Tuesday 11 March 2014

மார்ச் 28 - இருளில் மறைந்திருக்கும் இனம் வெளிச்சத்திற்கு வருகிறது...!




பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் எழுதி, ஒளிப்பதிவு செய்து, தயாரித்து, இயக்கியிருக்கும் இனம் திரைப்படம் வருகிற மார்ச் 28ல்
வெளியாகவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரினால் ஏற்பட்ட கொடூரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம், போரினால் அகதியாக வேறு நாட்டிற்குச் சென்று அங்கு வாழும் ஒரு பெண்ணின் கதையினை மையப்படுத்தி, உணர்வுப்பூர்வமாகத் தயாராகியிருக்கிறது இப்படம். கடந்த பிப்ரவரி 20ல் வெளியான இப்படத்தின் டீசர் ஏற்கெனவே பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றுவருகிறது.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். கடந்த 2013ல்
நடைபெற்ற பூசான் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டுப் பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

சந்தோஷ் சிவனுக்கு இவ்வாண்டிற்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

0 comments:

Post a Comment