Tuesday 18 March 2014

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற புறப்பட்டார் சூப்பர் ஸ்டார்...!



கோச்சடையான் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்தமாதம் மைசூரில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து படம்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்து,


 அப்படம் தற்பொழுது ரிலீசிற்குத் தயாராகிவருகிறது. கோச்சடையான் திரைப்படத்தின் வேலைகள்


நிறைவடைந்திருப்பதால் ரஜினி தற்பொழுது ஓய்வில் இருந்துவருகிறார்.

கோச்சடையானிற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் எதுவென்று பெரும் பரபரப்புடன் பேசப்பட்டுவந்தது.


 ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் பார்ட் -2


வில் ரஜினி நடிப்பார் என்றும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா பார்ட்-2 வில் நடிப்பார் என்றும் வதந்திகள் பரவிவந்தன.



இந்நிலையில் சமீபமாக வெளியாகியிருக்கும் செய்திகளின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் - கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணியாற்றவுள்ள புதிய
திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஏப்ரல் மாதத்தில் மைசூரில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆனால் அப்படம் படையப்பா பார்ட்-2 வாக
இருக்குமா என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை.


படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment