Friday 21 March 2014

நல்ல படம் பார்க்க விரும்புவோர்க்கு ஒரு நற்செய்தி...!



அறிமுகப் படத்திலேயே தேசிய விருதுகளை வெல்வது அவ்வளவு ஒன்றும் எளிய விசயமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதனை எளியதாக்கி, இரண்டு தேசிய விருதுகளைத் தனது அறிமுகப்படத்திலேயே வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.


கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆரண்ய காண்டம். இப்படத்தின் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜாவிற்கு இது அறிமுகப்படம். ஆனால் படம் பார்த்தவர்கள் இவர் அறிமுக இயக்குனர்தானா என்று வியக்குமளவிற்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக வியந்தனர்.


 விமர்சகர்களும் இப்படத்தினைப் பற்றிப் பாராட்டவே செய்தனர்.ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை அடுத்து தேசியவிருதும் இப்படத்திற்குப் பெருமை சேர்த்தது. இப்படத்தில் ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, சம்பத் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.


முதல் படம் இயக்கி மூன்றாண்டுகளைக் கடந்துவிட்ட பின்பு, தனது இரண்டாவது படத்தினைப் பற்றி தியாகராஜன் அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்கவுள்ளதாகவும், இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.


இம்முறையும் தேசியவிருதுகளை இப்படம் குவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

0 comments:

Post a Comment