Tuesday 18 March 2014

ஆண்களே உங்கள் வலது கை மோதிர விரல் நீளமா இருக்கா..? ம்.ம். நீங்க அதுல கில்லாடியாம்..!



சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம்.


ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.


நோய்களை அறிந்து கொள்ளலாம்

ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.


விரலும் ஆய்வு முடிவும்


ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.

கவர்ச்சிகரமான ஆண்கள்


ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

ஹார்மோன் தூண்டப்படும்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும்


ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உறவில் உற்சாகம்


150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.


என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?

நெருங்கி வா..முத்தமிடாதே…லட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய தாரக மந்திரம்...!



ஆரோகணம் என்ற படத்தை மிகக்குறுகிய பட்ஜெட்டில் எடுத்த இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அடுத்த படவேலையை விறுவிறுப்பாக ஆரம்பித்துவிட்டார்.


தனது அடுத்த படத்திற்கு “நெருங்கி வா.. முத்தமிடாதே” என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார்.


இம்மாதம் 27ஆம் தேதி முதல் படப்பிடிப்பு உறுதியாக ஆரம்பமாகும் என கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன்,


இம்முறை தான் இயக்குவது ஒரு கமர்ஷியல் திரைப்படம் என்றும்,


 அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார்.


படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்துவிட்டது என்று கூறிய அவர், இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை மாட்லீ புளூஸ் என்பவர் டியூன் அமைத்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்.


மாட்லீ புளூஸ் ஏற்கனவே சுட்டகதை என்ற படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பெயர்களை முறைப்படி வரும் 20ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும்,

அன்றே அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

‘இது நம்ம ஆளு’வில் மொத்த குடும்பமே இணைகிறார்கள்!



பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார் அல்லவா?


 தான் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் என்பதால் படத்தின் பாடல்களை ஹிட் ஆக்குவதில் குறியாக இருந்து செயல்பட்டு வருகிறார் குறளரசன்!


ஏற்கெனவே பல படங்களுக்காக பாடியுள்ள குறளரசனின் தந்தை டி.ராஜேந்தரையும், அண்ணன் சிம்புவையும் இப்படத்தில் பாட வைக்க திட்டமிட்டுள்ள குறளரசன்,


அதற்காக பிரத்தியேக ட்யூன்களை உருவாக்கி வைத்திருக்கிறாராம்.


இந்த ட்யூன்கள் டி.ஆருக்கும், சிம்புவுக்கும் ரொம்பவும் பிடித்து விட்டுள்ளதாம்!


இதன் பாடல் பதிவு விரைவில் நடைபெறவிருப்பதாகச் சொல்லும் குறளரசனும் படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறாராம்!


ஆக, ‘இது நம்ம ஆளு’வில் மொத்த குடும்பமே இணைகிறார்கள்!

மாயமான மலேசிய விமானம் ராடார் பார்வையில் இருந்து மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்...!



கடத்தப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போவதற்கு சில நிமிடங்கள் முன்பு ராடாரின் பார்வையில் இருந்து தப்பியது எப்படி என்பதை தற்போது மலேசிய விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய விமானம் டேக் ஆப் செய்த சிறிது நேரத்தில் சுமார் 45,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும்,


 அந்த விமானம் திடீரென ராடாரின் பார்வையில் இருந்து மறைவதற்கு முக்கிய காரணம் திடீரென அந்த விமானம் மிகவும் தாழ்வாக அதாவது 5,000 அடி உயரத்தில் பறந்ததாகவும் கூறப்படுகிறது.


விமானம் மிகவும் தாழ்வாக, அதாவது lower altitude என்ற பகுதியில் பறந்தால், அந்த விமானம் ராடாரின் பார்வையில் இருந்து மறைந்துவிடும். Higher attitude பகுதியில் பறந்தால் மட்டுமே ராடாரின் தெரியும்.


இந்த விபரங்களை நன்கு தெரிந்த, அனுபவமுள்ள பைலட், வேண்டுமேன்ற விமானத்தை 5000 அடி உயரத்திற்கு பறக்க வைத்துள்ளார். 10000 அடிக்கு குறைவாக விமானம் மிகவேகமாக பறந்தால்,


விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகி, விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்தும் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து விமானத்தை தாழ்வாக பறக்க வைத்துள்ளார் விமானி.


ஒருசில இடங்களில் பறக்கும்போது, 5000 அடிக்கும் கீழே பறந்துள்ளதாகவும் தெரிகிறது. பெரிய மரங்கள், மலைகள் இவற்றின் மீது மோதுவதற்காஅ அபாயம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலும் மலேசியாவில் Kelantan என்ற பகுதியில்தான் இந்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததாகவும், சம்பவ தினத்தன்று மிக அதிகளவிலான ஏதோ ஒரு சத்தம் கேட்டதாக Kelantan பகுதிகளில் உள்ள கிராமத்தினர் கூறியதாகவும் தெரிகிறது.


அதுமட்டுமின்றி மிகப்பெரிய வெளிச்சம் ஒன்று வானில் தெரிந்ததாகவும், கூறுகின்றனர்.


இவர்கள் சொல்வதை வைத்தும், ராடாரின் பார்வையில் இருந்து மறைவதற்காக விமானி வேண்டுமென்ற மிகவும் தாழ்வாக விமானத்தை பறக்க வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

‘‘விஜய்யிடம் கதை சொன்னது உண்மை! சமுத்திரக்கனி அதிரடி பேச்சு...!



நிமிர்ந்து நில்' படத்தின் வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய சமுத்திரக்கனி,


 ''இப்படம் மூலம் எனக்கு பல முக்கிய பிரமுகர்கள் நண்பர்களாகி வருகின்றனர்.


மேலும் சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் தேவாரம் ஆகியோர் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டியதை மறக்கமுடியாது.


படத்தின் இரண்டாம் பாதியில் ஏன் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்தீர்கள் என சிலர் கேட்டனர்.


எனது எல்லா படங்களிலும் முதல் பாதியிலேயே கதையை அழுத்தம் கொடுத்து சொல்லி விடுவேன்.


அதற்கு பிறகு, காமெடி மற்ற அம்சங்கள் இருக்கும். ‘நிமிர்ந்து நில்’ படத்தை பொறுத்தவரையில் இரண்டாம் பகுதியை அதிகம் ரசித்துள்ளனர்.


நான் தேனி சென்றிருந்தபோது பலருக்கு படத்தின் இரண்டாம் பகுதி பிடித்ததாக கூறினர்’’ என்ற சமுத்திரக்கனியிடம்,


‘‘விஜய் படத்தை எப்போது இயக்குகிறீர்கள்?’’


 என கேட்டபோது, ‘‘விஜய்யிடம் கதை சொன்னது உண்மை!

நான் சொன்ன கதை அவருக்கும் பிடித்திருக்கிறது! கடைசிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

உறுதியான பின் அதுபற்றி அறிவிக்கிறேன்’’ என்றார்.

பாருக்குள் நடக்கும் மது மாது சூது...!!



இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் டாஸ்மாக் பார் காட்சிகள் இல்லாமல் இருக்காது. மதுபானக்கடை என்ற சினிமா,


ஒரு டாஸ்மாக் பாருக்குள்ளேயே எடுக்கப்பட்டது. இப்போது மது மாது சூது என்ற படத்தை ஒரு ஹைடெக் பாருக்குள்ளேயே எடுத்திருக்கிறார்கள்.


சிலந்தி என்ற படத்தில் வில்லனாக நடித்த சந்துரு தனது பெயரை ராஜஷந்ரு என்று மாற்றிக் கொண்டு அவரே தயாரித்து, இயக்கி நடிக்கும் படம்தான் மது மாது சூது.

இதில் அவருக்கு ஜோடியாக பெங்களூரைச் சேர்ந்த சந்தனா, சென்னையை சோந்த விக்னேஷா நடிக்கிறார்கள்.


"போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் கதை. 2014ம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாட ஒரு ஹைடெக் பாருக்குச் செல்கிறான்.


அந்த பாரில் அவன் சந்திக்கும் திகிலான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தக் கதை. மது மாது சூது இந்த மூன்றிலும் வாழ்க்கையை தொலைத்தவர்கள் நிறையபேர் அவர்களுக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும்.


திருப்பூரில் உள்ள ஒரு ஹைடெக் பாரை வாடகைக்கு எடுத்து அதனை 50 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைத்து ஒரே கட்டமாக 40 நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டோம்.

ஸ்ரீனி என்பவர் இசை அமைக்கிறார். லி மற்றும் எம்எம்எம் சங்கர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்" என்கிறார் ராஜஷந்ரு.

உலக தரத்தில் 9 வது இடத்தைப் பெற்றார் - இசைஞானி இளையராஜா ...!


 

சினிமா தொடர்பான இணையதளமான டேஸ்ட் ஆஃப் சினிமா, உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் (கம்போசர்) பட்டியலை வெளியிட்டுள்ளது.


அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார்.


இத்தாலியன் கம்போசர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை அமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் இரண்டாவது இடத்தையும்,


 அமெரிக்க கம்போசர் ஜான் வில்லியம்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.



சிறந்த இசை கோர்ப்பு, இசை கருவிகளை ஒருங்கிணைப்பது, பாடகர்,


பாடலாசிரியர் ஆகிய சிறப்பு தகுதிகளின் அடிப்படையில் இளையராஜா இந்த இடத்தை பிடித்திருப்பதாக அந்த இணையதளம் பாராட்டியுள்ளது.


இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் 4500 பாடல்களுக்கும், 950க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் இளையராஜா,

தன் மகனுக்காக அலையோ அலைன்னு அலையும் தங்கர் பச்சான் ....!



அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கிய தங்கர் பச்சான் வெகுகாலம் முன் களவாடிய பொழுது என்ற படத்தையும் முடித்தார்.


களவாடிய பொழுது திரைப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் அப்படத்தை வெளியிட பெரும் பாடுபட்டிருக்கிறார்.


இப்படத்தை வெளிகொண்டு வர பல முயற்சிகளை எடுத்துள்ளார் ஆனாலும் அப்படம் வெளியிட முடியவில்லை.


சலித்துப்போன தங்கர்பச்சான் இனி இப்படத்திற்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என அடுத்த படத்திற்கு தாவி விட்டார்.


அந்த படத்தில் தன் மகனையே ஹீரோவாக நடிக்க வைக்க அவருக்கு ஜோடியாக முன்னனி ஹீரோயின்களை தேடி வருகிறாராம் தங்கர்பச்சான்.

ஸ்ருதிஹாசன் எடுத்த ரிஸ்க்...!



தனது சிறு வயதிலிருந்தே பாடத்தொடங்கிய ஸ்ருதி தற்போது நடிப்பு மற்றும் பாடல் துறையில் சக்கைப்போடு போட்டு வருகிறார்.


முதன்முதலில் ஸ்ருதி, சிவாஜிகணேசன் - கமலஹாசன் அப்பா மகனாக நடித்த தேவர் மகன் படத்தில் “போற்றிபாடடி பெண்ணே” என்ற பாடலை இளையராஜா இசையில் பாடியிருந்தார்.


அதிலிருந்து பல இசையமைப்பாளர்களிடம் பாடி வந்த ஸ்ருதி பின் உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார்.


தன் அப்பாவை போலவே நடிப்பிலும் ஹிட் கொடுத்து வரும் ஸ்ருதி தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய்பவார் என்பவருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் உருவாக்கி வருகிறாராம்.


இப்பாடலுக்கு பாடல் வரிகள் கமல்ஹாசன் எழுதி கொடுத்துள்ளாராம், மேலும் விரைவில் ஸ்ருதி, கமல், ஜோய்பவார் கூட்டணியில் ஒரு ஹிட் ஆல்பத்தை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து வெள்ளி டாலரும் எனக்கே கெடைக்கனும் சொக்கா...!



தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆர்.வி குமாரசாமி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.


கூட்டத்திற்கு எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார், கவுரிகனகு, மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நடராஜ் வரவேற்று பேசினார்.


தெற்கு மாவட்ட தலைவர் செல்வம், செயலாளர் கார்த்தி, பொருளாளர் நாகேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் தென்றல் செயலாளர் சுதாகர், பொருளாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர்.


கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வர செய்து கோச்சடையான் திரைப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.


திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி டாலர்களை வழங்குவது.


கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. கலைமணி நன்றி கூறினார்.

“ திரிசா இலியானா நயன்தாரா” - இது நடிகை பேர் இல்லிங்க..இது ஒரு படத்தோட பேரு...!



இசையமைப்பாளராக ஜொலித்துவந்த ஜி.வி.பிரகாஷ்குமார் “ மதயானைக்கூட்டம்” திரைப்படத்தைத் தயாரித்து தயாரிப்பாளரானார்.


அத்துடன் நிற்காமல் தற்பொழுது “பென்சில்” படத்தில் நடித்துவருவதன் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார்.


பென்சில் திரைப்படத்தில் இவரின் நடிப்பினைப் பார்த்த அனைவரும் பாராட்டிவருவதோடு, பிரபல ஹீரோக்களும் இவரைப் பாராட்டிவருகின்றனர்.


இந்நிலையில் நடிப்பதா, இசையமைப்பதா என்ற குழப்பத்தில் இருந்துவந்த ஜி.வி.பிரகாஷ் தற்பொழுது பென்சில் திரைப்படத்திற்குப் பிறகு மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



பென்சில் படத்திற்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள இப்படத்திற்கு “ திரிசா இலியானா நயன்தாரா” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், ரிபெல்
ஸ்டுடியோஸ் இப்படத்தினைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


அறிமுக இயக்குனர் ஆதிக் இயக்கவுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.


 இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியால் மனிஷாவாக மாறிய நந்திதா...!



இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் ”இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் நாயகியான நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார்.


தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணையும் புதிய படம் இடம் பொருள் ஏவல். கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,


இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் நாயகியாக நடித்த மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.


ஆனால் முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்ற காரணம் காட்டி படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


இதனால் மனிஷாவிற்குப் பதிலாக விஜய் சேதுபதியின் ஜோடியாக நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது கொடைக்கானலில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதி - நந்திதா ஜோடி மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது நினைவுகூறத்தக்கது.


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற புறப்பட்டார் சூப்பர் ஸ்டார்...!



கோச்சடையான் திரைப்படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்தமாதம் மைசூரில் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து படம்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் கடந்த சில
வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்து,


 அப்படம் தற்பொழுது ரிலீசிற்குத் தயாராகிவருகிறது. கோச்சடையான் திரைப்படத்தின் வேலைகள்


நிறைவடைந்திருப்பதால் ரஜினி தற்பொழுது ஓய்வில் இருந்துவருகிறார்.

கோச்சடையானிற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் எதுவென்று பெரும் பரபரப்புடன் பேசப்பட்டுவந்தது.


 ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் பார்ட் -2


வில் ரஜினி நடிப்பார் என்றும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா பார்ட்-2 வில் நடிப்பார் என்றும் வதந்திகள் பரவிவந்தன.



இந்நிலையில் சமீபமாக வெளியாகியிருக்கும் செய்திகளின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் - கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணியாற்றவுள்ள புதிய
திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் வருகிற ஏப்ரல் மாதத்தில் மைசூரில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆனால் அப்படம் படையப்பா பார்ட்-2 வாக
இருக்குமா என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளியாகவில்லை.


படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருவிருப்பைக் கூட்ட அஞ்சான் படகுழுவினர் செய்த விபரீத வேலை...!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சுமார் 30 கார்கள்
நொறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூ.டி.வி.மோசன்பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பைக்
கிளப்பிவருகிறது.


 ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, சுமார் 500 கார்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்சி
சமீபமாகப் படம்பிடிக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மாபெரும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் சுமார் 80 லட்சம் செலவில் ஒரு மாபெரும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


அஞ்சான் படம் குறித்து எழுந்துவரும் எதிர்பார்ப்புக்களை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் தகவல்கள் பரவிவருகின்றன. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம், சுதந்திரத் திருநாளன்று வெளியாகவுள்ளது.

இளையராஜா ஃபேன்ஸ் கிளப்பில் இணைய உள்ள முன்னனி நடிகர்,நடிகைகள்...! மிக பிரம்மாண்டமாய்...



இசைஞானி இளையராஜாவிற்கு உலகமுழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம்விருபிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கினைக்கும் அமைப்பு தான் “ILAYARAJA FANS CLUB”


இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது புதல்வர் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் துவங்கப்படும் ஒரு அமைப்பு இது.


இந்த அமைப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமாக செயல்படும் உரிமை கொண்டது.


இசைஞானியின் ரசிகர்கள் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென சில கொள்கைப் பிடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் அவர்களை நல்வழிப் படுத்திய இசைஞானி அவர்களின் ரசிகர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக நற்பணிகள், சமூக முன்னேற்றத்திற்கென ஆக்கப் பூர்வமான செய்வதென முடிவெடுத்து அதனை இந்த ILAYARAJ FANS CLUB மூலம் செயலாக்க உள்ளனர்.


சாதி, மதம், இனம், அரசியல் போன்ற விசயங்களுக்கு அப்பாற்ப்பட்ட அமைப்பு இது. இதில் ஒருகோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேர உள்ளனர்.


இதற்கான அறிவிப்பை ஏப்ரல் ஐந்தாம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளனர்.கார்த்திக்ராஜா தலைமையில் “ராஜாவின் சங்கீதா திருநாள்” நிகழ்ச்சி நடைபெறும் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று “இசைஞானி” என்ற வார இதழும் துவங்கப்பட உள்ளது.


திரைப்படத்துறையில் உள்ள முன்னணி நடிகர், நடிகைகளும் இதில் இணைய உள்ளனர்.