Saturday 15 March 2014

இயக்குனர் அமீருக்கு வந்த விபரீத ஆசை...!



இயக்குனரும், நடிகருமான அமீர் ஹீரோவா நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு நடிகை ஷ்ரேயா கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன்
திரைப்படத்தின் மூலமாக மாபெரும் அறிமுகத்தைப் பெற்றவர் இயக்குனர் அமீர்.


பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பிறகு, “யோகி” படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம்இயக்குனரிலிருந்து நடிகராக உருமாறினார். யோகி படம் பெரிய அளவில் ஹிட்டடிக்காததால் மீண்டும் இயக்கத்திற்கே திரும்பினார்.


இவர் இயக்கத்தில் சமீபமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதி பகவன் வெளியானது. இப்படத்தினைத் தொடர்ந்து அவர் மீண்டும் நடிப்பிற்குத்
திரும்பியிருப்பதாகவும், இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ள இப்படத்தில் தமிழில் மட்டும் அமீர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும், ஷ்ரேயா அவருக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும்.

0 comments:

Post a Comment