலாத நடிகராகவும் மாறிவருகிறார்.


இச்சூழ்நிலையில் டாஸ்மாக் காட்சிகள் இடம்பெறாத ஒரு படத்தினை எப்படி உருவாக்கபோகிறார்கள் என்று ரசிகர்கள் பேசிவருகின்றனர். ஆனால் சமீபமாக சந்தானமும் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.


உதயநிதி, நயன்தாரா இணைந்து நடித்த இது கதிர்வேலன் காதல் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து, மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துவரும் நண்பேன்டா திரைப்படம் உருவாகிவருகிறது.


இயக்குனர் ராஜேஷின் உதவி இயக்குனரான ஜெகதீஷ் இயக்கிவரும் இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவருகிறார்.

பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி! நீண்ட நாள் ஆசை நிறைவேறியது...!



குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்னர் சில காலம் காணாமல் போன அவரை, தனது முதல் படமான 16 வயதினிலே படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார் பாரதிராஜா.


ஆக, அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ரீதேவி.


தென்னிந்திய சினிமாவில் புகழ் கொடி நாட்டியவர், பின்னர் பாலிவுட்டிற்கும் சென்று கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.


அதையடுத்து, தன்னை இந்திக்கு அழைத்து சென்ற தயாரிப்பாளர் போனி கபூரையே திருமணம் செய்து கொண்டு சிவகாசி ஸ்ரீதேவி மும்பைவாசியாகி விட்டார். இப்போது அவருக்கு அர்ஜூன், ஜானவி, குஷி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார் ஸ்ரீதேவி. அப்படத்தில் சவாலான வேடம் என்பதால் சிறப்பாக நடித்து மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தார்.


ஆனால் அடுத்து உடனடியாக படம் கிடைக்காதநிலையில், தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கயிருக்கும், த்ரிஷா இல்லேனா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார்.


இப்படத்தில் தன்னை கதாநாயகியாக்கிய இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார். கதைப்படி கதாநாயகனின் பெற்றோராக நடிக்கும் இவர்களுக்கும் கதையில் பெரும்பங்கு உள்ளதாம்.


ஆக,. பாண்டியநாடு படத்திற்கு பிறகு பாரதிராஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவியும் மீண்டும் இப்படத்தில் நடிக்கயிருக்கிறார்கள்.

இளையராஜாவின் 1000 வது படைப்பு இவருக்குத் தான்....!



இளையராஜா, இவரது  பெயரை நாம்  இசையின் ஓசை என்று கூட சொல்லலாம்.


தன் உலகமே இந்த இசை தான் என்று வாழ்ந்த ஒரு ஜீவன் , எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று உலகம் போற்றும் ஒரு இசை மகானாக வாழ்கிறார் ,



சமீபத்தில் ஒரு  உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் நம் இளையராஜாவை 9வது இடத்தில் வைத்து உலகம் போற்றும் கலைஞனாக கொண்டாடியது.


இது தமிழ்சினிமாவுக்கு ஒரு கௌவரமான நேரம், ஒரு தமிழனை மாபெரும் உலக கலைஞர்களோடு வரிசையில் சேர்த்து இருக்கிறர்கள் , இந்த நேரத்தில் இளையராஜா அவர்கள் கிட்டத் தட்ட சுமார் 999 படங்களை முடித்து விட்டார் , இப்பொழுதும் அவருக்கு தான் வயசு கூடுது தவிர அவரின் இசைக்கு அல்ல.


தற்போது இன்னும் உத்வேகத்தோடு 1000 வது படமாக பாலாவின் அடுத்து படமான " தாரை தப்பட்டை"யில்  இசை அமைக்கிறார். இப்படம் கரகாட்டத்தை மையமாக கொண்டு ஒரு படம் எடுத்து வருகிறார் இயக்குனர் பாலா.


இப்படத்திற்காக இசைஞானி இளையராஜா ஆறே நாட்களில் பன்னிரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம், இது ஒன்றும் இசைஞானி பற்றி தெரிந்துவருக்கு புதிது அல்ல.
பல மைல்கல்லை தண்டிய இசைஞானிக்கு அடுத்து வரும் காலம் பொன் போல் அமைய வாழ்த்துக்கள்.

காணாமல் போன மலேசியா விமானத்தை கண்டுபிடித்த சாமியார்; அனைத்து நாடுகளும் அதிர்ச்சி...!



உலக நாடுகள் அனைத்தும் ஒரு வார காலமாக தொலைந்து போன மலேசியா விமானம் எங்கு உள்ளது என சிறிய துப்பு கூட கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறது.


ஆனால் இங்கு ஒரு சாமியார் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அந்த மலேசிய விமானத்திற்கு என்ன ஆனது,


எங்கு உள்ளது என தெளிவாக கூறுகின்றார்.


இந்த விஷயத்தை கேள்வி பட்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


இருக்கும் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்தி தேடமுடியாத ஒரு விமானத்தை இவர் இருந்த இடத்தில் இருந்து சொல்லிவிட்டார் என அனைத்து நாடுகளும் வீடியோவை பார்த்த பிறகு தான் தெரியவந்துள்ளது


இந்த போலிச்சாமியாரின் பித்தலாட்டம்.


