Friday, 21 March 2014

நான் என்ன அடியாட்களை வெச்சு கட்ட பஞ்சாயத்தா நடத்துறேன் –டென்ஷனான சிவகார்த்திகேயன்



மான் கராத்தே பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றதற்காக மான் கராத்தே பட குழுவினர் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.


விழாவில் தயாரிப்பாளர் மதன், சிவகார்த்திகேயன், அனிருத், ஒளிபதிவாளர் சுகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


படத்தை பற்றி மட்டுமன்றி பத்திரிகையாளர்கள் மான் கராத்தே இசை வெளியீட்டின் போது “பவுன்சர்”களால் நடந்த குளறுபடிகளால் நடந்த பிரச்சனைகளை பற்றி சரமாரியாக கேள்விகனைகளை தொடுத்தனர்.


சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது, “நான் என்னங்க அடியாட்களை வெச்சு கட்ட பஞ்சாயத்தா நடத்துறேன், இன்னிக்கு கூட நான் தனியா தான் வந்துருக்கேன், படங்களுக்கு கூட நான் தனியாதான் போறேன். “பவுன்சர்”கள வேலைக்கு அமர்த்துனது நான் இல்லைங்க” என்றார்.


பின்பு பேசிய படத்தின் தயாரிப்பாளர், “நான் நல்லதா நினைச்சுதான் அவங்கள (“பவுன்சர்”கள) வரவெச்சேன், ஆனா நிலைமை வேற மாதிரி ஆகும்னு நான் நினைக்கல. இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துக்குறேன்.” என்றார்.

0 comments:

Post a Comment