இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று
அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யூ.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவரும் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா
நடித்துவருகிறார்.
இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துவருவதாக ஏற்கெனவே கிசுகிசுக்கள் பரவியிருந்தன. ஆனாலும் கொஞ்சம் குழப்பத்துடனேயே இருந்துவந்தனர் ரசிகர்கள்.
சமீபமாக பேட்டியளித்துள்ள இயக்குனர் லிங்குசாமி, அஞ்சான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு வேடத்தில் மும்பையைச் சேர்ந்த தாதாவாகவும், மற்றொரு வேடத்தில் சென்னையைச் சேர்ந்த ஐ.டி.இளைஞனாகவும் இவர் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுவரும் இப்படம் தற்பொழுதிருந்தே மாபெரும் எதிர்பார்ப்புக்களைக் கிளப்பிவருகிறது.
இப்படத்தில் சூர்யாவின் வேடங்கள் மிகவும் ஸ்டைலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு வேடங்களுமே வெகுவாகப் பேசப்படும்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment