Monday, 17 March 2014

நீயா,நானா போட்டியில் 40....!




திரைப்படத்துறைக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய கலைஞர்களுக்கு மதிப்பு மிக்க விருதுகள்.


61வது தேசிய விருதுக்கான பரிசீலனையில் நடுவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் 30 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.


இந்த விருதினை பெற இந்த ஆண்டு 40 தமிழ் படங்கள் மோதுகிறது.


அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் தேசிய விருதுக்கு மோதுவது இதுவே முதல் முறை.


6 மெழுகுவர்த்திகள்,

ஆதலால் காதல் செய்வீர்,

ஹரிதாஸ்,

விடியும் முன்,

மரியான்,

மூடர்கூடம்,

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,

 பண்ணையாரும் பத்மினியும்,

தங்க மீன்கள்,

தலைமுறைகள்

ஆகியவை போட்டியில் இருக்கும் முக்கிய படங்கள்.

பொழுதுபோக்கு படத்துக்கான பிரிவில்

 கோலிசோடா,

எதிர் நீச்சல்,

குட்டிப்புலி,

பாண்டியநாடு,

ராஜா ராணி,

சூதுகவ்வும்

படங்கள் போட்டியிடுகிறது.

இதில் இன்னும் வெளிவராத இனம், நெடுஞ்சாலை, ராமானுஜன் ஆகிய படங்களும் கலந்து கொள்கின்றன. தங்க மீன்கள், தலைமுறைகள், ஹரிதாஸ், விடியும் முன் படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என்ற கருத்து பரவலாக உள்ளது.

பழம் நழுவி வாயில் விழும்போது விடுவேனா...!



திரு திரு துறு துறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. தற்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார்.


யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கிறார். இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே.


நைனிடாவில் படப்பிடிப்பு நடந்தபோது கிருஷ்ணாவுக்கும், ரூபாவுக்கும் டூயட் பாடலை அங்கு படமாக்கினார்கள். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்குமாறு இயக்குனர் கேட்டுக் கொண்டபோதும் அப்படி நடிக்க முடியாது என்று ரூபா மஞ்சரி மறுத்துவிட்டாராம்.


கதைக்கு தேவையென்றால் நடிக்கலாம். திடீரென்னு திணித்தால் நடிக்க முடியாது. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தின் இன்னொரு நாயகியான ஓவியாவிடம் இயக்குனர் டீகே கேட்க, உடனே ஓகே சொன்னாராம் ஓவியா.


 மலைகிராமம் ஒன்றில் வாழும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் ஓவியா கிளாமராக நடித்திருக்கிறார்.


ஹீரோ கிருஷ்ணாவுக்கு அவரது பூர்வீக சொத்தான ஒரு பெரிய பங்களா கிடைக்கிறது. அதை ரிசார்ட்சாக மாற்றுகிறார்.


அங்கு வந்து தங்குபவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது. சிங்கிள் ரூம் எடுத்து தங்கினால் கூடவே இன்னொருவர் உடன் தங்குகிறார்.


டபுள் ரூம் எடுத்து தங்கினால் மூன்றாவதாக ஒருவர் வந்து தங்குகிறார். அந்த புதிய நபர் யார் என்பதை பயங்காட்டி சொல்லும் படமாம். படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து விட்டது. மே மாதம் ரிலீசாகிறது.

‘அனைத்து தவறும் என் மீது தான் ' - தவறை உணர்ந்த கௌதம்...!



அஜித் - கௌதம் - ஹாரிஸ்! பவர்-ஃபுல் கூட்டணி?

கௌதம் மேனனால் ஹாரிஸ் ஜெயராஜ் வளர்ந்தாரா? ஹாரிஸ் ஜெயராஜால் கௌதம் மேனனால் வளர்ந்தாரா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தாலே போதும் என்று ரசிகர்கள் எண்ணத்தக்க வகையில் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் ஹாரிஸும் கௌதமும்.


 ’மின்னலே’ திரைப்படத்தில் துவங்கிய இவர்கள் நட்பு வாரணம் ஆயிரம் திரைப்படம் வரை, கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நல்லவிதத்தில் இருந்தது.


 விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஹாரிஸிடம் சொல்லமலே கௌதம் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தபிறகு அந்த நட்பு தொடரவில்லை. ‘என் மீது தான் தவறு என்று கௌதம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாலும் ஹாரிஸ்-கௌதம் கூட்டணி மீண்டும் இணையாமல் போனது.


ஹாரிஸ் இல்லாமல் கௌதம் படங்களின் பாடல்கள் தோல்வியடைந்தன என்று சொல்லமுடியாத விதத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா என்று தான் கௌதமின் கூட்டணி இருந்தது என்றாலும் ஹாரிஸ்-கௌதம் கூட்டணியில் உருவான பாடல்களின் தாக்கம் மற்றவர்களின் பாடல்களில் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்து.


 தற்போது அஜித்-கௌதம் இணைந்திருக்கும் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. முன்பு ஒருமுறை அளித்த பேட்டியில் ‘அனைத்து தவறும் என் மீது தான். ஹாரிஸ் என்னுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்தால் எனக்கும் சம்மதம் தான். ஹாரிஸுடன் மீண்டும் இணைவதில் நான் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறியிருந்தார்.


அதுமட்டுமில்லாமல் அஜித்-கௌதம்-ஹாரிஸ் ஆகியோரின் கூட்டணி புதிதாக திட்டமிடப்பட்ட கூட்டணியல்ல. கௌதம்மிடம் இதற்கான திட்டம் எப்போதோ இருந்தது. ஆனால் சில காரணங்களால் செயல்படுத்தமுடியாமல் போய்விட்டது என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

விஸ்வரூபம் எடுக்கும் முருகதாஸ் வீடியோ விஷயம்...!



கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் முகநூலில் வேகமாக பரவிய விஷயம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இளம் நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சி.


இதை ஆரம்பத்தில் பெரிது படுத்தாமல் விட்ட முருகதாசுக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருகிறது. போகும் இடமெல்லாம் விடியோவில் இருப்பது உண்மையிலேயே நீங்கதானே?


என கேட்டு தெரிந்த முகங்கள் அனைத்தும் அவரை துரத்துகின்றனர்.


இதுவரை முருகதாஸ் இந்த வீடியோ பற்றி பெரிதாக எதுவும் கருத்து தெரிவிக்காமல் விட்டதால் சினிமா வட்டாரத்தில் முருகதாஸ் விஷயத்தை மூடிமறைக்க பார்க்கிறார்


என கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டனர்.முருகதாஸின் மனைவி கூடா அவரிடம் சரியாக பேசுவதில்லையாம்.


சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியால்,

எனவே போலியாக வீடியோ வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்போவதாக முருகதாஸ் முடிவெடுத்துள்ளார்.


ஏற்கனவே த்ரிஷா வீடியோ விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


தற்போது முருகதாஸ் வீடியோ விஷயம் விஸ்வரூபம் எடுக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் ரெடி...!



நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?


கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது.


ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்
கிடைத்துவிடும்.


மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.


''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில்,


மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.


இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.


செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.


தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.