இளையராஜா, இவரது பெயரை நாம் இசையின் ஓசை என்று கூட சொல்லலாம்.
தன் உலகமே இந்த இசை தான் என்று வாழ்ந்த ஒரு ஜீவன் , எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று உலகம் போற்றும் ஒரு இசை மகானாக வாழ்கிறார் ,
சமீபத்தில் ஒரு உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் நம் இளையராஜாவை 9வது இடத்தில் வைத்து உலகம் போற்றும் கலைஞனாக கொண்டாடியது.
இது தமிழ்சினிமாவுக்கு ஒரு கௌவரமான நேரம், ஒரு தமிழனை மாபெரும் உலக கலைஞர்களோடு வரிசையில் சேர்த்து இருக்கிறர்கள் , இந்த நேரத்தில் இளையராஜா அவர்கள் கிட்டத் தட்ட சுமார் 999 படங்களை முடித்து விட்டார் , இப்பொழுதும் அவருக்கு தான் வயசு கூடுது தவிர அவரின் இசைக்கு அல்ல.
தற்போது இன்னும் உத்வேகத்தோடு 1000 வது படமாக பாலாவின் அடுத்து படமான " தாரை தப்பட்டை"யில் இசை அமைக்கிறார். இப்படம் கரகாட்டத்தை மையமாக கொண்டு ஒரு படம் எடுத்து வருகிறார் இயக்குனர் பாலா.
இப்படத்திற்காக இசைஞானி இளையராஜா ஆறே நாட்களில் பன்னிரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளாராம், இது ஒன்றும் இசைஞானி பற்றி தெரிந்துவருக்கு புதிது அல்ல.
பல மைல்கல்லை தண்டிய இசைஞானிக்கு அடுத்து வரும் காலம் பொன் போல் அமைய வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment