சமீபகாலமாக நடிகைகளிடம் நரைமுடி அரசியல்வாதிகள் அத்துமீறி நடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது உ.பி மாநிலம் மீரட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நக்மாவிடமும் ஒரு நரைமுடி எம்.எல்.ஏ அத்து மீறி நடந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே மீரட் தொகுதியில் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நக்மா. அப்போது ஹாபூர் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார். அங்கு பெருந்திரளாக பொதுமக்கள் கூடியிருந்ததால் கூட்டத்தில் நீந்திச்சென்றிருக்கிறார் நக்மா. அப்போது அவரை மேடைக்கு அழைத்து செல்வது போன்று நக்மாவை, அரவணைத்தபடி வந்தாராம், ஹாபூர் எம்.எல்.ஏ., சர்மா என்பவர்.
முதலில் அரவணைத்தபடி வந்தவர் திடீரென்று நக்மாவின் கன்னத்தோடு தனது கன்னத்தை வைத்து ஒட்டி உரசியபடி வந்தாராம். முதலில் இதை கவனிக்காத நக்மா, பின்னர் அவரது பிடி இறுக்கமானதையடுத்து அவரது கைதட்டி விட்டு விட்டு விலகிச்சென்றிருக்கிறார். நக்மாவின் முகத்தில் கடும் கோபத்தைப்பார்த்த அந்த எம்.எல்.ஏ அதன்பிறகு அவர் இருக்கிற பக்கமே செல்லவில்லையாம்.
0 comments:
Post a Comment