தலைமறைவான போலிச்சாமியாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி எதிர்ப்பு...!



அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு முருகதாஸ் ‘தல’ என்று பெயர் கூட வைத்துவிட்டாராம்.


அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய கால்ஷீட்டுக்காக கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், ஆகியோர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.


தீனா படத்தில்தான் முதன்முதலாக அஜீத்தை ‘தல’ என்று கூப்பிட வைத்தது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் கஜினி படத்தில் இணைந்தனர். ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தில் இருந்து அஜீத் திடீரென விலகினார். அதன்பின்னர் சூர்யா நடிப்பில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.


தற்போது ஒருஆக்ஷன் கதையின் திரைக்கதை முழுவதையும் முடித்து கையில் வைத்துள்ள முருகதாஸ் இந்த படத்தில் அஜீத் நடித்தால் மிகவ்ம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை நேரில் சந்தித்து கதையையும் கூறிவிட்டார். ஆனால் அஜீத்திடம் இருந்து இன்னும் முடிவு கிடைக்கவில்லை.


கவுதம் மேனனின் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்யவேண்டும் என ஷாலினி வற்புறுத்தி வருவதால், மனைவியின் பேச்சுக்குத்தான் அவர் முதலிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. மனைவி ஷாலினிகாக ஆபரேஷனுக்கு நேரம் ஒதுக்கிவிட்டு முருகதாஸ் படத்தை அஜீத் மறுத்துவிடுவார் என்றுதான் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்...!



கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் என்பது போல செய்திகள் தெரிவித்தன.


இந்நிலையில் கோச்சடையான் படம் வெளிவரும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் கோலிவுட்டின் மிகப்பிரபலமான ஒரு வி.ஐ.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


அவர் கூறியது என்னவென்றால் கோச்சடையான் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான்.

கோச்சடையான் படத்தை முதலில் தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் EROS என்ற நிறுவனம்தான். ஆனால் அதன்பின்னர் EROS நிறுவனத்துடன் ரஜினியின் சார்பில் மீடியா ஒன் என்ற நிறுவனம் கோச்சடையானின் உரிமையை வாங்கியது.


ரிலீஸுக்கு முன்பாக ரூ.50 கோடியை ரஜினியின் மீடியா ஒன் EROS நிறுவனத்திற்கு திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.


ஆனால் ரஜினி தற்போதைய நிலையில் ரூ.50 கோடியை திருப்பித்தரும் சூழ்நிலையில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அனிமேஷன் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால் தற்போது பணச்சிக்கலில் இருக்கின்றாராம் ரஜினிகாந்த்.

எனவே தியேட்டர் அதிபர்களிடம் இருந்து கோச்சடையான் படத்துக்காக அட்வான்ஸ் வாங்கி, அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பித்தந்துவிடலாம் என ரஜினி நினைத்தார்.


ஆனால் வழக்கமான ரஜினி படமாக கோச்சடையான் இல்லை என்றும், இது ஒரு பொம்மை படம் என்றும் பரவலாக செய்தி பரவி வருவதால் இந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க தியேட்டர் அதிபர்கள் தயங்கி வருகின்றனர்.


மேலும் இந்த படத்துக்கு பெரிய தொகை எதையும் அட்வான்ஸாக கொடுக்க முடியாது என்றும், படத்தின் வசூலை பொறுத்துதான் பணம் கொடுக்க முடியும் என்றும் தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதால் தற்போது EROS நிறுவனத்திற்கு எப்படி பணம் கொடுப்பது என தெரியாமல் ரஜினி பெருங்கவலையில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சர்ச்சையை கிளப்புவதில் இவரை மிஞ்ச ஆளில்லை...கேயார்...!




அடுத்த சூப்பர் ஸ்டார் – சிவகார்த்திகேயன், அடுத்த எம்.ஜி.ஆர் – விஜய் சேதுபதி. கேயாரின் சர்ச்சை பேச்சு..

கே.ஆர். சமீபகாலமாக அனைத்து பாடல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொண்டு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிவருவதால் பல நடிகர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.


சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கேயார், இந்த வருடம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் கோலி சோடா மற்றும் தெகிடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே.


மற்ற படங்கள் எல்லாம வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர உண்மையான வெற்றி பெறவில்லை என்று பேசினார்.



இந்த பேச்சு ஜில்லா மற்றும் வீரம் நடிகர்களை தாக்கித்தான் பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கேயாரின் மீது கோபத்தில் உள்ளனர்.


இந்நிலையில் மற்றொரு ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் விஜய் சேதுபதியை அடுத்த எம்.ஜி.ஆர் என்றும் பேசியுள்ளார்.


இரண்டு அல்லது மூன்று படங்கள் வெற்றி பெற்றது என்பதற்காக சூப்பர் ஸ்டார் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர்களை ஒப்பிட்டு பேசியதை கண்டு விழாவில் இருந்த பலர் முகம் சுளித்தனர்.


மேலும் பல தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கேயாரிடம் நேரடியாகவே இவ்வாறு நீங்கள் பேசியது கொஞ்சம் ஓவர்தான் என்று கடுப்பேற்றி வருகின்றனர்.


இதனால் கேயார் தற்போது மிகவும் டென்ஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.