Tuesday 18 March 2014

நெருங்கி வா..முத்தமிடாதே…லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய தாரக மந்திரம்...!



ஆரோகணம் என்ற படத்தை மிகக்குறுகிய பட்ஜெட்டில் எடுத்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படவேலையை விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டார்.


தனது அடுத்த படத்திற்கு “நெருங்கி வா.. முத்தமிடாதே” என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார்.


இம்மாதம் 27ஆம் தேதி முதல் படப்பிடிப்பு உறுதியாக ஆரம்பமாகும் என கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன்,


இம்முறை தான் இயக்குவது ஒரு கமர்ஷியல் திரைப்படம் என்றும்,


 அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.


படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்துவிட்டது என்று கூறிய அவர், இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை மாட்லீ புளூஸ் என்பவர் டியூன் அமைத்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்.


மாட்லீ புளூஸ் ஏற்கனவே சுட்டகதை என்ற படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பெயர்களை முறைப்படி வரும் 20ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும்,

அன்றே அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

0 comments:

Post a Comment