Wednesday 12 March 2014

நியு சினிமா கார்னர்...!



வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா போன்ற படங்களை இயக்கியவர் மதுமிதா. தற்போது, எஸ்.பி.பி.சரண் கேபிடல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் 'மூணே மூணு வார்த்தை' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.


ரொமாண்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் அர்ஜுன் சிதம்பரம் மற்றும் அதிதி செங்கப்பா நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் 'சுட்டகதை', 'இரண்டாம் உலகம்' படங்களில் நடித்த வெங்கடேஷ் ஹரிநாதன் நடிக்கிறார்.


மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீனிவாசன் வெங்கடேசன், இசை கார்த்திகேய மூர்த்தி,



படத்தொகுப்பு கிரண் காந்தி, கலை மணி கார்த்திக் என அனைவரும் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஆஹா கல்யாணம்' திரைப்படத்திற்கு வசனம் எழுதிய ராஜீவ் ராஜாராம் இந்தப் படத்திற்கும் வசனம் எழுதுகிறார்.


இதற்கு முன்பு கேபிடல் பிலிம்ஸ், 'உன்னைச் சரணடைந்தேன்', 'சென்னை 28', 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்', 'நாணயம்' போன்ற படங்களை தயாரித்திருக்கிறது.

0 comments:

Post a Comment