வைரமுத்துவுடன் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்திருக்கும் யுவனை அவரது அண்ணனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா கடும் எதிப்பு தெரிவித்திருக்கிறார்.
ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கூட்டணி இப்போது இணைவதில்லை. இனி இணையப்போவதும் இல்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இளையராஜாவின் வாரிசான யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் பாட்டெழுதுகிறார் வைரமுத்து.
ஆனால் இந்த இணைப்பு அவரது அண்ணன் கார்த்திக்ராஜாவுக்கு கடுப்பை கிளப்பியிருக்கிறது. இதுபற்றி அவர் கூறும்போது,
எனக்கு வெவரம் தெரிஞ்சப்ப அப்பாக்கூட இருந்த நண்பர்கள் யாருமே இப்போ அவர்கிட இல்லை. எல்லாருமே போட்டி பொறாமையால விலகிட்டாங்க. அப்பா கூட வேலை செய்றது இப்ப நான் மட்டும் தான். என்னோட ரெண்டு பசங்க யத்தீஸ்வரும், ஜெயேஸ்வரும் தான் அவருக்கு பிரெண்ட்ஸ்.
யுவன் ஷங்கர் ராஜா வைரமுத்துவோட ஒரு படத்துல இணைஞ்சிருக்காரு, அவர் வைரமுத்துவோட இணையுறதுல எனக்கு உடன்பாடே இல்லை. என்றவரிடம் அவர் வைரமுத்துவோட இணைந்தது மாதிரி, நீங்கள் பாரதிராஜா படத்திற்கு இசையமைப்பீர்களா? என்று கேட்டபோது
அப்பா ஓ.கே சொன்னால் பண்ணுவேன். ஆனால் பாரதிராஜா எந்த காலத்திலேயும் என்கிட்ட வரப் போறதில்லை. நானும் அவர்கிட்ட சான்ஸ் கேட்கப் போறதில்லை. பிறகெதுக்கு இந்தக் கேள்வி? என்று கடுப்பாகியிருக்கிறார்.
பிரபலங்கள் என்றாலே பிரச்சனை தான் போலிருக்கிறது?
0 comments:
Post a Comment