Tuesday 18 March 2014

விருவிருப்பைக் கூட்ட அஞ்சான் படகுழுவினர் செய்த விபரீத வேலை...!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சுமார் 30 கார்கள்
நொறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூ.டி.வி.மோசன்பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பைக்
கிளப்பிவருகிறது.


 ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, சுமார் 500 கார்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்சி
சமீபமாகப் படம்பிடிக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மாபெரும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் சுமார் 80 லட்சம் செலவில் ஒரு மாபெரும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


அஞ்சான் படம் குறித்து எழுந்துவரும் எதிர்பார்ப்புக்களை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் தகவல்கள் பரவிவருகின்றன. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம், சுதந்திரத் திருநாளன்று வெளியாகவுள்ளது.

0 comments:

Post a Comment