Sunday 23 March 2014

விக்ரமின் அடுத்த படம்: விஜய் மில்டன் இயக்குகிறார்..!



 விக்ரம் நடிக்கும் புதிய படத்தை ‘கோலிசோடா’ இயக்குநர் விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார். இந்தப்படத்திற்கு ‘இடம் மாறி இறங்கியவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.


விக்ரம் மாறுபட்ட கதாபாத் திரங்களில் நடித்து வரும் ‘ஐ’ படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.


வரும் கோடை விடுமுறை யில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலை யில் இப்படத்தை அடுத்து ஒளிப்பதிவாளரும்,


இயக்கு நருமான விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ‘இடம் மாறி இறங்கி யவன்’ என்று பெயரிடப் பட்டுள்ளது.


இந்தப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பு நிறுவனமும், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.


விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ படத்தை இந்த ஆண்டின் வசூல் சாதனை படமாக தயாரிப்பாளர் சங்கம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment