Monday 17 March 2014

தனுஷை விட்டு ஷங்கருடன் இணையும் அனிருத்...!



தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய “3” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.


அறிமுகப்படத்தில் இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகப்புகழும் பெற்றார்.


 எல்லோராலும் பாராட்டப்படும் இசையைக்
கொடுத்துவரும் அனிருத் மளமளவென முன்னணி இசையமைப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.


இக்காலகட்டத்தின் இளைஞர்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களைத் தருவதில் அனிருத் முதலிடத்தில் இருப்பதாகப் பாராட்டப்படுகிறார்.


இவர் இசையமைத்த அனைத்துப் படங்களுமே ஹிட்டாகியிருப்பதுடன், பாடல்களும் மெஹா ஹிட்டாக அமைந்துவருகின்றன.


 இதனால் முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றுவருகிறார் அனிருத்.

கடந்த 2012 ஆம் ஆண்டுதான் திரைத்துறைக்குள் காலடி பதித்தார். இரண்டே ஆண்டுகளில் முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் ஆகியோரது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினைப் பெற்றிருப்பதோடு, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.


விரைவில் ஷங்கர் இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

0 comments:

Post a Comment