அடுத்த சூப்பர் ஸ்டார் – சிவகார்த்திகேயன், அடுத்த எம்.ஜி.ஆர் – விஜய் சேதுபதி. கேயாரின் சர்ச்சை பேச்சு..
கே.ஆர். சமீபகாலமாக அனைத்து பாடல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொண்டு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிவருவதால் பல நடிகர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கேயார், இந்த வருடம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் கோலி சோடா மற்றும் தெகிடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே.
மற்ற படங்கள் எல்லாம வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர உண்மையான வெற்றி பெறவில்லை என்று பேசினார்.
இந்த பேச்சு ஜில்லா மற்றும் வீரம் நடிகர்களை தாக்கித்தான் பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கேயாரின் மீது கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் விஜய் சேதுபதியை அடுத்த எம்.ஜி.ஆர் என்றும் பேசியுள்ளார்.
இரண்டு அல்லது மூன்று படங்கள் வெற்றி பெற்றது என்பதற்காக சூப்பர் ஸ்டார் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர்களை ஒப்பிட்டு பேசியதை கண்டு விழாவில் இருந்த பலர் முகம் சுளித்தனர்.
மேலும் பல தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கேயாரிடம் நேரடியாகவே இவ்வாறு நீங்கள் பேசியது கொஞ்சம் ஓவர்தான் என்று கடுப்பேற்றி வருகின்றனர்.
இதனால் கேயார் தற்போது மிகவும் டென்ஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment