Saturday 15 March 2014

புகழ்ச்சி போதை தலைக்கு ஏறியதால் குழம்பிய ஏ.ஆர்.முருகதாஸ்..!



இளையதளபதி நடிப்பில் உருவாகிவரும் படத்தினை இயக்கிவரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்படத்திற்குப் பிறகு இயக்கும் படம் குறித்து பல்வேறு வதந்திகள் உலவிவருகின்றன.


விஜய் படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்குப் படத்தினை முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும்,


 இப்படம் மெஹா பட்ஜெட் படமாக இருக்குமென்றும், இதற்காக அவருக்கு சுமார் 20 கோடிகள் சம்பளம் தரப்படவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் அடிபடுகின்றன.


அதே சமயம் சமீபத்தில் தல அஜித்தைச் சந்தித்த முருகதாஸ், மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியதாகவும், அதற்கு
அஜித்தும் உடனே கதையினை ரெடி செய்யச் சொன்னதாகவும் வதந்திகள் பரவிவருகின்றன.


 விஜய் படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கவுள்ள படம் எது என்பது குறித்து தற்பொழுது ரசிகர்கள் குழம்பிவருகின்றனர்.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படத்தின் நாயகன் தல அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதனால் ஒருவேளை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள
திரைப்படம் அஜித் படமாகவும் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.


இதுகுறித்து அவரே விளக்கமளிக்கும் வரையிலும் வதந்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கும்.

0 comments:

Post a Comment