Monday 17 March 2014

மாதங்களின் பெயர்கள் வந்தது எப்படி?



தமிழன் தந்த நாட்காட்டி தடுமாறியது ஏன்?

பழைய ரோமர்கள் மார்ச் மாதத்தை தொடக்க மாதமாகவும்,பெப்ரவரியை இறுதி மாதமாகவும் கொண்டிருந்தார்கள். அப்போதய பெயர்களின் சரித்திரத்தைப் பார்க்கலாம்.

ஜனவரி-January-என்பது பின்னர் Pompilius என்பவரால், தொடக்கத்திற்கும் முடிவிற்குமான கடவுளின் பெயரான Janus இல் இருந்து உருவானது.

பெப்ரவரி-February-கி.மு.690 அளவில்  Numa Pompilius வினால் வருட முடிவில் கொண்டாப்பட்ட Februa பண்டிகையின் பெயராகும்.

மார்ச் -March- Mars இல் இருந்து வந்ததாம்.அது ரோமானியர்களின் போருக்கான கடவுளாவர்.

ஏப்ரல்-April-மூன்று விளக்கங்கள் உண்டு. April என்பது லத்தின் மொழியில் இரண்டாவது என்பதைக் குறிக்கும்.aperire என்ற லத்தின் மொழிச் சொல்,பூக்கள் உருவாகும் வசந்த காலத்தைக் குறிக்கிறது. மூன்றாவது Aphrodite என்ற பெண் தெய்வத்தைக் குறித்த சொல்லில் இருந்து வந்தது.

மே-May-பூமியில் மரங்களை வளர்க்கும் பென் தெய்வத்தின் பெயரான,Maia என்பதைக் குறிக்கும்.

ஜூன்-June-Juno என்ற திருமணங்களுக்கான பெண் தெய்வத்தின் பெயர்.

ஜூலை-July-ஐந்தாவது என்ற லத்தின் மொழி- Quintilis-என்ற பெயரில் முதலில் அழைக்கப்பட்டு,பின்னர் கி.மு.44 இல் Julius Caesar பெயரில் அழைக்கப்பட்டது.

ஆகஸ்ட்-August-முதலில் லத்தின் மொழியில் ஆறாவது -Sextillia-பின்னர் கி.மு.8 இல் இருந்து
Augustus Caesar பெயரில் இருந்து மாற்றப்பட்டது.

அடுத்து வந்த செப்டெம்பர்-Sebtember-லத்தின் மொழி ஏழு-septem

அக்டோபர்-October- லத்தின் மொழி எட்டு -Octo.

நொவெம்பர்-Novembar-லத்தின் மொழி ஒன்பது -novem

டிசெம்பர்-December-லத்தின் மொழி பத்து-decem


Gregorian calendar என அழைக்கப்படும் தற்போதய முறையான Jan-Dec. 1582 ல் Pope Gregory இனால் கொண்டு வரப்பட்டது.இருப்பினும் 1752 வரை பிரிட்டனும் அதன் காலணியாக இருந்த அமெரிக்காவும் மார்ச் மாதத்தையே தொடக்க மாதமாக கொண்டாடி வந்தது.

முதலில் 304 நாட்களாக இருந்த வருடம் கால மாற்றங்களை சரியாகக் காட்டாததால்,Numa Pompilius மன்னன் ஜனவரி,பெப்ரவரி ஐ சேர்த்து 355 நாட்களாக மாற்றியும் சரிவராததால்,10 நாட்களைக்கொண்ட Mercedinus மாதத்தை உருவாக்கினான்.ஜூலியஸ் சீசர் அதை நீக்கி,12 மாதங்களைக் கொண்ட, 365 நாட்கள் உடைய வருடத்தை உருவாக்கி,பெரவரிக்கு 29 நாட்களைக் கொடுத்தார். பின்னர் Augustus என்பவர் ஆகஸ்ட்டில் 31 நாட்களைப் போட்டு,பெப்ரவரிக்கு 28 நாட்களைக் கொடுத்தார்.

எகிப்தியரின் யூலியன் கலண்டர்(Julian calendar) ஐப் பின்பற்றி வந்த காலத்தில்,16 ம் நூற்றாண்டு வரை,தை 1 - ஜனவரி 14 தான் வருடத்தின் தொடக்கமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.இலங்கையின் ஒரு புள்ளிக் கோட்டை (கடற்கோளுக்கு முன்னரான பழைய இலங்கை) நேரக் கோடாக (கிரீன்விச் போல்) பாவித்து தமிழர்கள் நாட்காட்டியை, அன்று உருவாக்கினார்கள்.ஆனால் தமிழர்களின் மதச் சார்பற்ற இந்த முறையை, அன்றைய 16 ஆம் நூற்றாண்டின் கிறிஸ்தவ சபை (13 ஆம் Pope Gregory XIII ) விரும்பாது, ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்கமாக அறிவித்தது.

ஆரிய அரசன் சாலிவாகனன் தான் முதலில் சந்திர நாட்காட்டியை அடிப்படையாக வைத்து சித்திரை ஒன்றை வருடத் தொடக்கமாக அறிவித்து ஆணை பிறப்பித்தான். அடிமைகளாகி விட்ட தமிழர்களும்,அதைத் தொடர்ந்தனர்.இது வரலாறு.

நான் சொன்னால் யார் தான் நம்பப் போகிறீர்கள்.ஆனாலும் அதுதான் உண்மை. எங்கோ இருந்து கொண்டுவரப்பட்ட, ஆரிய இந்துமததை நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடினாலும்,உண்மை ஒன்று இருக்கிறதே,அதுதான் தமிழர்களின், ஒன்றெ குலம் ஒருவனே தேவன், என்ற மதமற்ற வள்ளுவனின் இறைக்கொள்கை.
ஜப்பானியர்கள் நமது பொங்கலைப் போல், பொங்கலோ பொங்கல் (FONKARA -FONKARA)  என்று நம்மைப் போல் மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
எல்லாம் அழிக்கப்பட்டு நாம் நிர்க்கதியாய்,ஆரிய அடிமைகளாய் நிற்கிறோம்.

ஏப்ரல் போல்(April fool) ஏன் வந்தது தெரியுமா? முன்னர் ஐரோப்பியர்கள் ஏப்ரல் 1 இல் தான்
புத்தாண்டைக் கொண்டாடினார்கள். 13 ஆம் Pope Gregory ஜனவரி 1 ஐ புத்தாண்டாக அறிவித்த போதும்,ஐரோப்பியர்கள் அதை ஏற்றுக் கொள்ளாது,தொடர்ந்து ஏப்ரல் 1 ஐ கொண்டாடி வந்தனர். பின் அது மாறிய போதும்,ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என அழைத்தார்கள். இருந்தாலும்,அதற்கு முன்னரே பிரான்ஸ் நாட்டில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதாம்.

1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள், ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

1 comments:

  1. இன்றையGregorian முறை காலண்டருக்கும் மாயாக்களின் காலண்டர் முறைக்கும் தொடர்பு ஏதும் இல்லையா? ஸ்பேனிய காலனி ஆதிக்க நாசக்கார்ர்கள் எரித்து போக மிஞ்சிய மாயாக்களின் ஆண்டு கணிப்பு முறைகளை காப்பி அடித்து ஐரோப்பிய ஆண்டு முறை உருவாக்கப் பட்டதாக கேள்வி. விளக்கவும்.

    ReplyDelete