Monday 17 March 2014

பழம் நழுவி வாயில் விழும்போது விடுவேனா...!



திரு திரு துறு துறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. தற்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார்.


யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கிறார். இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே.


நைனிடாவில் படப்பிடிப்பு நடந்தபோது கிருஷ்ணாவுக்கும், ரூபாவுக்கும் டூயட் பாடலை அங்கு படமாக்கினார்கள். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்குமாறு இயக்குனர் கேட்டுக் கொண்டபோதும் அப்படி நடிக்க முடியாது என்று ரூபா மஞ்சரி மறுத்துவிட்டாராம்.


கதைக்கு தேவையென்றால் நடிக்கலாம். திடீரென்னு திணித்தால் நடிக்க முடியாது. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தின் இன்னொரு நாயகியான ஓவியாவிடம் இயக்குனர் டீகே கேட்க, உடனே ஓகே சொன்னாராம் ஓவியா.


 மலைகிராமம் ஒன்றில் வாழும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் ஓவியா கிளாமராக நடித்திருக்கிறார்.


ஹீரோ கிருஷ்ணாவுக்கு அவரது பூர்வீக சொத்தான ஒரு பெரிய பங்களா கிடைக்கிறது. அதை ரிசார்ட்சாக மாற்றுகிறார்.


அங்கு வந்து தங்குபவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது. சிங்கிள் ரூம் எடுத்து தங்கினால் கூடவே இன்னொருவர் உடன் தங்குகிறார்.


டபுள் ரூம் எடுத்து தங்கினால் மூன்றாவதாக ஒருவர் வந்து தங்குகிறார். அந்த புதிய நபர் யார் என்பதை பயங்காட்டி சொல்லும் படமாம். படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து விட்டது. மே மாதம் ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment