Sunday 16 March 2014

மாயமான மலேசிய விமானத்தின் பைலெட் விமான ஓட்டிகள் அறையில் புகைபிடித்தார், ஜாலியாக பேசினார் இளம் பெண்..!



ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண் மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி அப்துல் ஹமீது கடந்த 2011ம் ஆண்டு என்னை விமானத்தில் பைலெட்கள் அறைக்கு அழைத்து சென்றார் என்று கூறியுள்ளார்.


மேலும் மிகவும் ஜாலியாக பைலட்கள் பேசினார்கள் என்றும் முழு விமானம் முழுவதும் சுற்றினோம் என்றும் கூறியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் நானும் எனது தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்தோம்.


அப்போது விமானி அப்துல் ஹமீது எங்களை விமான ஓட்டிகள் அறையில் இருந்து பயணிக்க விருப்பமா என்று கேட்டனர். நாங்களும் சென்றோம். அவர்கள் எங்களுடன் மிகவும் ஜாலியாக பேசினர். புகைப்படம் எடுத்தனர்.


புகைப்பிடித்தனர். அவர்கள் மிகவும் நண்பர்களாக பேசினர். நாங்கள் எங்களது தாய்லாந்து பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.


தற்போது மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி ‘கொஞ்சம் ஒழுக்கம் கெட்ட’ செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஆனால் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஜோந்தி ரோஸ் கூறியுள்ளார். ஹமீத் குடும்பத்திற்கு மற்றும் நண்பர்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.


நண்பர் ஹமீது ஓட்டி சென்ற விமானம் மாயமாகியது குறித்து கேள்விபட்டதும் எனது இதயம் வெடித்துவிட்டது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
இளம்பெண்ணின் இந்த தகவல் மாயமான விமானம் விவகாரத்தில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment