Sunday 16 March 2014

மீடியாக்களின் டார்ச்சரால் கோபத்தில் உளறிய கமல்...!



ரஜினி, கமல் மாதிரியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலே ஊடகங்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸை சாப்பிட்ட திருப்தி தான். அந்தப்படத்தை ஆரம்பிக்கும் போதே ஆளாளுக்கு ஒரு கதையை எழுதி அதை படத்தின் கதையாக்கி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள்.

இந்த மாதிரியான மீடியாக்களின் சின்சியர் வேலைகள் பல நேரங்களில் சம்பந்தப்பட்ட படங்களுக்கு எதிர்வினையைத் தான் உண்டு பண்ணியிருக்கின்றன.

இதையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்த கமல் தனது ‘உத்தம வில்லன்’ படத்தின் கதையை வேண்டுமென்றே ‘லீக்’ செய்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒரு பிரெஞ்ச் புகைப்படக்காரர் எடுத்த போட்டோவின் காப்பி என்று நெகட்டீவ் செய்திகளை ஊடகங்கள் பரப்பியதில் அப்செட்டான கமல் படத்தின் கதை என்ற பெயரில் ஆளுக்கொரு கதையை எழுதி விடக்கூடாது என்று அவசரம் அவசரமாக உத்தம வில்லன் கதையை மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார்.

அதில் ‘உத்தமன்’ என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கேரக்டரிலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமாவின் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாகவும் மற்றொரு கேரக்டரில் நடிக்கிறார்.

மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.

8ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனில் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன் சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஆக 8- ஆம் நூற்றாண்டில் கூத்துக் கலைஞனாகவும், 21- ஆம் நூற்றாண்டில் உச்ச சினிமா நட்சத்திரமாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதால், இது கமலின் சொந்தக் கதையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தையும் கூடவே கிளப்பி விட்டிருக்கிறார் கமல்.

0 comments:

Post a Comment