Wednesday 19 March 2014

அடம்பிடித்த சசிகுமாரை அடக்கிய பாலா...!



இயக்குனரும் நடிகருமான சசிக்குமாரை தாடியில்லாமல் காண்பது என்பது அரிதிலும் அரிது என்பதை விட, தாடியில்லாமல் சசிக்குமார் இல்லை என்றே கூறலாம்.


அப்படிப்பட்ட டிரிம் செய்யப்பட்ட அழகான தாடியுடன் இதுவரை தோன்றிவந்த சசிக்குமார், விரைவில் துவங்கவுள்ள பாலா படத்திற்காக தாடியை எடுக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


பெரும்பாலும் கிராமத்து மற்றும் முரட்டுக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சசிக்குமாருக்கு அவரது தாடி ஒருவகையில் அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.


அதே சமயம் கொஞ்சம் மாடர்ன் ஹீரோவாக இவர் நடித்த பிரம்மன் படத்திலும் கூட இவர் தாடியுடனேயேதான் நடித்திருந்தார். இப்படியாக இவர் இதுவரை கட்டிக்காத்துவந்த தாடியினை பாலாவின் படத்தில் நடிப்பதற்காகத் தியாகம் செய்யவேண்டிவந்துள்ளது.


பெரும்பாலும் பாலாவின் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் எதேனும் ஒருவகையில் தங்களை வருத்திக் கொண்டே நடித்தாகவேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலும் சோகமான அல்லது ஏழ்மையான கதாபாத்திரங்களே பாலாவின் ஹீரோக்களாக இன்றுவரையிலும் இருந்துவந்துள்ளனர்.


பரதேசி படத்திற்குப் பிறகு பாலா இயக்கவுள்ள திரைப்படம் கரகாட்டக் கலையினை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.


இப்படத்திற்காகத்தான் சசிக்குமார் தாடியை எடுக்கவுள்ளார். இப்படத்தில் வரலட்சுமி சசிக்குமாரின் ஜோடியாக நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் துவங்கவுள்ளன.

0 comments:

Post a Comment