Wednesday 12 March 2014

இது சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றி...!!!



ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.

இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.


இதனை அவர் மறுத்தார். படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் பலன் ஏற்பட்டது.

சர்ச்சைகள் தீர்ந்து ‘நிமிர்ந்து நில்’ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அரசும் வரிவிலக்கு அளித்துள்ளது.

0 comments:

Post a Comment